Showing posts with label சோழர். Show all posts
Showing posts with label சோழர். Show all posts

Saturday, October 17, 2009

சோழ வாரிசுகள்

சேர, சோழ மற்றும்  பாண்டிய  மன்னர்கள் தான் தென்இந்திய நாட்டை ஆண்டார்கள். ஆனால் சேர மற்றும் பாண்டிய மன்னர்களை பார்க்கும் போது வளமுடன், அதிக படையுடன் செல்வ செழிப்பு மற்றும் அதிகாரத்துடன் இருந்தது சோழ மன்னர்கள் தான் என்று கல்கியின் பொன்னியின் செல்வன் கூறுகிறது. பரகேசரி விஐயாலயன் தான் முதல் மாமன்னர். அவருக்கு பிறகு ராஜகேசரி ஆதித்த சோழன். அதற்கு பின் பரகேசரி பராந்தகன் சக்கரவர்த்தி. இவருக்கு மூன்று புதல்வர்கள் (அவர்களின் புதல்வர்கள் அவர்களுக்கு கீழே).  ராஜகேசரி கண்டராதித்த தேவர் ஆட்சி செய்தாலும், ஆட்சியை நடத்துபவர் ராஜகேசரி அரிஞ்சயன்.  ராஜகேசரி கண்டராதித்த தேவர் இறை பக்தியால்
ராஜகேசரி அரிஞ்சயன் அரியணை ஏறுகிறார். அரியணை ஏறிய பின் ராஜகேசரி கண்டராதித்த தேவருக்கு மதுராந்தகன் பிறக்கிறான். ராஜகேசரி கண்டராதித்த தேவர் மதுராந்தகனையும் இறை பக்தியில் வழி நடத்துகிறார். ராஜகேசரி அரிஞ்சயன் பிறகு ஆட்சி அவருடைய மகன் ஆதித்த கரிகாலனுக்கு என்று அறிவிக்க படுகிறது. ஆனால் ராஜகேசரி கண்டராதித்த தேவர் அவர்களின் பாதுகாவலர்கள் மதுராந்தகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சதியில் ஈடுபடுகின்றார். 

1) இராஜாதித்யன்
2) ராஜகேசரி கண்டராதித்த தேவர்.
                    $) மதுராந்தகன்
3) ராஜகேசரி அரிஞ்சயன்
                    #) ஆதித்த கரிகாலன்
                    #) அருள்மொழிவர்
                    #) குடந்தை பிராட்டி

இப்படிப் பட்ட சோழ மன்னர்களின் வாரிசு பகைமைகளை பார்த்தல், மகாபாரத போர் தான் நினைவுக்கு வருகிறது. யாருக்கு வெற்றி என்று வரலாற்றை தான் பார்க்க வேண்டும். ஏன் என்று காரணம் அறிய மகாபாரதத்தை புரட்டுங்கள்...