Monday, October 05, 2009

அம்பை – பீஷ்மர் - மகாபாரதம்

மகாபாரதத்தில் அனைத்து கதாபத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். மிக சிறந்த அரசியல், சிக்கலான விஷயங்கள் என்று பல இருக்கும். அதே போல் அனைத்தும் ஏதாவது ஒரு விதத்தில் கண்டிப்பாக குருசேத்திரத்தில் தொடர்பு இருக்கும். சிக்கலான நிகழ்வுகளில் முக்கியமாக எனக்கு சமீபத்தில் பட்டது அம்பையின் குறிப்பு தான். மகாபாரதத்தில் இவளது பத்திரம் சிறிது எனறாலும் கனமானது என்று தான் கூற வேண்டும். தேவவிரதன் மற்றும் கங்கை மைத்தர் ஆன பீஷ்மரை குருசேத்திரத்தில் இருந்து அகற்ற காரணமாக இருக்கும் அம்பையை பற்றி நினைத்து பர்ர்த்த போது மனதில் சில கேள்விகள்... அதற்கு முன்னர் அம்பை யார்? அவளுக்கும் பீஷ்மருக்கும் என்ன தொடர்பு.

காசி நாட்டு இளவரசிகள் தான் அஷ்தினபுரத்து ராணிகளாக வருது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக காசி நாட்டு மன்னன், அப்போதைய மூன்று இளவரசிகளுக்கும் சுயம்வரம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அம்பை அம்மூன்று இளவரசிகள் ஒருத்தி. இதை அறிந்த பீஷ்மர் இளவரசிகளை அபகரித்து செல்ல அஷ்தினபுரத்து பிரதிநிதியாக வந்து சுயம்வரத்தில் இருக்கும் அனைத்து மன்னர்களையும் தோற்கடித்து மூவரையும் கூட்டி செல்கின்றார். சுயம்வரத்தில் கண்ட சால்வ அரசனை தனது மனதில் அம்பை வைத்து இருந்தால். கூட்டி செல்லும் வழியில் வரும் பீஷ்மருடன் போருக்கு வரும் சால்வ அரசனும் தோற்று போகிறான். இதனால் சால்வ அரசனுக்கு அவமானம் ஏற்படுகிறது. அஷ்தினபுரத்து அரண்மனையில் குந்தி மாதா மூவரையும் வாழ்த்தும் போது அம்பை தனது ஆசையை சொல்கிறாள். இதை அறிந்த பீஷ்மர் அம்பையை சால்வ அரசன் மாளிகைக்கு அனுப்பி வைக்கிறார். தனது அவமனத்து காரணமாக இருந்த பீஷ்மர் அனுப்பி வைத்த அம்பையை ஏற்க மறுத்து விடுகிறார். இதனால் அம்பை காசி நாட்டுக்கும் செல்ல இயலாமல் அஷ்தினபுரத்துக்கும் செல்ல இயலாமல் அவமான படுகிறாள். இந்த அவமானத்துக்கு பீஷ்மர் தான் காரணம் என்று நினைத்து, அவமானத்தை போக்க பீஷ்மர் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று அஷ்தினபுரத்து அவையில் முறை இடுகிறாள். தனது பிரம்மசாரி சபதத்தை மேற்கொள் காட்டி அம்பையை மறுத்து விட, அம்பை பீஷ்மரின் மரணத்துக்கு கண்டிப்பாக காரணம் ஆவேன் என்று கூறி வெளியே செல்கிறாள். தனது அவமானத்துக்கு பதில் தேடி பீஷ்மரின் குருவான பரசுராமிடம் முறையிடுகிறாள். பரசுராமர் அம்பையை மணக்க சொல்லியும் பீஷ்மர் மறுத்து விட இருவரும் மோதிக் கொள்கின்றனர். அப்போட்டியில் பரசுராமர் தோற்று போகிறார். இதைப் பார்த்த அம்பை தவம் தான் சிறந்த வழி என்று நினைத்து பீஷ்மரை பலி வாங்க தவம் செய்து கடைசியில் அடுத்த ஜென்மத்தில் குருசேத்திர போரில் அர்ஜுனுடன் சிகண்டியாக சென்று பீஷ்மரை கொல்கிறாள்.

மேற்சொன்ன கதையின் படி பீஷ்மரின் தவறு என்ன? அதே போல் அம்பை செய்தது சரியா?

எனக்கு தெரிந்த வரை பீஷ்மர் செய்த ஒரே ஒரு தவறு,  அபகரித்து செல்லும் போது அம்பையிடம் மனதில் உள்ள ஆசையை கேட்காதது தான். ஆனால் அம்பை பீஷ்மரிடம் கூறி இருக்கலாம். இதனால் பீஷ்மர் எப்படி அம்பையின் அவமானத்திற்கு பொறுப்பு ஏற்க முடியம். கடைசியில் பீஷ்மரின் சாவுக்கு காணரமாக இருந்த அம்பை செய்து தான் தவறு என்பது என் வாதம்.

3 comments:

Kumaresh said...

நானும் உனது கருத்தையே ஒத்துக்கொள்கிறேன். அம்பை மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய பீஷ்மர் என்ன கடவுளா? மேலும் இந்த நிகழ்வு ஒரே ஒரு கருத்தை மட்டும் ஆழமாக புரிய வைக்கிறது. நமக்கு சரியாகவும், நியாயமாகவும் படும் விசயம் மற்றொருவருக்கு அவரின் பார்வையில் தவறாக படும்

BadhriNath said...

will think of this :) good one will write after i get some thoughts

BadhriNath said...

my 2c. just my thoughts. comments welcome...

two sides always.
for bhishmar: he just acted on behalf of his king. his oath is well known and hence his rejection is ok from his side.
against bhishmar: even though it is on behalf of king., he should not have been the one to usurp. he should have helped the king to get the girls not done it by himself. afterall he is loyal to kingdom not to king.

for ambai: she could not get her man., got rejected by her man and got rejected by bhishmar. her anger is justified on that front. Since bhishmar does not fight the woman she wanted to change to a man but no point changing to a man when the original intent of revenge was to marry bhishmar. hence sikandi
against ambai: she should have told when salwan came for the fight. she should have accepted the fate or become a raja matha or taken the sanyas.

against others: the king should not have sent bhishmar. he was no way impotent to fight, in such a case why send bhishmar alone.
the king of kasi should have talked to hasthinapuram king before breaking tradition.