Saturday, October 17, 2009

மம்மி - தயாரிக்கப்பட்ட விதம்

எத்தனை நாட்கள் தான் இட்லி, தோசை மற்றும் கோழி குழம்பு (ஐயோ இது புரட்டாசி மாதம்.. அசைவத்தை பற்றி நினைக்க கூடாது.... நாராயண.. நாராயண...) என்று தயாரிக்கும் விதங்களை பார்ப்பது. வித்தியாசமாக நினைத்த போது எண்ணத்தில் உதித்த ஒரு பொருள் தான் இந்த மம்மி.

இறந்தவர் உடலில், வயிற்றில் முதலில் துளைபோட்டு நுரையீரல், குடல் பகுதிகளை வெளியே எடுத்து ஜாடிகளில் வைத்து விட்டு பட்டிலைகளை வயிற்றுக்குள் நிரப்பி உடலைத் தைப்பார்கள். இதயம் மட்டுமே உடலுக்குள் விட்டு வைக்கப்படும். அடுத்ததாக மூக்கு விழியாக மூளை ஜாக்கிரதையாக உறிஞ்சி எடுக்கப்படும். சில சமயம் கண்கள் அகற்றப்பட்டு செயற்கைக் கண்கள் பொருத்தப்படும். அடுத்தபடி ஒருவை உப்புத் தொட்டிக்குள் நாற்பது நாட்களுக்கு உடல் அமிழ்த்தி வைக்கப்படும். உடலில் இல்ல திரவங்கள் பூராவும் இதனால் வெளியேறிவிடும். பிறகு உடலை எடுத்து அதன் மீது மெழுகு போன்ற ஒரு பசியைப் பூசுவார்கள். கசைசியாக அந்தஷ்துக்கேற்ப தங்க, வைர, வைடூரிய அலங்காரங்கள் செய்யப் படும்.

கொசுறு: கி.மு.கி.பி. புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

No comments: