Saturday, October 03, 2009

இந்தவாரம்: கேட்டது: ஐதீகம்

பல நூறு ஆண்டுகளுக்கு சில மனிதர்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக சில வரைமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர். அதை ஐதீகம் என்று ஏற்று அதையே நடைபடுத்தி கொண்டு இருக்கிறோம். ஆனால் மாற்றம் ஒன்று தான் இவ்வுலகில் மாறாமல் இருப்பது என்பதை நிருபிக்கும் வகையில் ஐதீகமும் மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு நான் கேட்ட சில முக்கிய நிகழ்வுகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த வருடம் கும்பாவிஷேகம் நடைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சித்திரை திருவிழா நடந்தது உலகம் அறியும். ஆனால் இந்து மதத்தின் ஐதீகப் படி நடைப் பெற்றது சரியானத என்பது கேள்வி. கும்பாவிஷேகம் நடைப் பெற்று 45 நாட்கள் அல்லது ஒரு மண்டலம் வரை எந்த விழாவும் நடக்க கூடாது என்பது முறையாம் (நான் கேட்டது வரை). சித்திரை திருவிழா நடைப் பெறவே கும்பாவிஷேக வேலைகள் வேகமாக முடிக்க பட்டன என்பது நிதர்சன உண்மை. வேதங்களை படித்தவர்கள், ஆன்மிக வாதிகள், பெரிய குருக்கர்கள் என்று பல பேர் இருந்தும் இதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர் என்றால் அவர்கள் ஐதீகத்தை மதிக்க வில்லை என்று அர்த்தம்.

தகனதிரி செய்ய இப்பொழுது நடைமுறையில் மரக்கட்டையில் (சாதரண), மின்சார, மற்றும் எரிவாயு என்று மூன்று முறைகள் உள்ளன. இந்து மதத்தின் வழக்கப்படி சாதரண தகனம் தான் முறை. அது தான் நாம் முன்னோர்கள் சொன்னது. ஆனால் இப்போது யாரும் உபயோக படுத்துவது இல்லை. எரிவாயு முறை தான் எல்லா ஊர்களிலும் இருப்பது. குறிப்பிட்ட காரணங்களுக்காக ஐதீக முறைப்படி நடைப்பெறும் தகனத்தை, குருக்கர்கள் காசுக்காக அதுவும் நம் தொழில் அவசரத்தை தெரிந்து வைத்துக் கொண்டு தவறான முறையை கற்று கொடுக்கின்றனர். இந்த தவறான முறையே இப்போது தொடர்கிறது..

கிறித்தவர்கள் உடல்களை மண்ணில் புதைப்பது தான் வழக்கம் (பைபிளில் குறிப்பு உள்ளதாக கேட்டது). ஆனால் மக்கள் எண்ணிக்கை அதிகமா இருப்பதால், அரசு அவர்களுக்கான இடத்தை வழங்க முடியாததால் எரிவாயு தகனத்தை செய்ய அறிவுரை கூறுகிறது/வற்புறுத்துகிறது. அவர்களில் சில பேர் அப்படியே செய்து விடுகின்றனர். அப்படியானால் பைபிளில் கூறிய விஷயமும் பொய் தான என்ற கேள்வி சிறிது நாளுக்கு பிறகு வந்து விடும்.

குருக்கர்களே பயன்படுத்தாமல் இருக்கும் போது ஐதீகம் என்பது பொய் என்று நினைப்பு வந்து விடுகிறது. இதே நிலை தான் வேதத்துக்குமா?

No comments: