Sunday, June 26, 2011

திருமண வாழ்த்துக்கள் - பிரசித்



எனது பொறியியல் கல்லூரி நண்பர் பிரசித் அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுவதை தெரிவித்து கொண்டு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

எனது தோழர்களில் இவர் தான் முதல் முதலில் அமெரிக்காவில் குடியேறியவர். நான் அமெரிக்கா வந்து, செல்ல நினைத்த இடத்தில் இவர் வசிக்கும் மினியாபோலிசும் ஒன்று. ஆனால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இது வரை அது நடக்கவே இல்லை என்பது வேறு விஷயம்.


Friday, June 24, 2011

பிறந்த நாள் - கண்ணதாசன்


கவி உலகில் பேரரசராக, காவியத்தாயின் இளையமகனாக விளங்கிய மதிப்பிற்குரிய திரு. கண்ணதாசனின் பிறந்தநாளன இன்று, அவரை நினைவு கூறுகிறேன்.





ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்!

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை! 

இந்தியா - தலையெழுத்து அவ்வளவு தானா



சமீபகாலமாக பார்க்கும் இடம் எல்லாம் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் செய்யும் தவறுகள், அரசியல்வாதிகளின்  ஊழல்கள் என்று தெரிகின்றன. திரையுலகம் என்ற மாயையை உடைத்து எறிந்து, இச்செய்திகள் வருகின்றன என்றால் பெரிய விஷயம் தான்.  facebook ,நண்பர்களின் வலைத்தளம், பதிவர்களின் பதிவு, தினசரி செய்திதாள்கள், வாரந்திர புத்தகம் என்று பல இடத்தில் இதே மாதிரியான செய்திகளை பார்க்க முடிகிறது. எனக்கு மட்டும் இந்த மாதிரியான செய்திகள் தெரிகின்றனவா என்ற சந்தேகம் கூட சில சமயங்களில் இப்போது வந்து விடுகிறது. ஒரு வேளை, மீடியா என்ற தொழில்நுட்பம் சில மிகைபடுத்தி சொல்வதால் தான் எங்கும் இச்செய்திகள் தெரிகின்றனவா என்ற கேள்வி இருக்கிறது. இதை மெய்பிக்கும் வகையில் தான், கலைஞர் அவர்கள் கூட, பத்திரிக்கை காரணமா தான் தன் மகள் சிறையில் இருப்பதாக கூறி இருக்கிறார்ஆனால் யோசித்து பார்த்தால், பல காரணங்கள் புலப்படுகிறது.

·         பத்திரிக்கை என்னும் தொழில்நூட்பம் முன்னேறி இருக்கிறதுபத்திரிக்கை இணையம் வழியாக ஊடுருவ ஆரம்பித்து உள்ளது. இன்றைக்கு படித்த விறுவிறுப்பு தளத்தில், "பத்திரிகை சர்க்குலேஷன் பற்றி வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தரவுகள், தமிழகப் பத்திரிகைகளுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பதாக இல்லை. தமிழக வாசகர்கள், தமது தினசரிச் செய்திகளுக்காக பத்திரிகைகளைவிட இணையத் தளங்களையே நாடுகிறார்கள் என்பதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன."

·         இணையத்தில் பதிவர்கள் அதிகம் ஆகி உள்ளனர்.

·         மக்கள் விழிப்புணர்வு பெற்று உள்ளனர் என்பதே இதன் பொருள். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தெளிவாக காட்டுகிறது.

·         மிக முக்கியமாக, தற்போது ஊழலில் சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் என்று அனைவரும் தமிழகத்தை சார்ந்தவர்கள். அதனால் என்னவோ, தமிழ் இருக்கும் அனைத்து இடத்திலும், அனைத்து விஷயங்களை பற்றியும் விரிவாக வருகிறது. வடஇந்திய அமைச்சர்கள் ஊழல் என்றால், இச்செய்திகள் வருமா என்றால் கேள்வி தான்.


மேல உள்ள லிங்கில் முழுவதுமாக படித்து பார்த்தால், அரசியல்வாதிகளும், அரசாங்க ஊழியர்களும், பெரும் பணம் படைத்த தொழில் அதிபர்களும்

·         பணத்தை கொள்ளை அடிப்பது இல்லாமல் (தொலைபேசியின் இரண்டாம் அலைவரிசை கொள்ளை)

·         இந்திய நாட்டின் தேசிய சொத்தை தனியாருக்கு சொற்ப விலைக்கு கொடுத்து, தனியார் நிறுவனங்கள் கனிம வளங்களை சுரண்டுவதும் இல்லாமல் (ஆந்திராவில் தனியார் நிறுவனம் எண்ணை வளத்தை கொள்ளை அடித்தல்)

·         மக்களின் வாழ்வை கொடுப்பதை நிறுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்/ இனத்தை அழிக்கும் முயற்சியில் இருப்பதோடு இல்லாமல் (ஆந்திர, ஒரிசா, மேற்கு  வங்கம், உத்திரபிரதேசம் போன்ற இடங்களில் கனிம வளத்தை எடுக்க, அங்கு வாழும் பழம்குடியினரின் போராட்டத்தை ஒழிக்க, துணைஇராணவ படை இறக்கி விடபட்டுள்ளது. இந்த மறைமுக இராணுவ படை, அவர்களுக்கு தெரியாமல் அந்த பழம்குடியினர் என்ற இனத்தையையே வேரோடு அழிந்து கொண்டு இருக்கின்றனர்அதோடு இல்லாமல், அணுமின் நிலையத்தால் வரும் அழிவை தெரிந்து கொண்டு,  ராஜஸ்தான் மாநிலத்தில் அதிசக்தி வாய்ந்த அணுஆலையை வரவிடாமல் தடுக்கும் மக்கள் மீது துணை இராணுவத்தை ஏவி விடுதல்)

·         உலகமயம் என்ற பெயரை பயன்படுத்தி, சீர்கெட்டு போயிருக்கும் நிர்வாகத்தை/பணபுழக்கத்தை சரி செய்கிறோம் என்ற பெயரில், வரிகளை கூட்டி/வட்டி விகிதத்தை கூட்டி/ தனியாரின் பேச்சை கேட்டு அத்தியாவசமான பொருட்களின் விலையை ஏற்றி பணத்தை பிடுங்கி கொள்வது இல்லாமல்,

·         பதினோரு மாதத்தில், பதினோரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தி மகத்தான சாதனை செய்ததோடு இல்லாமல், மீண்டும் அடுத்த வாரத்தில் டீசல் உயர்வு என்று

இந்திய அரசாங்கம் அனைத்திக்கும் துணை நிற்கிறது என்பது தான் கொடுமையே. இதே போல் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் பல தவறுகள் நடைபெறுகின்றன

இந்தியாவின் நிலைமையை சரி செய்ய எத்தனை காந்தியடிகள் வந்தாலும், சீராக்க முடியாது என்பதை நினைக்கும் போது, எதிர்கால இந்தியாவின் தலை எழுத்தை பார்க்கும் போது, அவ்வளவு தானா என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை.

Monday, June 20, 2011

திருமண வாழ்த்துக்கள் - வசந்த்


என்னுடைய அலுவலக நண்பர் திரு. வசந்த் அவர்களின் திருமணம் இன்று சென்னையில் நடைபெறுவதை தெரிவித்து, நல்-வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.

Thursday, June 16, 2011

திருமண வாழ்த்துக்கள் - அய்யப்பதாஸ்


எனது பொறியியல் கல்லூரி நண்பர் அய்யப்பதாஸ் அவர்களின் திருமணம் இன்று பரிபல்லியில்(கேரளா) நடைபெறுவதை தெரிவித்து கொண்டு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு தெரிந்த வரை, கேரளாவில் நண்பர் வீட்டிற்கு சென்றேன் என்றால் அது இவரின் வீடு தான். திருவனந்தபுறத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் வீடு வந்துவிடும். கேரளா மாநிலத்திற்கு உரித்தான அழகு, அந்த வீட்டில் காண முடிந்தது என்றால் ஆச்சிரிய படுவதற்கு ஒன்றும் இல்லை. சாலையில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால், எங்கு பார்த்தாலும் மரம். காடு போன்ற உணர்வு தான். இந்த காட்டிற்கு நடுவில் ஒரு பங்களா உள்ள அவரின் வீடு. முதல் முதலில் அவரின் பெற்றோர் மற்றும் சொந்தங்கள் என்னுடன் அவர்கள் மொழியில் பேச, நான் திரு திருவென முழிக்க, நல்ல அனுபவம் தான். 

Friday, June 10, 2011

San Antonio,TX - பயணம்


ஊர் சுற்றி பார்க்க சென்று பல நாள் ஆகிவிட்டதே, எங்கு செல்லலாம் சென்று நினைக்கையில் தோன்றியது சண்-அன்டோனியோ. என் இடத்தில் இருந்து 10 மணி நேரம் என்றாலும், நண்பர் கார்த்திக்கும் சேர்ந்து செல்ல வேண்டும் என்றால் 13 மணி நேரம் ஆகி விடும் என்பதால், முதல் நாள் இரவே அவர் வீட்டிற்கு சென்று, அங்கே இருந்தே பயணத்தை தொடரலாம் என்று முடிவு ஆகி, 593 மைல்கள் (954 கிலோ மீட்டர்) என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஆரம்பித்தோம். நாங்கள் பயணம் செய்த வாரம், 3 நாட்கள் விடுமுறை என்பதால், சாலை செல்லும் அனைத்து இடங்களிலும் கூட்டம். இரண்டு பேர் மட்டும் காரை ஒட்டிக் கொண்டு பத்து மணி நேரத்தில் நண்பர் கிஷோர் வீட்டை அடைந்தோம். நாங்கள் பயணம் செய்த தூரத்தை பார்த்தால், பெங்களூரில் இருந்து மும்பை பயணம் செய்யும் தூரம். அனைத்து இடர்பாடுகளையும் கடந்து பத்து மணி நேரம் என்பது ஆச்சிரிய படகூடிய பயணம் தான்.



அமெரிக்கா வந்து பல மாதங்கள் சென்று விட்டாலும், தண்ணீர் விளையாட்டுகளில் பங்கேற்காத குறை இருந்தது. அதனால் இங்கு கண்டிப்பாக தண்ணீர் விளையாட்டு செல்ல வேண்டும் என்பதற்காக, பல இடத்தை பற்றி விசாரித்து இரண்டை தேர்ந்து எடுத்து,  முடிவு செய்தோம். இன்னொரு நண்பர் மேனன் வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ள, அன்று முழுவதும் தண்ணீர் விளையாட்டுகளில் சென்றது. இங்கு தான் அமெரிக்கா மக்களின் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பதை பார்க்க முடிந்தது.


அடுத்த நாள் கார்பஸ் கிருஷ்டி என்ற கடற்பகுதிக்கு செல்லலாம் என்றும், அதற்கு முன்னால் போர்ட் அர்கன்சாஸ் என்ற ஒரு கடற்தீவுக்கு செல்லலாம் என்ற முடிவாகி, மீண்டும் அங்கிருந்து மூன்று மணி நேர பயணத்தை தொடங்கினோம். இந்த இடத்திற்கு விஷேசம் என்ன வென்றால், இங்கு இருந்து மெக்ஸ்சிகோ என்ற நாடு மிக அருகில். அதனால் மெக்ஸ்சிகோ இன மக்களை அதிகமாக காணமுடியும். அமெரிக்கா வெள்ளை, மற்றும் கறுப்பின மக்களை காணும் போது, மெக்ஸ்சிகோ மக்களை கண்டால், இந்திய மக்களின் நிறத்துடன், நம் மக்கள் போன்ற முக அமைப்பு இருக்கும் என்பதால் ஒரு மகிழ்ச்சி.



இந்த போர்ட் அர்கனசாஸ் செல்ல இரண்டு வழி என்றும், இரண்டு வழியையும் பார்க்க வேண்டும் என்ற முடிவெடுத்து, முதல் வழியை காணும் போது ஆச்சிரியத்தின் உச்சிக்கு என்றேன் என்றால் அது மிகை அல்ல. கடற்தீவிற்க்கு கடலை கடந்து செல்ல வருகின்ற அனைத்து வாகனத்தையும் வரிசையாக நிறுத்தி, ஒவ்வொன்றாக நாமே படகில் ஏற்ற வேண்டும். படகு தீவு கரைக்கு சென்ற உடன், நாமே வாகனத்தை வெளியே எடுத்து கொண்டு செல்ல வேண்டும். இந்த அனுபவம் நான் பார்க்காத ஒன்று என்பதால், வெளியில் சொல்லாத மகிழ்ச்சி.

Sample Jet Skis... Not mine


அங்கு வேறு என்ன செய்யலாம் என்று நினைத்து கொண்டு இருக்கையில், கடலில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டினால் என்ன என்று முடிவெடுத்து, இரண்டு பைக்கை எடுத்துக் கொண்டு கடலில் மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அனுபவத்தை பெற்றேன். நமக்கு நீச்சல் தெரியாது என்ற ஒரு குறை இருந்தாலும், நீச்சல் தெரிந்த மக்களே, கடலை பற்றி ஒரு முறை யோசிக்கும் போது, நீச்சல் தெரியாமல் பைக்கை ஓட்டினேன் என்றால், அது எனக்கு பெரிய விஷயம் தான். சென்னையிலே இந்த மாதிரி அனுபத்தை பெற முடியும் என்ற கேட்ட பிறகு, அதையும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்து ஆகி விட்டது.


நாங்கள் இருப்பது கடற்பகுதி என்பதால், இரவு கடல் உயிர் உணவு. ஹாலிவுட் திரைப்படத்தில் காணும் ஒரு நட்சித்திர உணவு உண்ணும் இடத்தின் அமைப்பு நாங்கள் சென்ற உணவு விடுதி. கடல் போல் அந்த விடுதி. உணவு உண்ணும் இடத்தில் இருந்து பார்த்தால், ஒரு புறம் கடல். மறுபுறம் வானை தொடும் கட்டிடங்கள். நடுவில் அதுவும் கடல் மேல் நாங்கள் இருக்கும் விடுதி. எங்களுக்கு அருகில் அமெரிக்கா வெள்ளை இன மக்கள், மெக்ஸ்சிகோ மக்கள் எங்களுக்கு உதவி செய்கின்றனர். சொல்ல முடியாத ஒரு வித அனுபவம்.


நாங்கள் சண்-அன்டோனியோவில் இருந்து திரும்பும் போது, ஆஸ்டினில் அவரது குடும்பத்துடன் வசிக்கும் எங்களது பொறியியல் கல்லூரி தோழி இந்திரதேவியின் வீட்டிற்கு நானும், தோழர் கார்த்திக்கும் சென்றோம். அவர்கள் உபசரித்த விதம், நிறைவான மதிய உணவு என்று பார்த்த போது, எங்களுடைய பயணம் ஒரு நிறைவாக முடிந்ததாகவே தோன்றியது.

என்னுடைய முன்னால் அலுவலக தோழர் பாஸ்கர் அங்கு தான் தங்கி இருக்கிறார் என்று நேற்று தான் தெரிந்தது. முடிந்தால் அவரையும் ஒரு முறை சென்று பார்த்து இருக்கலாம்.  மீண்டும் பத்து நேர பயணத்திற்கு பிறகு, லிட்டில் ராக் வந்து சேர்ந்தோம். மூன்று மணி நேர தூக்கத்திற்கு பிறகு நான் என்னுடைய இடத்திற்கு திரும்ப மூன்று மணி நேர பயணத்தை தொடங்கினேன்.