Showing posts with label பேருந்து. Show all posts
Showing posts with label பேருந்து. Show all posts

Thursday, January 14, 2010

மதுரை <--> சென்னை பயணம் - ஒரு அலசல்


சென்னைக்கு வந்த புதிதில் மதுரைக்கு அரசு பேருந்து மூலமாக சென்றால் குறைந்தது 13 முதல் 15 மணி நேரம் ஆகும். இரயிலில் சென்றால் மட்டும் தான் 9 மணி நேரத்தில் சென்று அடைய முடியும்.. அந்த லட்சணத்தில் ரோடுகள் இருந்தது.. ஆனால் இன்று நிலைமையோ வேறு...சென்னையில் இருந்து புறப்பட்டால் முதலில் வருவது பேருந்து தான்.. நம்ம தான் அடிக்கடி மதுரைக்கு வர்றோமே.. எது சூப்பர்ன்னு பார்த்த...

மதுரை <--> சென்னை - அரசு பேருந்து – 9 மணி நேரம்..
மதுரை <--> சென்னை - தனியார் பேருந்து – 8 மணி நேரம்..
சென்னை --> திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி அல்லது கன்னியாக்குமரி  அல்லது தென்காசி (வழி மதுரை) - தனியார் பேருந்து 6.45 மணி நேரம்...
சென்னை --> மதுரை - இரயில் 9:30 மணி நேரம்...

இராமேஸ்வரம் - சென்னை - இரயில் (வழி மானமதுரை) -
                                    
மதுரை - மானமதுரை 1 மணி நேரம்
                                    
மானமதுரை - சென்னை – 10:30 மணி நேரம்
மதுரை --> சென்னை - இரயில் 9 மணி நேரம்...

மேற்ப்படி பார்த்தல் இரயில் பயணம் மட்டுமே அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக தெரிகிறது...இன்று மட்டும் பாண்டியன் இரயில் மதுரைக்கு 10 மணி நேரத்தில் வந்து உள்ளது. பேருந்துகள் திடீர் என்று எப்படி இவ்வளவு வேகமாக வந்து சேருகிறது என்று பார்த்தல், தங்க நாற்சாலை  காரணம்.. ஏதாவது காரணத்தை சொல்லி இரயில்வே நிர்வாகம் மக்களை ஏமாற்றுகிறது. இருந்தாலும் மக்கள் இரயில் பயணத்தை நாடுவது பயண சீட்டின் செலவு தான் காரணம்... இரயிலில் மதுரைக்கு ரூ. 232 மட்டுமே.. ஆனால் பேருந்தில் நடந்துனர் சொல்வது தான் கட்டணம்.. உதாரணமாக நேற்று இரவு சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் பேருந்தின் கட்டணம் ரூ. 1200  (கேட்டால் பொங்கல் என்று காரணம் சொல்வார்கள்).. மற்ற நேரத்தில் குறைந்தது ரூ.275 முதல் அதிக பட்சமாக ரூ.650. அரசு என்ன தான் புது புது சட்டம் போட்டாலும் அது எல்லாம் இங்கு எடுபடாது...  இதற்கு தான் பொங்கல், தீபாவளி என்றாலே பயண சீட்டு எடுக்க அதிகாலை 3 மணிக்கே சென்று பதிவு அலுவகத்தில் அமர்ந்து கொள்வது...

 
பாண்டியன் இரயில் சில காலத்திற்கு முன் வி.ஐ.பி வண்டி.. பாண்டியன் வருவது என்றால் அனைத்து இரயில்களும் வழி விட்டு விட்டு, இதற்கு பிறகு தான் செல்லும்.. ஆனால் இன்றோ பாண்டியனின் மதிப்பே போய்விட்டது.. சென்னை - மதுரை மட்டும் குறைந்தது 9:30 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது... காரணம் திருநெல்வேலி/தூத்துக்குடி/கன்னியாக்குமரி/தென்காசி என்று அனைத்து தென் மாவட்டங்களுக்கும் செல்ல கூடிய வண்டிகளை முன்னால் அனுப்பிவைத்து விட்டு தான் இந்த வண்டி புறப்படுகிறது. இதன் பின்னால் எந்த வண்டியும் இல்லாததால் மெதுவாக வர தொடக்கி விட்டது. என்ன தான் இரயில் மெதுவாக வந்தாலும் பயண சீட்டின் காரணமாக மக்கள் விரும்புவது இரயில் மட்டுமே..என்ன தான் மக்களுக்கு தார் ரோடு/தங்க நாற்சாலை போட்டு கொடுத்தாலும், பயண சீட்டு பேருந்துகளில் குறைக்காமல் இருந்தால் கஷ்டம் தான்...

Sunday, August 23, 2009

சின்ன குமுறல்

மதுரை என்ற அழகிய மற்றும் பாரம்பரிய ஊரில் கூட என்ற இந்த ஒழுங்கு முறை... கேட்டால் மதுரை முன்னேறுகிறது என்ற வார்த்தை வேறு. சாதரண மக்கள் இதனால் எவ்வளவு கஷ்ட படுகின்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை.. உதாரணம்

மதுரையில் குளிர் சாதன மற்றும் சொகுசு பேருந்து
திரைஅரங்கில் முன்பதிவு முறை மற்றும் சோதனை செய்து உள்ளே அனுப்புவது
தலைகவசம் அணிய சொல்வது
பொழுதுபோக்கு முறைகளில் புது வழிமுறை


இப்படி பல புது வழிமுறைகள் ...சாதரண மக்களில் ஒருவன் என்ற முறையில் என் மன குமுறல்....

Sunday, June 28, 2009

பெங்களூர்/மோசமான போக்குவரத்துக் கழகம்

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் பெங்களூர் ஆகிய போக்குவரத்துக் கழகத்தை பார்த்து, சென்னை பேருந்துகள் தான் மிக மிக மட்டம் என்று நினைத்து இருந்தேன். ஒக்கனேகல் சனிக்கிழமை சென்றதால், அடுத்த நாளை பெங்களூர் நகரத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். பெங்களூர் பேருந்தும், நடத்துனர் பழக்கமும் நன்றாக இருக்கும் என்று நினைத்து பேருந்ததில் பயணத்தை தொடங்கினோம்.

நாங்கள் ஏறிய நிறுத்தமும், இறங்க வேண்டிய நிறுத்தமும் வித்தியாசம் இரண்டு தான். நான் பணத்தை கொடுத்து பயன் சீட்டை கேட்டேன். பணத்தை எடுத்து கொண்டு சீட்டை தரவில்லை. இரண்டாவது முறை கேட்டேன், நடத்துனர் என்னை முறைத்து கொண்டே பேருந்தின் பின்புறத்திற்கு சென்றார். எனக்கு என்றுமே புரியவில்லை. என்னுடன் வந்த பெங்களூரில் வசிக்கும் நண்பனிடத்தில் விசாரித்தேன். அவர் சென்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியையும், ஆச்சிரியத்தையும் கொடுத்தது.


இறங்க வேண்டிய இடம் இரண்டு, மூன்று நிறுத்தங்கள் இருந்தால் அதற்குரிய பயண சீட்டிற்கு இருக்கும் தொகையை விட ரூபாய் ஒன்று/ இரண்டு குறைவாக பணத்தை பெற்றுக் கொண்டு பயண சீட்டை தராமல் சென்று விடுவது. ஆக மொத்தத்தில் அப்பணம் அந்த நடத்துனருக்கே போகும். "எப்படி எல்லாம் கொள்ள அடிக்கிறாங்க அப்ப" என்று பேரு மூச்சு விட்டு கொண்டே எனக்கும், இன்னொரு நண்பருக்கும் கோபம் வந்து விட்டது.

இறக்கும் முன் பயண சீட்டை கேட்டோம். நடத்துனரே சீட்டு தேவை இல்லை என்று கூறியும் நாங்கள் மீண்டும் பயண சீட்டை கேட்டோம். நடத்துனர் எங்கள் மீது கோபம் கொண்டு எங்களுடைய உண்மையான பயண சீட்டு ரூ.5 பதிலாக ரூ.7 சீட்டை கொடுத்தார். இப்படி பட்ட நடத்துனருக்கு பணத்தை கொடுப்பதை விட அரசாங்கத்திற்கு கொடுக்கலாம் என்று நினைத்து சீட்டை வாங்கி கொண்டோம்.

இரண்டு/ மூன்று இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் வழியில் வேண்டாம் பிரச்சினை என்று நினைத்து விட்டு ஆட்டோவில் வந்து சேர்ந்தோம். இதை பார்க்கும் போது சென்னையே பரவ இல்லை என்ற எண்ணம் வந்து விடும் போல் இருந்தது.

நடத்துனர்கள் செய்யும் இப்படிப் பட்ட மிக கேவலமான/ மோசமான விஷயத்தை கர்நாடக அரசு சரி செய்ய வில்லை சென்றால் சுற்றுல பயணிகளால் வரும் வருமானம் குறையும் என்பதில் ஐயம் இல்லை. அதே போல் அரசுக்கு கூடிய விரைவில் கேட்ட பெயர் வரும் என்பதிலும் ஐயம் இல்லை.