Sunday, July 18, 2010

பதற்றம் - கதை

காலையில் குமார் பைக்கை ஸ்டார்ட் செய்து அவன் வடபழனியை தாண்டும் போது அதனுருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் உள்ள ஒரு பெண் அவனையே பார்ப்பதாக அறிந்து அவனும் அவளை பார்த்து சிரித்து கொண்டே செல்கிறான். இப்படியே ஒரு வாரம் செல்ல, ஒரு நாள் வடபழனியை தாண்டும் போது, அப்பெண் தயங்கி அவன் முன்னால் நிற்க அவனும் பைக்கை நிறுத்த, அவள் என்னை அண்ணா நகரில் இறக்கி விட முடியாம? என்று கேட்க அவனும் பல் தெரியும் படி சிரித்து கொண்டே அத விட என்ன வேல என்று சொல்லி இரண்டு பேரும் கிளம்ப

சென்னை வெயிலிலும் கொடைக்கானலில் பைக் செல்லவதாக மனதில் நினைக்க, கோயம்பேடு சிக்னல் அருகில் அப்பெண் அவன் முதுகில் சரிய அவன் மனம் முழுவதும் வானவில் மற்றும் ஆயிரம் வண்ணத்துப்பூச்சி. அவனை விட வேகமாக ஒரு பைக் அவன் அருகில் வந்து அப்பெண் மயங்கி விட்டதாக கூற அவனுக்கு முதல் பதற்றம்.

எப்படியோ சிரமபட்டு அவளை அருகில் உள்ள சிறு மருத்துவ மனையில் அவன் பெயரை பயன்படுத்தி சேர்க்க, அவளை சோதனை அறைக்கு கொண்டு செல்கின்றனர். சிறிது நேரம் கழிந்து அவள் கர்ப்பமாக இருப்பதை அறிய அவனுக்கு இரண்டாவது பதற்றம். மருத்துவர் குமார் தான் அவளுடைய கணவன் என்று கூற, குமாரும் அதை மறுக்க மருத்துவருக்கு சந்தேகம் வருகிறது. மருத்துவர் குமாருக்கு தெரியாமல் காவல்துறையை அழைக்க, காவல்துறை அதிகாரி அங்கு வந்து குமாரை அழைத்து பேச குமாருக்கு மூன்றாவது பதற்றம். இதற்கு நடுவில் குமாருக்கு அவனுடைய கை தொலைபேசியில் அழைப்பு வர, அவனும் இன்னும் சிறிது நேரத்தில் வடபழனி வந்து விடுவதாகவும் கூறி அழைப்பை முடிக்கிறான்.

குமார் என்ன தான் கூறினாலும் காவல்துறை அதிகாரி அதற்கு மறுக்க, மருத்துவர் குமாரை சோதனை செய்தால் தெரிந்துவிடும் என்று கூற அந்த அதிகாரி ஏற்று சோதனைக்கு அனுமதிக்கிறார். சிறிது நேரம் கழித்து அந்த அதிகாரியே வந்து குமாரை பார்த்து நீங்கள் போகலாம், அப்பெண்ணின் முகவரி கிடைத்து விட்டது என்று சொல்லி போய் விடுகிறார். உயிர் போய் உயிர் வந்ததாக நினைத்து அவன் பைக் எடுக்க செல்லும் போது சன்னல் அருகில் அதிகாரியும் மருத்துவரும் பேசுவதை கேட்க முடிகிறது. அப்போது மருத்துவர் இன்னொரு அதிகாரியிடம் குமாருக்கு குழந்தை பெற்று கொள்ளும் ஆண்மை குமாருக்கு இல்லை என்று கூறும் போது குமாருக்கு மனதில் எரிமலை வெடிக்க, கை உதறல் உடன் நான்காவது பதற்றம். அழுது கொண்டே வடபழனிக்கு புறப்பட மீண்டும் கை தொலைபேசியில் அழைப்பு. சீக்கிரம் வடபழனிக்கு வந்து விடுவதாக கூறி அழைப்பை முடிக்கிறான்.

வடபழனிக்கு அருகில் வர வர அப்போது தான் அவனுடைய நிலைமை நினைவுக்கு வருகிறது. வீட்டை அடைந்த உடன் ஐந்தாவது பதற்றம். குமாருடைய இரண்டு குழந்தைகள் அப்பா என்று வந்து அணைக்க அவன் மனைவி கை தொலைபேசியுடன் வெளியே வர அப்போது குமாருக்கு மயக்கம் வர சரியாக இருந்தது.

Friday, July 16, 2010

ரசித்தது

விடிய விடிய உக்காந்து யோசிப்பன்களோ...


நமக்கு ஒருத்தேன் கூட இந்த ஐடியா சொல்லாலேயே.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்

Tuesday, July 13, 2010

விமர்...

பயம் அறியான்: 


கத்தி எடுத்தவனுக்கு கத்தியல தான் சாவு என்பதை மறுபடியும் கூறி இருக்கும் படம். படம் சுமாராகவே இருந்ததாலும், இந்த படத்திலும் அதே பிடிக்காத விஷயம் இருக்கிறது. அது எப்படின்னு தெரியலே, கல்லூரி போகின்ற பெண்களுக்கு ரவுடிகளையும், போக்கிரி தானம் பசங்கள மட்டும் தான் பிடிக்கிறது. முடியலே

லிடர் - தெலுகு


ஆண்டுக்கு பத்து நல்ல படங்களை தரும் தெலுகு திரை உலகம், அந்த வரிசையில் இந்த படத்தையும் தந்து இருக்கிறது. அட்டகாசமான திரைக்கதை மற்றும் இயக்கம். சாகும் போது ஆந்திர முதல் அமைச்சர், தன் மகனை பார்த்து நாட்டை நீ தான் ஆள வேண்டும் என்று கூறி இறந்து விட;அதே நேரத்தில் அக்கட்சியில் இருக்கும் முக்கிய உறுப்பினர்கள் முதல் அமைச்சர் போட்டிக்கு வர, அதை நம் நாயகன் எப்படி எதிர் கொள்கிறான் மற்றும் எப்படி நாட்டை ஆளுகிறான் என்பதை நல்ல திரை கதையில் கூறி இருக்கின்றனர். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

அம்பாசமுத்திரம் அம்பானி:


நல்ல கதையை தேடி அதில் நடித்து மீண்டும் கருணாஸ் நல்ல நடிகர் என்று நிருபித்து விட்டார் என்று கூற வேண்டும். கிளைமாக்ஸ்ல் ரயில் நிலையத்தில் "நான் யாருக்கும் தூரோகம் பண்ணலையே" என்று கூறி அழும் போது, மனதில் அவர் நின்று விடுகிறார். இரண்டாம் பாகத்தில் பண பிரச்சனை மற்றும் தூரோகம் என்று குடும்ப படம் போல் போனாலும், நம் வாழ்க்கையில் நடக்கும் கதை போல் இருப்பதால் நல்ல படம் தான் என்று தோன்றிவிடுகிறது. சொல்லப்பட வேண்டிய இன்னொரு விஷயம் நசைக்சுவை. கருணாஸ் படத்தில் நகைச்சுவை இல்லை என்றால் எப்படி. லிவின்ஸ்டன் மற்றும் மயில்சாமியின் நகைச்சுவை படத்துடன் இருப்பதாலும், எதார்த்தமாகவும் இருப்பதாலும் நம்மை அறியாமல் சிரிப்பு வருவது உண்மை தான். இதே போல் கருணாசின் நல்ல படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Sunday, July 11, 2010

லாஸ் வேகஸ் - 2

பினிக்ஸ்: கேள்விப்படும் போது அது பாலைவன ஏரியா என்றும், வெயில் சுட்டு எரிக்கும் என்றும் கூறியது உண்மை என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. ஊர் என்னவோ பெரிய ஊர் தான். ஆனால் அதை சுற்றி பெரிய காய்ந்த மலைகளும், பாலைவன இடமும் தான். பினிக்ஸ்ல் இருந்தது லாஸ் வேகஸ் வரை இந்த மலைகளிலும், பாலைவனத்திலும் தான் பயணம் செய்து ஆக வேண்டும் என்று பயணம் ஆரம்பித்த போது தான் தெரிந்தது.


இரவு முழுவதும் தூக்கவில்லை என்றாலும், காரிலும் கண்டிப்பாக தூக்ககூடாது என்ற முடிவுடன் தான் ஏறினேன். நண்பர் ஒருவர் கார் ஓட்டும் போது நம் தூங்கினால், நாம்மை பார்த்து அவருக்கும் தூக்கும் வரும் என்ற எண்ணத்திலும், அதே போல் அவர் சிறு கண் அசைந்தாலும், நாம் அனைவரும் மொத்தமாக கண் மூட வேண்டியது தான் நினைத்து, கஷ்டப்பட்டு அமர்ந்து இருந்தோம். காரில் உள்ள குளிர் காரணமாக என்னை அறியாமல் ஒரு மணி நேரம் தூங்கியது, முழிப்பு வந்த பிறகு தான் அறிந்தேன். கொடுமையான வெயில் நான்கு மணி நேர பயணம் பிறகு, சோதனை சாவடியின் காரணமாக கிட்ட தட்ட ஐந்து மைல் தூரத்திற்கும் மேல் வரிசையாக கார் நிற்கிறது.  இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஊர்ந்து செல்ல வேண்டி இருந்தது. எல்லோருடைய மனதிலும் ஒரே கவலை, லாஸ் வேகசில் சுற்றி பார்க்க வேண்டிய தினத்தை இப்படி காரிலே போய் விடிகிறதே என்ற எண்ணம். அருகில் செல்ல செல்ல தான் விஷயம் அறிய முடிந்தது. ஆம் செல்லும் வழியில் "உவர் அணை" (Hoover Dam).




இரண்டு மலைகளுக்கு நடுவில் இந்த அணை அமைந்து உள்ளது. இவ்வழியில் செல்லும் அனைவரும் கண்டிப்பாக இந்த அணையின் வழியாக தான் செல்ல வேண்டும். செல்லும் வழியில் மக்கள் கண்டிப்பாக வண்டியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழிந்து தான் செல்வர்கள். அதனால் தான் இவ்வளவு டிராபிக் ஆகிறது. இந்த டிராபிக்கை சரி செய்ய, ஒரு மேம்பாலம் அமைக்கபட்டு கொண்டு இருக்கிறது. இரண்டு மலையை இணைக்கும் பாலம். பார்த்தல் தான் அதனுடைய பிரம்மாண்டம் தெரியும். நாங்களும் அங்கு சிறுது நேரம் இருந்து விட்டு, மறுபடியும் பயணம் ஆரம்பித்து. 


முப்பது நிமிடத்தில் லாஸ் வேகஸ்யின் அறிவிப்பு பலகை பார்த்த போது தான், உள்ளத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் ஒரு உற்சாகம். ஊரின் எல்லையை தொட தொட, உடம்பில் இருந்த அனைத்து உளைச்சலும் காணாமல் போய் கொண்டு இருந்தது. லாஸ் வேகஸ்க்கு உள்ளே நுழையும் போது, பெரிய பெரிய கட்டிடங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பாலைவனத்தில் இப்படி ஒரு சொர்க்கமா என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டு இருந்தது.


Friday, July 09, 2010

விமர்...

திரைப்படங்களில் பல ரகம் உண்டு. அதில் படம் முழுவதும் நன்றாக சென்று, கடைசியாக முடிவில் மட்டும் சொதப்புவது என்பது கடைசி ரகம். இம்மாதிரியான படங்கள் சில நேரங்களில் போட்ட பணத்தை பார்த்து விடும். அப்படிப் பட்ட படங்கள் தான் இவை.

முன்தினம் பார்த்தேனே


கல்யாணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களைப் பற்றிய படம். இருவருக்கும் வேலை,  நண்பர்கள், பிரச்சனைகள் என்று இருந்தாலும் காதலில் எவ்வாறு முடிவு எடுக்கின்றனர் மற்றும் வாழ்க்கை எப்படி அமைகிறது என்ற சாதாரணமான கதை தான். ஆனால் நண்பர்களின் நகைச்சுவை மற்றும் அருமையான பாடல்கள். ஒரு தடவை பார்க்கலாம்.

கிக் - தெலுகு


ரவிதேஜா, ஷ்யாம், இலியான என்று பெரிய குழுவுடன் வந்த திரைப்படம். ரவிதேஜாவின் வித்தியாசமான குணத்தின் நடிப்பு, இலியானவின் கவர்ச்சி, மற்றும் ஷ்யாமின் பொறுமையான நடிப்பு என்று படம் முழுவதும் இருந்தாலும் கிளைமாக்ஸ் பார்த்தால் என்னடா இப்படி ஒரு மொக்க படத்துக்கு வந்தோமா என்று தோன்றிவிடும். ஆனால் கிளைமாக்ஸ் தவிர படத்தை ஜாலியாக பார்க்கலாம். 

லாஸ் வேகஸ் - 1

ஜூலை முதல் வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறதே, ஊர் சுற்றிப் பார்க்க வேண்டாமா என்று நண்பர்கள் மே மாதமே விவாதம் தொடங்க, அடுத்த மூன்று நாட்களில் அமெரிக்காவின் சூதாட்ட நகரம் மற்றும் பாலைவன சொர்க்கலோக நகரம் என்று அழைக்கப்படும் லாஸ் வேகஸ் என்று முடிவாகி, அடுத்த ஒரு வாரத்தில் பயணத்திற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் முடித்தாகி விட்டது. வெள்ளிக் கிழமை இரவு பயணம் ஆரம்பித்து திங்கள் இரவு மீண்டும் வசந்த மாளிகை என்று அளவில் அனைத்தும் கச்சிதம்.

வெள்ளிக் கிழமை மாலை பொழுதில் என் இடத்தில் இருந்து கிளம்பி, இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு ஸ்ப்ரிங்பில்டு (மிசோரி மாகாணம்) விமான நிலையத்தை அடைந்தோம். இங்கிருந்து பினிக்ஸ் செல்லும் விமானம் இரவு 09:30 மணிக்கு. நாங்கள் விமான நிலையத்தை அடைந்து, அனைத்து விதமான சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான புறப்படு இடத்திற்கு அடைய நேரம் இரவு 08:45. பினிக்ஸ்ல் நண்பர்கள் இருவர் இருப்பதால், எங்கள் கணக்குபடி இரவு 12:15க்கு பினிக்ஸ் அடைந்து நண்பர்கள் வீட்டில் இரவு தூங்கி விட்டு அவர்களையும் சேர்ந்து கொண்டு, அதிகாலை 05:30 மணிக்கு புறப்பட்டு மதிய நேரத்தில் வேகஸ் அடைந்து அங்கு சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு இரவில் முழுவதும் வேகசை சுற்றலாம் என்பது தான். ஆனால் முதலில் நாங்கள் பினிக்ஸ்க்கு புறப்பட வேண்டிய விமானம் வந்து சேரவில்லை. புறப்படுவதற்கு இரவு இரண்டு மணி ஆகும் என்று கூற எங்களுடைய திட்டத்தில் முதல் அடி. இரவு 12 அளவில் பினிக்ஸ்ல் பதிவு செய்து இருந்த கார் பற்றி நினைவுக்கு வர, கார் பதிவு குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கவில்லை என்றால், தானாகவே ரத்து ஆகிவிடும் என்று கூற எங்களுக்கு இரண்டாவது அடி (இரண்டு காரில் ஒன்று). அதே நேரத்தில் இரண்டாவது காரை பதிவு செய்யலாம் என்றால் நாங்கள் சென்ற விமான நிலையத்தில் கார் இல்லை என்றும், அருகில் உள்ள இன்னொரு விமான நேரத்தில் தான் போய் எடுக்க வேண்டும் என்று கூற மூன்றாவது அடி. இதன் படி எங்களுடைய தூக்கம் முழுவதும் பயணத்திலேயே முடிந்து விட போகிறது என்று எங்களுக்கு தெரிந்து விட்டது.

இரவு 1:30 (CST) மணிக்கு பறப்பட்டு, இரவு 3 (PST) மணிக்கு பினிக்ஸ் அடைந்தோம். நாங்கள் எடுத்து கொள்ள வேண்டிய முதல் கார் கிடைக்க அதிகாலை 5 மணி வரை இருக்க வேண்டும் என்று கூற எங்களுக்கு நான்காவது அடி. சரி கார் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து கொண்டு அங்கேயே இரண்டு மணி நேரம் இருந்து முதல் காரை எடுத்து கொண்டு அடுத்த விமான நிலையத்திற்கு இரண்டாவது காரை எடுக்க புறப்பட்டோம். எங்கள் யாருக்கும் தூக்கம் இல்லை. நண்பர்கள் வீட்டை அடையும் போது காலை 7 மணி. அங்கேயே காலை உணவை எடுத்து கொண்டு 11 மணி அளவில் வேகஸ்க்கு புறப்பட்டோம் (மனதில் இதற்கு மேலும் பிரச்சினை வர கூடாது என்று நினைத்தது சொல்லி தெரிய தேவையில்லை)


பினிக்ஸ் 2 லாஸ்-வேகஸ் 
பயணம் தொடரும்...

Thursday, July 08, 2010

மனதை தொட்டது

யாரோ ஒருவர் யாருக்கோ அனுப்பியது