Wednesday, April 18, 2012

சூரிய மின்சக்தி


சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த முக்கிய விஷயம் சூரிய மின் சக்தி பயன்பாடு.  அ.தி.மு.க அரசு வரும்போது எல்லாம் ஏதாவது முக்கிய மக்கள் பிரச்சனை கையாளும். சென்ற முறை மழை நீர் சேமிப்பு திட்டம். இம்முறை சூரிய மின் சக்தி. நான் எழுதுகின்ற முறையை பார்த்து அ.தி.மு.க தொண்டன் என்று நினைத்து கொள்ள வேண்டாம். ஒரு லட்சம் மக்களை கொன்ற தி.மு.க அரசு தான், தமிழ் நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை, உலகதரத்தில் சாலைகளை போட்டு உள்ளது. என்ன தான் அவர்கள் கொள்ளை அடித்தாலும், நிச்சயமாக இந்த சாலைகளை போட்டு சென்றதில் அவர்களுக்கு ஒரு பேர் உண்டு. அதே போல் அ.தி.மு.க என்ன தான் பல கொடுமைகளை செய்து இருந்தாலும் மற்றும் செய்து கொண்டு இருந்தாலும், பாரட்ட பட வேண்டிய விஷயம், மழை நீர் சேமிப்பு திட்டம் மற்றும் வர போகின்ற சூரிய மின் சக்தி பயன்பாடு. இந்த மின் பயன்பாட்டில் நான் பார்த்த மற்றும் கேட்ட விஷயங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

தற்போது தமிழ்நாட்டில் மிகவும் பயன்பாட்டில் இருக்கும் சாதனம் என்றால் அது இன்வேர்டோர் என்று அழைக்கப்படும் ஒரு மின் சாதனம். பாட்டரி மூலம் வீட்டில் இருக்கும் அனைத்து மின்னணு பொருட்களை செயல் பட வைக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு, இந்த இன்வேர்டோர் சாதனம் வெறும் ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் தான் இருந்தது. அதே போல் சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் தான் மின் தொடர்பு இல்லாமல் இருக்கும். ஆனால் இன்று எட்டு மணி நேரம் முதல் பதினைந்து மணி நேரம் வரை, மின் இல்லாமல் இருக்கிறோம். அதனால் இந்த இன்வேர்டோரை அனைத்து மக்களும் வாங்க, அதன் விலை பதினாறு முதல் இருவது ஆயிரம் வரை சென்று விட்டது. இப்போது பணம் கொடுத்தல் மட்டும் தான், நான்கு நாட்களுக்கு பிறகு இன்வேர்டோர் கிடைக்கும். சரி இந்த இன்வேர்டோர் போட்டாலும், பிரச்சனை வேறு விதமாக வந்து விட்டது. இந்த இன்வேர்டோர் பயன்பாட்டிற்கு வர குறைந்தது நான்கு மணி நேரம் மின் இணைப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் இரண்டு மணி நேரம் தொடர்ந்து மின் இருப்பதே இல்லை. அதனால் இன்வேர்டோர் சார்ஜ் ஏறாமல் இருக்கிறது. இன்வேர்டோர் இருந்தும் பயன்படாமல் போகின்ற சூழ்நிலை தற்போது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு வலைதளத்தில்  இந்தியாவின் மின் உற்பத்தி பற்றி படிக்கும் போது, கண்டிப்பாக சில வருடங்களுக்கு பிறகு மின் கண்டிப்பாக பற்றாமல், மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சனை போல பெரியதாக வெடிக்கும் என்றும், அதனை போக்க சூரியமின் சக்தியே கையில் இருக்கும் ஒரே தீர்வு என்று கூறபட்டு இருந்தது. சூரிய மின் சக்தி என்பது அரசு கையில் மட்டுமே இருக்கும் என்று நம்பாமல், நாமே முன் நோக்கி எடுத்து வைக்க வேண்டும் என்றும் இருந்தது. அதனால் அப்போதே, நான் இந்த சூரிய மின் சக்தியை பற்றி விசாரிக்க தொடங்கினேன். இணைய தளத்தில், படித்த வரை வீட்டிற்கு சுமார் இரண்டு லட்சம் வரை செலவு ஆகும் என்றும், வெயில் காலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் இன்வேர்டோர் வீட்டின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பத்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. தேவை இல்லாமல் பத்தாயிரம் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்து போடாமல் இருக்கும் போது, இரண்டு லட்சம் என்ற உடன், பின் வாங்கி விட்டேன்.

இப்போது என் நண்பர்கள் குழுவில், தீடிர் என்று இந்த சூரிய மின் சக்தியை பற்றி பேச்சுகள் வரவே, மீண்டும் பழைய படி நான் விசாரிக்க தொடங்கினேன். சூரிய சக்தி வீட்டு உபயோகத்திற்கு செய்து தரும் ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, கீழ் கண்ட விஷயங்கள் தெரியவந்தன.

  • வீட்டின் பயன்பாட்டிற்கு சூரிய சக்தியை கொடுக்க, 1000w க்கு  நிறுவனம் மூன்று லட்சம் ஆகும் என்று கூறியது.
  • மின் விசிறி, மின் விளக்கு, கணிபொறி மற்றும் தொலை காட்சிக்கு மட்டுமே இந்த 1000w பயன்படும்
  • இதை தவிர வரியை தனியாக கட்ட வேண்டும் என்றும் அதை பொருத்துவதற்கு தனி செலவு என்றும் கூறியது
  • இந்த 1000w அரசு தரும் மானியம் ரூ. 81  ஆயிரம். மானிய பணத்தை முதலில் நாம் கையில் இருந்து போட வேண்டும். சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு, அப்பணம் நம் கைக்கு திரும்ப வரும்.

கூட்டி மற்றும் கழித்து பார்த்தல், நம் கையில் இருந்து சுமார் 2.5 லட்சத்தை போட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டம் வரும் போது சுமார் ரூபாய் பத்தாயிரம் தான் செலவு ஆனது. அதனால் பாமர மக்கள் எப்படியோ சமாளித்து விட்டனர். ஆனால் இப்போது 2.5 லட்சம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசு தரும் மானியம் கூட்டினாலும், பாமர மக்கள் கண்டிப்பாக இதை நிறுவ மாட்டார்கள் என்பது உறுதியாக சொல்லலாம். இப்போது தமிழக அரசு அறிவித்த விஷயத்தில், எப்படி பாமர மக்கள் இதை பயன் படும் படி செய்ய போகிறார்கள் என்பதை கூறவில்லை. மறுபடியும் இந்த மானியம் மக்களின் உழைப்பை உறுஞ்சும் பெரிய நிறுவனங்களுக்கே சென்று அடையும் நிலைமை.

Tuesday, April 17, 2012

வாழ்வா, சாவா?


2010ம் ஆண்டில் இருந்தே இந்தியாவிற்கு கேட்ட நேரம் போலும் (முக்கியமாக நமக்கும் தான்). வெளி நாட்டில் இருக்கும் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று விட்டு, தன் சொந்த நாட்டில் பல கோடி மக்களை கொல்ல முடியாமல், ஏழை மக்களை தற்கொலை செய்ய தூண்டும் அளவிற்கு மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்து,  நடுத்தர மக்களாக இருக்கும் அனைவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கும் அளவிற்கு கொண்டு சென்ற, காங்கிரஸ் ஆட்சியாளருக்கு முதலில் ஒரு கண்ணீர் வாழ்த்துக்கள். அது போக தமிழக அரசும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, தமிழக மக்களை எவ்வாறு கொல்கிறனர் என்பதன் சுருக்கம்.

  • பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முடிவை, பெட்ரோல் நிறுவனத்துக்கே கொடுத்து, அனைத்து பொருட்களின் விலையை மறைமுகமாக கூட்டி அனைத்து ஏழை மக்களையும் மேலும் ஏழை ஆக்கியது தான் காங்கிரஸ் அரசின் முதல் வெற்றி.
  • பண புழக்கத்தை கட்டு படுத்துவதாக கூறிக் கொண்டு RBI , 8 முறைக்கு மேல் வட்டி விகிதத்தை மாற்றியது. வீட்டு கடன் கொண்டு வாழும் ஒரு தனி நபரின் வருமானத்தில் ஐந்து முதல் எட்டு ஆயிரம் வரை அடி வாங்க வைத்தது.
  • சென்ற தமிழக அரசு செய்த நன்மையின் பலனாக, தமிழகத்தில் எந்த ஒரு ஊரிலும் நிலம் வாங்க முடியாத சூழ்நிலை. இதை தவிர தற்போதைய அரசு, நிலத்திர்க்கான மதிப்பை கூட்டி, மேலும் மக்களை வதக்கியது.
  • பால் விலை ஏற்றம்
  • பேருந்து கட்டண ஏற்றம்
  • இரண்டு மற்றும் நான்கு வாகனத்தின் இன்சூரன்ஸ் 45% ஏற்றியது.
  • மின் கட்டண ஏற்றம்
  • சேவை வரி 2 % ஏற்றம்
  • சுங்க வரி 2 % ஏற்றம்
  • கலால் வரி 2 % ஏற்றம்
  • சமையில் எரிபொருளின் மானிய தொகையை குறைத்தது
  • பொறியியல் படிப்பு ஏழை மாணவனுக்கு சொந்தம் இல்லை என்பதை காட்டும் விதமாக, அனைத்து கட்டணத்தையும் ஒரே விதமாக மாற்றியது.
  • இந்திய ஏழை நாடு எல்லா என்பதை உலகிற்கு மறைக்கும் நோக்கத்தோடு  தினமும் ரூ. 28 செலவு செய்தால், ஏழை என்ற வார்த்தை இல்லை என்ற அறிவு ஜீவிகளின் அறிக்கையை அப்படியே எடுத்து கொண்டது.
  • அணு பாதிப்பில் தமிழ்நாடே பூண்டோடு அழிந்தாலும் பரவா இல்லை என்று, இரஷ்ய நாட்டிற்கு அடிமையாக இருக்க விரும்பும் இந்த மானங்கெட்ட மத்திய அரசை இன்னுமும் நம்புகின்றோம்.
  • விலை உயர்வின் காரணமாக, சொல்லாமல் அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் தானாகவே பெரிய தொழில் நிறுவனத்தினர் ஏற்றி விட்டனர். இதில் விசேஷம் என்னவென்றால், பொருட்கள் வாங்கும் போது தான் அதனுடைய விலை ஏற்றத்தை அறிய முடிகிறது. மக்களுக்கும் மற்றும் அரசுக்கும் தெரியாமல் விலை ஏற்றி விடுவது தான் கொடுமை.
  • தற்போதைய அரசு செய்து கொண்டு இருக்கும் மற்றொரு மோசமான காரியம், பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது. அதை விட கொடுமையான விஷயம், இந்தியாவின் இயற்கை வளங்களை (எண்ணை மற்றும் நிலக்கரி) தனியாருக்கு வாரி கொடுத்து, இந்திய மக்களுக்கு நாமத்தை போடுகிறது.
வெளிநாட்டில் இருக்கும் அறிவுஜீவிகள் இந்தியா முன்னேறுகிறது, ஏன் விலைவாசி ஏறுகின்ற மாதிரி தான்  இந்திய மக்களின் சம்பளமும் ஏறுகிறது என்று விவாதத்தை முன் வைக்கின்றனர். இதற்கு முன் நானும் வெளிநாட்டில் (அமெரிக்கா) ஒன்றரை வருடங்கள் இருந்து, அங்கு உள்ள வாழ்வதற நிலையை அறிந்தவன் என்ற கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். இப்போது என்னால் இரண்டு நாடுகளின் வாழ்க்கை நிலை பற்றியும், இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட வாழ்க்கை நிலையையும் என்னால் நன்கு வித்தியாசம் காண முடிகிறது. வெளிநாட்டிற்கு செல்லும் முன், இந்தியாவில் வாழ்வது நான் மிக சுலபம் என்று நினைப்பு, அமெரிக்காவில் சென்ற உடன், அங்கு வாழும் வாழ்க்கை முறைக்கு அங்கு கொடுக்க படும் சம்பளம் சரி தான் என்ற தெரிந்தது.ஆனால் மீண்டும் இந்திய வந்த பிறகு, இந்தியாவில் வாழ்வது தான் கஷ்டம் என்ற முடிவுக்கு என்னால் வர முடிந்தது. காரணம் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மிக பெரிய மாற்றங்கள் என்று கூற முடியும்.  மிக எளிய முறையில் புரியும்படி சொல்வது என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண தோசையின் விலை ரூ.13 . ஆனால் இப்போது அதே தோசையின் விலை ரூ. 30 . சதவீத கணக்கில் 231%. அதே போல் இந்தியாவின் மிக முக்கிய ஆபரணமாக இருக்கும் தங்கத்தின் விலை ஐந்து வருடங்களுக்கு முன் ரூ.842 ஒரு கிராம். ஆனால் இன்று ரூ. 2668. சதவீத அடிப்படையில் 317%.

Item
Initial Price
Current Price
Amount Difference
No of years in difference
Change in % level
Dosai
13
30
17
2
131%
Gold Rate
842
2668
1826
5
245%
Coffee
12
35
23
3
192%

இதே போல் அனைத்து பொருட்களையும் வைத்து பார்த்தால், நமக்கு கிடைக்கும் சம்பள உயர்வு 8 முதல் 14% எவ்வாறு நமக்கு கட்டுபடி ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.  அதே போல் இந்தியாவில் பாதிக்கு பாதி நடுத்தர மக்கள் உள்ள நாடு. ஏழை மக்கள் 30 %.  ஒரே போது கூற்றை மக்கள் மத்தியில் வைக்கும் போது, அதை பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்.  அமெரிக்காவில் இருந்து கொண்டு, இந்திய முன்னேறுகிறது என்பதை எதோ ஒரு ஆங்கில பத்திரிகை படுத்து விட்டு பேச கூடாது. இந்தியாவில் இப்போது அடிப்படை வாழ்க்கை கூட வாழ முடிய சூழ்நிலை என்பதை அறிய இந்தியாவில் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.

Sunday, April 08, 2012

ஆறுபதாம் கல்யாணம் - என் பெற்றோருக்கு


வாழ்க்கையில் சில விஷயங்களை காண புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். அதில் நான் மிக முக்கியமாக கருதுவது, நமது பெற்றோரின் திருமணத்தை நாம் பார்ப்பது. பல பேருக்கு அதை பார்க்கும் தருணம் கிடைக்காமல் போய்விடும். ஒவ்வொரு தடைக்கும் பல காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. முடிவு என்று பார்த்தல், திருமணத்தை பார்க்காமல் போய் விடுவது தான். ஆனால் நானும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அந்த தருணத்தை கைவிட விரும்பவில்லை.
இன்று எனது பெற்றோரின் ஆறுபதாம் திருமணம். எனது வம்சத்தின் பூர்விகம் மதுரை என்பதாலும், அனைத்து சொந்தங்கள் அங்கே இருப்பதாலும், அங்கு வைத்தால் தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்த நான், அம்மாவின் விருப்பபடி திருக்கடையூரில் ஏற்பாடு செய்து விட்டேன். திருக்கடையூர் பற்றி அறிய இந்த சொடுக்கவும்.

இன்று எனது பெற்றோருக்கு ஆறுபதாம் திருகல்யாணம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு, வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகின்றேன். உங்களுடைய ஆசிர்வாதங்களும் அவர்களுக்கு கிடைக்கட்டும்.

Saturday, April 07, 2012

ஹேமந்த் - திருமண வாழ்த்துகள்

அமெரிக்காவில் கிடைத்த சில நட்பு வட்டாரங்களில் இவரும் ஒருவர். இவருடைய காதல் திருமணம், இன்று காலிகட், கேரளாவில் நடைபெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்