Thursday, January 21, 2010

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - கோபிநாத்

இந்த புத்தகத்தை வாங்க வேண்டுமா என்ற எண்ணம் இருந்தது.. அதே போல் நான் விசாரித்த போது கூட அந்த அளவு இல்லை என்று கேட்ட முடிந்தது. ஆனால் புத்தகக் கடையில் சென்ற போது, மனதில் ஒரு எண்ணம். எவ்வளவே செலவு செய்றோம், இந்த புத்தகத்தை வாங்கின என்ன என்ற எண்ணத்தில் வாங்கியது. அதற்கு கோபி அவர்களின் விஜய் தொலைக்காட்சியின் "நீயா நானா" என்ற நிகழ்ச்சியும் ஒரு உள்காரணம்.

எனக்கு தெரிந்தவரை கோபி அவர்கள் ஒரு சாதாரண மனிதனின் எண்ணத்தை நன்கு அறிந்தவர் என்று கூற வேண்டும். இல்லையென்றால் இந்த புத்தகத்தை இவ்வளவு தெளிவாக அதுவும் சுவராஸ்யமாக எழுத முடியாது. நான் தனியாக இருக்கும் போது, மனதில் பல கேள்விகளும், குழப்பங்களும் மனதை/மூளையும் பிடித்து ஆட்டிவிடும்.


  • வாழ்க்கையில் சுவாரஷ்யம் இல்லாமல் இருக்குதே?
  • பக்கத்து வீட்டுகாரன் அல்லது எதிர்க்கட்சிக்காரன் பார்த்த என்ன நினைப்பான்
  • மனசு என்னமோ மாதிரி இருக்கு
  • எல்லாமே எனக்கு எதிராவே நடக்குது.
  • பழையதை நினைத்து "போச்சே" என்று புலம்புவது..

மேல சொன்ன சில விஷயங்கள் அனைத்தும், ஏதாவது ஒரு நிமிடத்தில் கண்டிப்பாக நினைத்து இருப்போம்.  இந்த மாதிரியான நினைப்பை. எடுத்துக்காட்டு உடன் விவரித்து, இதற்குக்கான காரணம் என்ன, எப்படி இதில் இருந்து வெளியே வருவது என்று தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் பல இடங்களில் என்னை பார்க்கின்றேன் என்று தான் கூற வேண்டும்..

மொத்தத்தில் இந்த புத்தகத்தை வாங்கி பொறுமையாக அனுபவித்து படிக்கலாம்...

இன்றைய சிந்தனை


மோசமான ஆண்கள் பிறப்பதில்லை...
அவர்கள் உருவாக்க படுகிறார்கள்...
சில மோசமான பெண்களால்

-- யாரோ சொன்னது

Wednesday, January 20, 2010

3 இடியட்ஸ்: திரைவிமர்சனம்


இந்தி திரைப்படங்கள் மீது நம்பிக்கை குறைந்து கொண்டு இருக்கும் வேளையில், இன்னும் இந்தி திரைப்படங்கள் உயிரோடு தான் இருக்கிறது  என்று கூறும் வகையில், உள்நாட்டில் மட்டும் அல்லாமல், வெளிநாட்டு மக்களும் ரசிக்கும் விதத்திலும், இந்தியாவின் பள்ளி/கல்லூரியின் பயிற்விக்கும்/பயலும் விதத்தில் உள்ள குறைகளை நெற்றியில் அடித்தார் போல் கூறி, எவ்வாறு மாற்ற படலாம் என்று கூறி ஒரு வழியைக் காட்டி இருக்கும் படம்/பாடம்.



கதை அனைவரும் அறிந்ததே. கல்லூரி வாழ்க்கை, பல்வேறு வகையான் மாணவர்கள், நண்பர்கள், நண்பனின் தியாகம், காதல், மற்றும் இந்தியாவின் கல்வி முறை என்ன என்று வழக்கமாக இருந்தாலும் அதை கொடுத்த விதம்...திரைப்படம் முடிந்தாலும், மனதை விட்டு அகலாமல் நிற்கிறது...மற்ற திரை உலகத்தினர் கற்று கொள்ள வேண்டிய விஷயம் பல உண்டு..

சின்ன சின்ன விஷயங்களை கண்டுபிடிப்பதகட்டும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், பிரசவம் செய்து குழந்தை வெளியில் எடுப்பது ஆகட்டும், நண்பனின் தந்தையை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது என்று பல வகையான காட்சிகளில் நம்மை காட்டி போடுகின்றனர். 



அமீர்கான், மாதவன், ஷர்மான், பொமன் இரானி, கரீனா கபூர், மற்றும் ஓமி வைத்யா என்று நடிகர்கள் பட்டாளம். ஒருவரின் நடிப்பை உயர்த்தி, மற்றொருவரின் நடிப்பை குறைக்க விரும்பவில்லை. அனைவரின் நடிப்பும் கச்சிதம், மனதில் நிற்கும் பாத்திரங்கள்... (சில மாஸ் நடிகர்கள் /இயக்குனர்கள் இந்த படத்தின் நடிகனை /இயக்குனரை பார்த்து பிச்சை எடுக்க வேண்டும்... பஞ்ச் வசனங்கள் கிடையாது..பறந்து பறந்து போடுகின்ற சண்டை கிடையாது.. 500 நடன மக்களுடன் ஒரு குத்து பாட்டு அல்லது அறிமுக பாட்டு அல்லது அயல் நாட்டு சாலைகளில் காதல் பாட்டு  கிடையாது)



இதை தவிர முக்கியமான மூவர் உண்டு... இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, வசனகர்த்தா அபிஷித் ஜோஷி, கதை ஆசிரியர் சேடன் பாகத்.. இந்த மூவரில் ஒருவர் குறைந்து இருந்தாலும், படத்தின் ஜீவன் அம்சம் இல்லாமல் போய் இருக்கும்.  பாடல் சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், வந்தது போவது தெரியவில்லை.

படத்தை பற்றி ஒரு புத்தகம் அளவுக்கு எழுத வேண்டும் என்ற ஆசை தான்.. ஆனால் அதை விட மனதிற்கு ஒரு சந்தோசம் கண்டிப்பாக இப்படத்தை பார்க்கும் போது கிடைக்கும்.  தமிழில் இதை எடுக்கிறேன் என்ற பெயரில் கெடுக்காமல் இருந்தால் சரி. இந்த படத்தை தமிழில் அப்படியே கொடுக்க வேண்டும். அப்போது தான் அதனுடைய அம்சம் கிடைக்கும்.. இந்த படத்தை பார்த்து ஆவது (பதவில் இருப்பவர்கள்), இந்தியாவின் கல்வி கற்று தரும் அமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்ததும்..



குறிப்பு: இந்த படம் முடிந்து வெளி வரும் போது, எதோ ஒரு மன ஓரத்தில் தமிழ் படமான "பசங்க" நியாபகம் வருகிறது...

Tuesday, January 19, 2010

சரியான முடிவெடுக்க – ராபர்ட் E.குந்தர்


The truth about Making Smart Decisionஎன்ற புத்தகத்தின் தமிழாக்கம். திரு. லட்சுமி விஸ்வநாதன் அருமையாக தமிழாக்கம் கொடுத்து உள்ளார்.

"
விரைவாக சிந்திக்க வேண்டும்...
சாமர்த்தியமாக கணக்கு போடா வேண்டும்...
உடனே, உடனே முடிவெடுக்க வேண்டும்...
மிக சரியான முடிவைகளை மிக சரியான நேரத்தில் எடுப்பது ஒரு கலை"

ஒரு தனி மனிதன் தன்னை பற்றி முடிவெடுக்கும் போதோ அல்லது சுற்றி உள்ளவர்களின் முடிவை பற்றி முடிவெடுக்கும் போதோ அதனால் ஏற்பட கூடிய தற்போதைய நன்மை/தீமை, நீண்ட கால விளைவுகள், மன உளைச்சல்கள், வரவு/செலவு ஆரோக்கியம் என்று பல காரணிகளை மனதில் கொண்டு சாமர்த்தியமாக எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை உதாரணத்தோடு கொடுக்க பட்டு உள்ளது... கண்டிப்பாக அனைத்து வகையான பிரிவினரும் படித்து தெரிந்து கொள்ள பட வேண்டிய விஷயம்..


குறைகளே இல்லையா? என்ன தான் தமிழாக்கமாக இருந்தாலும், இந்த மாதிரியான புத்தகத்தை படிக்க பொறுமை வேண்டும் என்பதை இதன் மூலமாக அறிந்து கொண்டேன் (ரொம்ப கஷ்டம்).  எடுத்துக்காட்டாக அமைக்கபட்டு உள்ள மக்கள், தொழில் அமைப்புகள், அதிபர்கள் மற்ற அனைத்தும் வெளிநாட்டவர்களை சார்ந்தவை. இந்த வயசில படிக்கிற புத்தகமா என்ற கேள்வி மனதில் இருந்து கொண்ட தான் இருந்தது