Monday, September 21, 2009

கமலும் தமிழும்

மதுரையை தாய் வீடாக கொண்ட எழுத்தாளர்கள்,  இயக்குனர்கள்,  நடிகர்கள், கவிஞர்கள்,  இலக்கியவாதிகள், பாடலாசிரியர்கள் மற்றும் படைப்பாளிகள் என்று பலதரப் பட்ட துறைகளை சார்ந்த மக்கள், உலகப் புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மகாலில் உலக நாயகன் கமலைப் பற்றி, அவர் தன் திரைப்படத்தில் காட்டிய நடிப்பு, சமூக அக்கறை, வசனம், இசை மற்றும் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்தது நன்றாக தான் இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் இதை பார்க்கும் போது தான் மதுரையில் இருந்து பல பிரபலங்கள் இருப்பது தெரியவந்தது.. இப்பதிவை எழுதும் போது மனதில் தோன்றிய சில பிரபலங்கள்


எழுத்தாளர்கள் - எஸ். ராமகிருஷ்ணன், இந்துமதி, இரா. முருகன்,
இயக்குனர்கள் - சசி, சசிகுமார், சேரன், இராச. அழகப்பன்
நடிகர் - சண்முக ராஜா (விருமாண்டி - காவல் துறை அதிகாரி, இராமநாதபுரம்)
இலக்கியவாதிகள் - ஞானசம்பந்தன்
திரைப்பாடல் விமர்சகர் - ஷாஜி
பாடலாசிரியர் - கபிலன்
புத்தக ஆசிரியர் - மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பு)
நாடகத்துறை - பிரயளன்


No comments: