Saturday, February 26, 2011

திரைகலவைகள்


No One Killed Jessica - ஹிந்தி


இந்த காலத்தில் நியாயத்தை பெற, எவ்வளவு கஷ்டபட வேண்டி இருக்கும் என்பதற்கு சின்ன உதாரணம் தான் இந்த இப்படம். ஒரு அரசியல்வாதியின் மகன், ஒரு பார்ட்டியில் பல பேருக்கு தெரியும் வகையில் சாதாரண நடுத்துற குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கொலை செய்கிறான். காவல் துறை தன் கடமையை செய்ய, தன் அரசியல் பலம் கொண்டு எல்லா சாட்சிகளையும் தன் கைக்குள் போட்டு வெளியில் வருகிறான்.  வித்யாபாலன், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி. அவள் எப்படியாவது தங்கைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் பல முறை சாட்சிகளின் வீட்டிற்கு சென்றும், நீதி மன்றம் ஏறியும், காவல் துறை அலுவலகம் சென்றும் நொந்து நூலகிறார். நீதி மன்றமும் சுமார் ஆறு வருடத்துக்கு மேல் இந்த கொலையை விசாரித்து, தன் சேவையை செய்கிறது. ராணி முகர்ஜி, தொலைகாட்சியில் பணி புரியும் ஒரு பெண். இந்த கொலை வழக்கை கையில் எடுத்து, மக்கள் முன் சாட்சிகளின் நிலைமையை விளக்கி மறு படியும் இந்த கொலை வழக்கை நீதி மன்றத்துக்கு கொண்டு செல்கிறார். இறந்து போன பெண்ணுக்கு நீதி கிடைத்ததா என்பதே முடிவு. 


சில சமயத்தில் வடஇந்தியாவிலும் மசாலா இல்லாமல் மற்றும் ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி நல்ல படங்கள் வெளிவருது உண்டு. அந்த மாதிரி படங்களில் இதுவும் ஒன்று. நீதி மன்றம் போவதும், சாட்சிகளின் அலச்சியமும் என்று வித்யாபலன், ஒரு சாதாரண பெண்ணை கண் முன்னால் கொண்டு வந்து இருப்பார். அதே போல் தொலைக்காட்சி என்பது எவ்வளவு பெரிய/முக்கிய சாதனம் என்பதை இப்படத்தை கண்டால் தெரியும். அதுவும் ராணி முகர்ஜி அந்த கதாப்பத்திரத்தை உணர்ந்து நடித்ஹ்டு இருப்பார். இந்த படத்திற்கு இன்னொரு முக்கிய பலம் இசை. கண்டிப்பாக இந்த படத்தை ஒரு முறை இந்திய மக்கள் காணலாம்.

The Mechanic 2011 - ஆங்கிலம்


பணத்தை வாங்கிக் கொண்டு கொலை செய்யும் ஒரு நபரின் கதை, அதுவும் மேல்நாட்டு பாணியில். கடைசியில் பணத்தை கொடுக்கும் நபரே, இன்னொரு ஆளை வைத்து நாயகனை கொலை செய்ய சொல்ல, அதை தெரிந்து பணத்தை கொடுக்கும் நபரை நாயகன் கொள்கிறார். இதற்கு நடுவில் தெரிந்த ஆளை துணைக்கு வைத்துக் கொள்ள, அவனால் ஏற்படும் பிரச்சனை தனி. 

பொழுது போகாமல் இருக்கும் நேரத்தில் அதிரடி சண்டையுடன் ஒரு ஆங்கில படத்தை காண, இப்படத்தை எடுக்கலாம்.

Mirapakaya - தெலுகு


காவல்துறை அதிகாரி, கொலையாளியை கண்டுபிடிக்க அவனின் மகள் படிக்கும் கல்லூரிக்கு எதாவது ஒரு விதத்தில் உள்ளே நுழைந்து மகளுடன் பழகி, கொலையாளியை கண்டு பிடிப்பது தான் கதை. இதே கதையை நம்ம தல அஜித் ஏகன் படத்தில், தன் வடிவத்திற்கு ஏற்றவாறு கல்லூரியில் படிக்கும் மாணவனாக சேர்ந்து அப்பெண்ணுடன் பழகி, கொலையாளியை கண்டு பிடிப்பார். அதே நேரத்தில் மசாலாவுக்காக கல்லூரியில் ஒரு ஆசிரியர் உடன் காதல் மற்றும் பாடல். இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது.


இதே கதையை இந்த வருடத்தில் நம்ம தெலுகு மசாலா ஹீரோ ரவிதேஜா செய்தால் எப்படி இருக்கும் அது தான் இப்படத்தின் கதை. இந்த கதையில் ஒரு ஹிந்தி ஆசிரியராக சேர்ந்து, மாணவி ஒருத்தியை காதலித்துக் கொண்டே, கொலையாளின் மகளை தன் பக்கம் திரும்ப வைத்து கொலைகாரனை கண்டு பிடிக்கிறார். அக்மார்க் முத்திரை கொண்ட வழக்கமான தெலுகு படம். ரவி தேஜா படங்கள் எப்போதும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதே போல் இப்படம் பொழுதுபோக்கு படம் தான் தவிர வேறு ஒன்றும் இல்லை.

Thursday, February 24, 2011

ரசித்தது - பட்டிமன்ற காட்சி

இப்படியும் யோசிக்க முடியும் என்ற உதரணத்துக்கு கவிஞர் இனியவன். அவரின் பேச்சுக்கும் மற்றும் கற்பனை திறனுக்கும் வாழ்த்துக்கள்



Wednesday, February 23, 2011

திரைவிமர்சனம் - பயணம்



மனித உறவுகளை மற்றும் எண்ணங்களை மிக அழகாக காட்டி, பனி பிரதேசத்தில் இருக்கும் பூந்தோட்டத்தில் உலவும் உணர்வை கொடுத்த இயக்குனர் ராதாமோகன் அவர்களிடம் இருந்து இந்த மாதிரியான கதைகளத்துடன் சற்றும் எதிர் பார்க்கவில்லை. வித்தியாசமான முயற்சி எடுத்த அவருக்கு பாராட்டுக்கள்.



சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படும் விமானத்தில் தீவிரவாதிகள் இருக்க, திருப்பதியில் தரையிருக்கபடுகிறது. அதில் உள்ள பயணிகள் எப்படி தப்புகின்றனர் என்பதே கதை. ஏற்கனவே பல விமான கடத்தல் சம்பந்தபட்ட திரைப்படங்களை பார்த்து இருப்பதால், இப்படத்தில் புதிதாக என்ன இருக்க போகிறது என்ற எண்ணம் வர தான் செய்கிறது. அதையும் மீறி ரசிக்கும் படி அமைத்தது தான் இயக்குனரின் வெற்றி.  பயணிகளை காப்பற்ற பணியாற்றும் அதிகாரிகள், கமாண்டோ அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கை துறையினர் என்று அவர்களின் வேலைகளை நம் கண் முன்னால் காட்டுகிறார். இந்த மாதிரியான விஷயத்தில் நாம் செய்ய கூடிய சின்ன சின்ன தவறுகளால், எவ்வளவு விபரீதம் நேர கூடும் என்பதற்கு பத்திரிக்கை துறையினரின் விஷயமே போதும். அதே போல் படத்தில் உள்ள அனைத்தும் கதாபாத்திரங்களும் (பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், ரிஷி, சானகான், குமரவேல், பிருத்திவி ராஜ் மற்றும் நடிகரின் விசிறியாக வரும் நபர்) எதாவது ஒருவிதத்தில் நம் மனதில் நின்று விடுகிறது. நடிகர்கள் இப்படத்தின் பிருத்திவி ராஜ் அவர்களின் நிலைமையை பார்த்து, அடக்கி கொள்ள வேண்டும். 


நாகர்ஜுன் மனிதரை நம்பவே முடியவில்லை. சமீபத்தில் அவர் தன்னுடைய 51 வது பிறந்தநாளை கொண்டாடினர் என்று கேள்வி பட்டேன். இந்த படத்தை பார்த்தபிறகு அது உண்மை தான என்ற கேள்வி என் மனதில். சிறிது நேரமே பேசினாலும் பன்கதாபத்திர நடிகர் பிரகாஷ் ராஜ் நச். எப்போதும் போல் பிரம்மானந்தம் கலக்கல் தான். 


மீண்டும் நல்ல படத்தை கொடுத்த ராதாமோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Tuesday, February 22, 2011

எச்சரிக்கை பற்றி - நான் பார்த்த நிகழ்வுகள்


அமெரிக்காவில் எச்சரிக்கை உணர்வு என்பது அதிகம். அது எந்த விஷயம் ஆனாலும் சரி. இவ்வளவு எச்சரிக்கை அளவை யார் ஏற்படுத்தினார்கள் என்பதே ஒரு கேள்விகுறி.

இந்திய நண்பர் ஒருவருக்கு உடல்நலம் சரி இல்லாமல் போக, அவர் கொண்டு வந்த மருந்துகள் பயன்படுத்தியும் குணம் ஆகாமல் இங்கு உள்ள மருந்தை வாங்கி வர தன் நண்பர்களிடம் சொல்ல, அவர்கள் மருத்துவம் என்றால் இங்கே என்ன என்ற முறையை விளக்கினர்.  மருந்து கடைக்கு சென்றால், மருத்துவரின் சீட்டு இல்லாமல், மருந்தை தர மாட்டார்கள். அதனால் மருத்துவரை காண்பது தவிர வேற வழி இல்லை. இங்கே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்க்க முதலில் சொல்லி ஆக வேண்டும். அவரின் அனுமதி இன்றி உடனே சென்று நாம் நோய் காரணமாக பார்க்க முடியாது. அவரின் அனுமதி கிடைக்க இரண்டு நாள் முதல் இரண்டு வாரம் வரை ஆகும். அதற்குள் நோய்வாய் பட்டவர் என்ன ஆவார் என்பது ஒரு கேள்வி. நோய் அதிகம் ஆகி விட்டால், மருத்துவரை உடனே சென்று காண மூன்று மடங்கு வரை செலவு செய்ய வேண்டும். இதுவே இப்படி இருக்க, மருத்துவர் நம் நோய் பற்றி அங்கு அங்குலமாய் அலசி, இது தான் நோய் என்று நம்மிடம் சொல்லி மற்ற எல்லா விஷயத்துக்கும் நம்மிடம் உத்தரவு கேட்பார். ஆம் அவர் நமக்கு சொல்லாமல் கொடுத்த மருந்து, நம்மை எதாவது செய்து விட்டால் உடனே இங்கே நீதிதுறைக்கு சென்று அவர் மேல் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வாய்ப்பு அதிகம் என்பதால் எதையும் நம்மிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்கள். ஆனால் நம்மக்கோ இங்கு நோயால் உயிர் சென்று கொண்டு இருக்கும். ஒரு வழியாக மருத்துவரை பார்த்து, அவர் இது தான் நோய் என்று கண்டு பிடித்து, மருந்தை உடனே கையில் தர மாட்டார். மருந்து சீட்டை மருந்து கடைக்கே அவரே அனுப்பி விடுவார். நமக்கு வேண்டும் என்றால், கேட்டு ஒரு நகல் அவரிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். சரி மருந்தை சாப்பிட்டு சரி படுத்தி கொள்ளலாம் என்று, மருந்து கடைக்கு சென்று மருந்து கேட்டால் உடனே கிடைக்காது. மருந்து சீட்டு இப்போது தான் வந்து உள்ளது. மருந்து நமக்கு கிடைக்க ஒரு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரை ஆகும். மருந்தை கடையில் நமக்காக எடுத்து வைத்து விட்டால், நமக்கு மருந்து கடையில் இருந்தே ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதற்கு பிறகு தான் நாம் அங்கு சென்று மருந்தை வாங்கி கொள்ள வேண்டும். இதனுள் இன்னொரு விஷயம் இருக்கிறது. மருந்து தீர்ந்து விட்டால், உடனே சென்று திரும்ப வாங்க முடியாது. ஏனெனில் அந்த மருந்து சீட்டில், எத்தனை முறை நாம் மருந்தை வாங்கி கொள்ளலாம் என்று எழுதி இருக்கும். மருந்து தீர்ந்து போய் விட்டால், மீண்டும் மருத்துவரை சென்று காண வேண்டும் என்பது தலை எழுத்து. இதை எல்லாம் கேட்ட நம்முடைய ஆள், மீண்டும் இந்திய மருந்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.

நானும் நேரடியாக மருத்துவ துறை அனுபவ பட்டேன் என்பது இன்னொரு விஷயம். நானும் மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்க ஆறு மணி நேரம் காத்து இருந்தேன்.

அலுவகத்தில் புதிதாக வந்த நபர் வெளியே செல்வதற்கு அழுத்தும் பட்டன்னுக்கு பதிலாக, தீ எச்சரிக்கை பட்டனை அழுத்த அவ்வளவு தான் தீயின் முன் எச்சரிக்கை சத்தம் வர ஆரம்பித்தது. அலுவகத்தில் இருந்த அனைவரும் பதறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வர, நடந்த நிலைமை விளக்கியும் சத்தம் அதிகம் காரணமாக யாரும் உள்ளே அமர முடியாத சூழ்நிலை. நான்கு நிமிடத்தில் இரண்டு தீ அணைப்பு வாகனங்கள் வர, அதில் இருந்த வீரர்கள் அனைவரும் பெரிய தண்ணீர் குழாயுடன் ஓடி வந்தனர். அவர்களுடன் நிலைமையை எடுத்து கூறி சத்தத்தை நிறுத்துவதற்குள் மூன்றாவது தீ அணைப்பு வண்டி ஒரு புறம், மருத்துவ முதல் உதவி வண்டி ஒரு புறம், காவல் துறை அதிகாரிகளின் வண்டி என்று ஒரு புறம் என்று அலுவகத்தை முழுவதும் சுற்றி வளைத்து விட்டனர். சாதாரண பொய் எச்சரிக்கை மணிக்கே இந்த மதிப்பு.

சில சமயங்களில் இந்த மாதிரியான விஷயங்களை பார்க்கும் போது நமக்கு "இது ஓவரா தெரியல" என்று நினைத்தாலும், பல நல்ல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளது என்பது தான் உண்மை. மருத்தவ முறை கொடுமையானதாக இருந்தாலும், மருந்து கடையில் சென்று நாமே வாங்கி சாப்பிடுகின்ற மருந்து பல சமயங்களில் நமக்கு எமனாக இருப்பதை தடுக்கிறது. அதே போல் இங்கு போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்து என்ற வார்த்தைகளே கிடையாது.

தீ அணைப்பு துறை நம்மூரில் வேகமாக இருந்தாலும், நான் இங்கு கண்ட அளவு இல்லை. தீ அணைப்பு துறைக்கு இங்கு இருந்து யாரும் அழைக்க வில்லை. அவர்களே தெரிந்து கொண்டு வந்து விட்டனர். அதோடு மற்ற அனைத்து துறைகளில் இருந்து தானாகவே வந்து விட்டனர்.  பாரட்ட பட வேண்டிய விஷயம் தான். இதே நிலைமை நம்மூரில் வந்தால் மகிழ்ச்சி தான்

அனுபவங்கள் தொடரும்.

Monday, February 21, 2011

திருமண வாழ்த்துக்கள் - பிரபு


எனது வடபழனி ஆர்.ஆர்.ஆர். இல்ல நண்பர்/சகா திரு. பிரபு அவர்களின் திருமணம் இன்று திருச்சி அருகில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய மனமார்ந்த திருமண வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசியா வாசுதேவன் - அஞ்சலி

மிக சிறந்த பாடகரும், சிறந்த குணசித்திர நடிகருமான உயர்திரு. மலேசியா வாசுதேவனுக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.

Sunday, February 20, 2011

திரைவிமர்சனம் - யுத்தம் செய்


அஞ்சாதே படத்தில் பார்த்த ஒரு நல்ல இயக்குனரை, இந்த படத்தில் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் யுத்தம் செய் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.


மீண்டும் ஒரு காவல்துறை திரைப்படம். பெண்கள் வரிசையாக காணாமல் போகின்றனர். வேறு சிலர் வரிசையாக கொலையும் செய்யபட்டு பொது மக்கள் இருக்கும் இடத்தில் கைகள் மட்டும் கிடைக்கிறது. இந்த கொலையை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி அதிகாரியான சேரன் நியமிக்க படுகிறார். சேரனின் தங்கையும் காணாமல் போய் இருப்பார். நாயகன் கொலையாளிகளை கண்டுபிடித்தார, கொலைகளின் காரணம் என்ன என்பதை மிஷ்கினின் வடிவத்தில் இப்படம். காவல்துறை அதிகாரிகளின் படங்கள் போதும் என்ற அளவு வந்து இருந்தாலும், சாதாரணமாக அதிகாரிகள் எப்படி ஒரு வழக்கை விசாரிப்பார்கள் மற்றும் அவர்களின் உண்மையான நிறத்தை இங்கே காணலாம். சேரன் கையில் துப்பாக்கிய என்று யோசித்தே தான், ஆரம்பித்தேன். ஆனால் சேரன் பல இடங்களில் கதையின் நாயகனாக நின்று விடுகிறார்.

இப்படத்திலும் கால்கள் மட்டும் உலவும் காட்சி, மனதில் நிற்கும் ஒரு மெல்லிய பின்னோட்ட இசை, ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதம், ஒரு காட்சியை காட்டி அதன் விளைவுகளை நம்மை யோசிக்க வைக்கின்ற நிகழ்வுகள் என்று எங்கும் மிஷ்கின் உலா வருகிறார்.

ஒரு சில வயதான ஆண்மக்கள் அதுவும் வசதி படைத்தவர்கள் எப்படி கேடுகேட்டவர்கள் என்பதை, இப்படத்தை கண்டாலே புரியும். இப்படத்தை காணும் போதே, நாம் அவர்களை கொன்றால் என்ன எண்ணம் கூட சிலருக்கு வரதான் செய்யும். இப்படியும் சில விலங்குகள் நம் அருகில் இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.

மிஷ்கின் - சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் நீருபித்தார்

Saturday, February 19, 2011

திரைகலவைகள்


127 Hours - ஆங்கிலம்



இரண்டு பாறைகளுக்கு இடையே விழும் சின்ன பாறையில் கை மாட்டி கொள்ள, அதில் இருந்து எப்படி நாயகன் விடு படுகிறான் என்பதே கதை. இது ஒரு உண்மை கதை.  ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை, அவனது தன்னம்பிக்கை, அவனது முயற்சி என்று பலவிதமான மனிதனின் வெளிபாடுகளை இப்படத்தில் காணமுடியும்.  வாழ்வா அல்லது சாவ என்று தெரியாமல் இருக்கும் போது, செய்த தவறுகள் மற்றும் மகிழ்ச்சியான நினைவுகள் என்று முதல் முதலாக வாழ்க்கையை திரும்பி பார்க்கின்ற நேரம். அது எப்படி இருக்கும் என்பதை இப்படத்தை கண்டால் உணர முடியும். பொறுமையாக கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான்.


இப்படம் எடுக்கப்பட்ட இடம் அமெரிக்காவின் தென் மேற்கில் அமைந்து உள்ள  Moab, Utah.  தென் மேற்கு மாநிலங்கள் முழுவதும் இதே அமைப்பு உடையவை. எங்கு பார்த்தாலும் ஒரே வெயிலில் காய்ந்து போன இடங்கள். கீழே உள்ள படத்தை கண்டால் தெரியும். நானும் இதே போன்ற இடங்களின் வழியாக ஒரு முறை சென்று உள்ளேன் என்பது சிறு சந்தோசம்.

Ragada - தெலுகு


நாகர்ஜுன் படம் ஆச்சே, பாக்கலாம் என்று நினைத்து ஆரம்பித்தால் படம் ஓட ஓட தான் என் நினைவுக்கு அது ஒரு தெலுகு படம் என்று தெரிகிறது. 100% தெலுகு மசாலா படம். ஒரே நேரத்தில் 20 பேரை அடிப்பது, 3 குத்து பாட்டு. கண்ண கட்டிரிச்சு. படத்தில் ட்விஸ்ட் 
வேற வைத்து கொன்று விட்டார்கள்.


No String Attached - ஆங்கிலம்

கல்யாணமே செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்க்கை வாழ முடியும் என்ற கொள்கையில் உடைய ஒரு பெண்ணின் காதல் கதை.
மொக்கை படமாக இருந்தாலும், முதல் பாதி, நகைச்சுவையுடன் செல்லும். அது மட்டும் தான் ஆறுதல் தரும் விஷயம்.

The Eagle (2011) – ஆங்கிலம்


வழக்கமான ரோமானிய படைகளின் படம். ரோமானிய படைதளபதியாக இருக்கும் நாயகனின் தந்தை, வடக்கு பகுதியில் தனது படையின் சென்றவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. அதே போல் அவர் கையில் இருந்த சின்னமும் காணமால் போய் விடுகிறது. தந்தையின் பெயரை மீட்க, நாயகன் அதே தேடி சென்று, சின்னத்தை கண்டு பிடித்தார என்பதே கதை. படம் எல்லாமே நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் படத்திற்கு சென்றது பெரிய தவறு தான் என்று பாதி படத்தில் தான் தெரிந்தது. 

Monday, February 07, 2011

திருமண வாழ்த்துக்கள் - விஷ்ணுகுமார்

எனது தொழில்நூட்ப கல்லூரி நண்பர் திரு. விஷ்ணுகுமாரின் திருமணம் இன்று மதுரையில் நடைப்பெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, February 05, 2011

பனியில் உலகம்


என் உலகம் பனியில், அதுவும் என் காலடியில்


Thursday, February 03, 2011

மறக்க முடியா அனுபவம்


திங்கள் அன்று நண்பர்கள் அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி, காரணம் அடுத்த நாள் அலுவகத்துக்கு செல்ல தேவை இல்லை. ஆம் செவ்வாய் சென்று பனி புயல். ஏற்கனவே நான் பனி மழையை பார்த்து இருந்தாலும், புயலை பார்த்தது இல்லை. அதனால் புயலை பார்க்க எனக்கு ஓர் ஆர்வம். திங்கள் இரவு முதல் என்று கணித்து இருந்தார்கள். திங்கள் இரவு உறங்கினாலும், அவ்வபோது எழுத்து வெளியில் பார்ப்பது. ஏதாவது பனியின் அகோரம் இருக்கிறதா என்று. ஆனால் ஒன்றும் இல்லை.

செவ்வாய் கிழமை காலையில் ஏழு மணிக்கு பார்த்தல் லேசாக தான் பனி மழை பெய்து இருந்தது. சரி புயல் வேறு பக்கம் சென்று விட்டது என்று நினைத்து, வேலையை பார்க்க தொடங்கினோம். எட்டு மணி ஆக யாரும் எதிர் பாரவகையில் புயல் ஆரம்பம் ஆனது. மதிய வேளையில் கண்ணாடி வழியாக வெளியில் பார்த்தால், எங்கும் வெள்ளை நிறம். வீட்டில் இருந்ததால் எங்களுக்கு அதனுடைய வேகம் தெரியவில்லை. நான் மட்டும் கார் பார்கிங் சென்று, கதவை திறந்தால் சற்றும் நான் நினைக்காத பனி புயல் என் மீது. (தென்) இந்தியாவில் கிடைக்காத ஒரு அனுபவம்.

செவ்வாய் இரவு புயல் நின்றதாக அறிந்து கொண்டோம். இருந்தாலும் புதன் கிழமையும் என்னால் (என் இடத்தில் இருக்கும் யாராலும்) அலுவலகம் செல்ல முடியாது. புதன் கிழமையும் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலைமை. இரண்டாம் நாள் முழுவதுமாக வீட்டில் இருக்க முடியாத காரணத்தால், மாலை பொழுதில் வெளியில் செல்ல தயாரானோம். எனக்கு அது வரை பனியின் அளவு தெரியாது. கார் பார்கிங் கதவை திறந்தால், பத்து அங்குலத்துக்கும் மேல் பனி இருந்ததை பார்த்து அதிர்ந்து போனோம் என்றால் மிகை அல்ல.
கதவை திறந்த உடன், அந்த குளிர் காற்று படும் இடம் எங்கும் சிவந்து, இரத்தம் வெளியில் தெரியும் படி மாறுகிறது. அக்காற்று தோலை கிழிக்கும் படி இருந்தது. இந்தியாவில் இருப்பதாக நினைத்து, அந்த பனியிலும் வெளியில் சென்று கூடாக ஒரு காபி. காபின் சூடு சொர்க்கத்தை காட்டியது என்பது நிதர்சனம்.

அமெரிக்காவில் கிடைத்த அனுபவத்தில் மறக்க முடியாததில் மிக முக்கியமான ஒன்று.

Wednesday, February 02, 2011

Frozen – 2010 – English


திங்கள் அன்று மாலை நேரம், என் இடத்தில் இரவில் இருந்து பனி புயல் ஆரம்பம் என்று தெரிந்து விட்டதால் அனைவரும் சீக்கிரமே வீட்டிற்கு வந்து அடைக்கலம் ஆனோம். இப்போது பொழுது போக வேண்டுமே என்று யோசனையில் இருந்த போது நண்பர் அண்ணாமலை சொன்ன படம் நினைவுக்கு வந்தது. அது தான் Frozen


டன், ஜோ மற்றும் டனின் காதலி பார்கர் அனைவரும் பனி சறுக்கு விளையாடும் இடத்தில் தங்கி, விடுமுறையை கழிக்க ஒரு இடத்திற்கு வந்து இருப்பார்கள். பார்கர்க்கு இந்த விளையாட்டு புதிது. மலை உச்சிக்கு செல்ல வின்ச்சை பயன்படுத்தி மலை மேல் சென்று, பனியில் சறுக்கி கொண்டே கீழ வருவார்கள். ஞாயிற்று கிழமை மதியம், மூவரும் அங்கு செல்கின்றனர். அதிக விலை கொடுத்து மூவரும் செல்ல முடியாததால், வின்சில் ஏற்றும் ஆளை ஏமாற்றி மூவரும் மேல போகின்றனர். பார்கர்க்கு இந்த விளையாட்டு தெரியாததால், மூவரும் மெதுவாக கீழ வருகின்றனர். ஜோ இதனால் டனிடம் பேச, மீண்டும் மேல செல்ல முடிவு செய்து ஆரம்பிக்கின்றனர். 
நேரம் இப்போது ஞாயிற்று கிழமை மாலை. அவர்கள் செல்லும் போது அந்த விளையாட்டை முடித்து இருப்பார்கள். அதே போல் இப்போது விளையாட்டை மூடினால், வானிலை காரணமாக மூன்று நாள் கழித்து தான் திறப்பார்கள். ஆனால் மீண்டும் எப்படியோ, அதே ஆளை ஏமாற்றி மேல செல்கின்றனர். இப்போது அவர்கள் மேல செல்வது இந்த ஆளை தவிர மற்ற யாருக்கும் தெரியாது. சக நண்பன் ஒருவன் விஷயம் கூற, அந்த ஆள்  இன்னும் மூன்று பேர் வர வேண்டும் கூறி சென்று விடுகிறான். ஆனால் அது எந்த மூன்று பேர் என்று புது ஆளுக்கு தெரியாது. அவன் சென்ற சில நிமிடத்தில் மூன்று பேர் வர, அவன் அனைத்தையும் செயல் இழக்க செய்து விட்டு சென்று விட, டன், ஜோ, பார்கர் மூவரும் மலைக்கு செல்லும் வழியில் அதுவும் வின்ச்சில்.
இப்போது அவர்கள் இப்படி கீழே வந்தார்கள், பனியால் அவர்களுக்கு என்ன ஆனது, உயிருக்கு ஏதாவது ஆபத்தா, ஆபத்து என்றால் அது எதனால் என்பதை நீங்கள் காண்க. இப்படத்தை பார்க்க மனதில் தைரியம் வேண்டும். சில விஷயங்களை நம்மால் எடுத்து கொள்ள முடியாத அளவிற்கு கொடுமையாக மற்றும் பயங்கரமாக  இருக்கும். ஆனால் அது உண்மை.  இப்படத்தை பார்த்தவுடன், பனி என்பதை சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது என்ற நிலைமை வந்து விடும். ஒரு முறை கண்டிப்பாக படத்தை பார்த்தே ஆக வேண்டும்.
 இப்படத்தை பார்த்து முடித்து விட்டு, செவ்வாய் கிழமை காலையில் பார்த்தல் என் இடத்தில் பனி புயல் ஆரம்பம் ஆகி இருந்தது.

Tuesday, February 01, 2011

சமீபத்தில் ரசித்தது - முன்தினம் பார்த்தேனே

தமிழகத்தை பொறுத்த வரை (குறிப்பாக தென் தமிழகம்), நித்திரை தொடங்கும் போது இளையராஜா பாடல்கள் தான் அனைத்து ரேடியோக்களிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்கும். வேறு எத்தனையோ இசை அமைப்பாளர்கள் இருந்தாலும் அவர்களின் பாடல்கள் இனிமையாக இருந்தாலும் இரவு ஆரம்பித்தவுடன் அதை நிறுத்தி விடுவார்கள். இந்த அனுபவம் நான் சென்னையிலும், மதுரையிலும் கண்டது. ஆம் மனதை வருட இளையராஜா மட்டுமே முடியும் என்பது என் கருத்து. அதே போல் ஒரு படத்தில் அனைத்து பாடல்களையும் ரசிக்கும் விதமாக அமைப்பது இளையராஜாவின் தனித்திறமை. இதுவும் என் தனிப்பட்ட கருத்து தான்.

கடந்த ஆண்டில் வெளிவந்த ஒரு படத்திலும் அனைத்து பாடல்களும் ரசிக்கும் படி இல்லையா என்று நினைத்து பல படங்களை ஆராய்ந்த போது ஆறு பாடல்களும் இளமை துள்ளல்கள் உடன், எப்போதும் ரசிக்கும் படி இருந்தது "முன்தினம் பார்த்தேனே" என்ற திரைப்படம். இப்படத்தின் இசை அமைப்பாளர் பாய்ஸ் தமன். இப்படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. ஆனால் இசை முழுவதும் நெஞ்சை தொடும் ரகம். வரிகள் முழுவதும் மனதில் காதலை ஏங்க வைக்கும் ரகம். எப்படி இந்த பாடல்கள் வெளியில் தெரியாமல் போனது என்றே தெரியவில்லை. என்னை பொறுத்த வரை 2010ல் வெளிவந்த சிறந்த பாடல்கள் இது தான் என்பேன்.



ஏற்கனவே இப்படத்தை பார்த்து படு மோசம் என்று தெரிந்தாலும், இப்பாடலுக்காகவே மீண்டும் படத்தை பார்த்தேன்.

இசைஅமைப்பாளர்  தமனுக்கு பெரிய எதிர்க்காலம் உண்டு என்பதை இப்பாடல்களை கேட்டாலே தெரியும். என்னை ரசிக்க வைத்த தமனுக்கு வாழ்த்துக்கள்.