Friday, May 27, 2011

திருமண வாழ்த்துக்கள் - செந்தில்குமார்


எங்கள் அண்ணன், மதுரையின் ஆண்டாள் புறம் சிங்கம் என்று எங்களால் அழைக்கப்படும் மற்றும் எனது பொறியியல் கல்லூரி நண்பர் செந்தில் குமாரின் திருமணம் இன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பொறியியல் கல்லூரி வாழ்க்கையில், அரசு பேருந்து பயணத்திற்கு கூட முக்கியமான இடம் உண்டு. மூன்று வருட அந்த வாழ்க்கையில் என்னுடன் வந்த நண்பர் இவர் மட்டுமே. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் காலை ஏழு மணிக்கு வந்து, பேருந்தில் புத்தகத்தையோ அல்லது கை துண்டையோ போட்டு, இடத்தை பிடித்து ஒருவர், இன்னொரு நண்பருக்காக காத்து இருந்தது மற்றும் மாலையில் கல்லூரி டீ கடையில் சேர்ந்து நடத்திய கூத்துக்கள் என்று பல. கல்லூரி வாழ்க்கை முடிந்து இன்னும் ஒரு மாதம் கூட தொடர்பு விடாமல் அதே போல் என்னுடன் பேசி கொண்டு இருக்கும் ஒரே நபர் இவர் தான். கண்டிப்பாக இவரது திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இப்போது பலிக்காமல் போய் விட்டது என்ற வருத்தம் இப்போது உண்டு.

Thursday, May 26, 2011

சூறாவளி



நேற்று இரவு தீடிர் என்று எங்கள் பகுதியில் என்ற சூறாவளி காற்று வர போகிறது என்று தெரிந்த உடன், பதற்றம் தொற்றி கொண்டதுஅதற்கு காரணம் மூன்று தினங்களுக்கு முன்னால், எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஜோப்ளின் இடத்திற்கு வந்து சென்ற கொடுரமான வலுவான சூறாவளி தான். அமெரிக்கா வரலாற்றில் முதல் பத்து இடங்களில் உள்ள மோசமான சூறாவளி இடத்தில் மூன்று தினத்திற்கு முன்னால் வந்த ஜோப்ளின் சூறாவளியும் சேர்ந்து கொண்டது என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். அதே போல் ஜோப்ளின் நகரத்தின் 20% முழுவதுமாக அழிந்து விட்டது.  இதே போல் இன்னொரு சூறாவளி நேற்று என் வீட்டிற்கு அருகில் வருவதாக அறிந்த உடன்இந்தியாவில் இது போன்ற வார்த்தையை கூட கேள்வி படாத நிலையில், என் மனநிலையை பற்றி என்ன சொல்ல. எத்தனை மணிக்கு என்று பார்த்தல் இரவு 10 முதல்  10:45 வரை. தொடர்ந்து வானிலை செய்திகளை பார்த்துக் கொண்டு, எங்கள் பகுதிக்கு அருகில் வந்து விட்டது என்ற அறிந்த கொண்ட உடன், எங்கே போய் அமர்ந்து கொள்ளலாம் என்று பார்த்து வருவதற்குள், அந்த சூறாவளி வலுவிழந்து போய்விட்டதாக அறிய நிம்மதி வந்து விட்டது



ஜோப்ளினில் வந்த சூறாவளி வீடியோ




ஆனால் கொடுமையே, 11 மணிக்கு தான் புயல் மழை ஆரம்பித்தது. பத்து நிமிடம் கழித்து புதிதாக மீண்டும் சூறாவளி எங்கள் அருகில் வருவதாக கூற அதுவும் 12 மணி முதல் 12:45 வரை எச்சரிக்கை கொடுக்க, என்ன கொடுமட என்ற நிலை வந்து விட்டது. 12 மணிக்கு முன்னதாகவே சூறாவளி வர, பயம் தொற்றி கொண்டது உண்மை தான். ஆனால் எங்கள் அதிஷ்டமோ சூறாவளி வலுவிழந்து வந்தது தான். 12 மணி 12:30 வரை காற்று பலமாக தான் அடித்து கொண்டு இருந்தது

எந்த வித பதிப்பும் இல்லாமல், நிம்மதி மூச்சு விடவே 12:45 இரவு ஆகிவிட்டது. இந்தியாவில் இருக்கும் போது பத்து மணிக்கு தூக்கும் நான், என் நிலைமையை பார்த்து சிரிக்காத குறை.

இந்த மாதிரியான நிலை இந்தியாவில் கிடைக்காது என்பதால், என் அனுபவத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சி தான் இது.

Wednesday, May 18, 2011

அழகர்சாமியின் குதிரை



மீண்டும் ஒரு யாதர்த்த திரைப்படம். என்ன தான் கோடி கோடியாக பணத்தை செலவிட்டு திரைப்படத்தை தாயரித்தலும் அப்படம் ஒரு சிறு செலவில் வெளியான யாதர்த்தமான திரைப்படம் முன் தோற்று போகும். சரி யாதர்த்தம் என்னவென்று கேட்டால், மக்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை மற்றும் உறவுகளை  திரையில் கண்டால் மட்டுமே அப்படம் யாதர்த்தம் ஆகும். எல்லா யாதர்த்த படமும் வெற்றி படமா என்று கேள்வி எழ இங்கு வாய்ப்பு உள்ளது. யாதர்த்தம் என்பது திரையில் காட்ட கூடிய அளவில் இருந்தால் மட்டுமே அது எடுத்து கொள்ளப்படும். இல்லையெனில் அந்த யாதர்த்தம் வீணாகி விடும். வெயில், காதல் போன்ற படங்கள் யாதர்த்தங்களின் அளவீடு.  



சரி கதைக்கு வருவோம். ஊரில் திருவிழா என்று இருக்கும் வேளையில், கடவுளின் வாகனமான மர குதிரை காணாமல் போக, மற்றொரு உயிருள்ள குதிரை ஊர் மக்களுக்கு கிடைக்கிறது. இதே நேரத்தில் ஊரில் பல நல்ல காரியங்கள் நடைபெற, காரணம் புதிதாக குதிரை என்று மக்கள் நினைக்க, திருவிழா களைகட்டுகிறது. மற்றொரு பாதையில், உயிருள்ள குதிரையை வளர்க்கும் கதையின் நாயகன் தேடி வர, அதற்கு மக்களின் எண்ணம்  குறுக்கே நிற்கிறது. கதை நாயகனின் பெண் பார்க்கும் படலம் மற்றும் மெல்லிய காதல் என்று ஒரு புறம் இருக்க, அதே வேளையில் உள்ளூர் காதல் என்று மற்றொரு புறம். முடிவில் காதல் ஜோடிகள் சேர்ந்தனர, திருவிழா என்னவாயிற்று என்பதே



சாமி வாகனமான குதிரையை வைத்து ஒரு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பவர்களுக்கு, முடியும் என்று கூறி தேனி மாவட்டத்தின் ஒரு சிறு கிராமத்தின் வாழ்க்கை முறையும் காட்டி, படம் பார்ப்பவர்களை அசர வைக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். மக்களின் மூட நம்பிக்கை என்ன, கிராமத்திலேயே தொழிலை செய்யும் மக்கள், பூசாரியாக இருக்கும் நபர்கள், கிராமத்தில் நடக்கும் மெல்லிய காதல், நண்பர்களின் நக்கல் பேச்சு, மைனரின் கலாட்டாக்கள், ஊர் பெரியவரின் நடவடிக்கை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் என்று ஒரு உண்மையான வாழ்க்கை முறையை காண முடிகிறது. அனைத்தையும் சிறப்பாக செய்த இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.



அதே போல் திரைப்படத்திற்கு தேவை ஒரு நல்ல கதை என்பதை மீண்டும் இந்த படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆம் கதையின் நாயகன் அப்புசாமியை பார்த்தாலே புரிந்து விடும். இக்கதைக்கு இளையதளபதியோ, ஜீவாவோ, சூர்யாவோ என்று இல்லாமல், நம்மை ஒரு சாதாரண மனிதன். அப்புசாமி கதையில் நடிக்காமல், மனிதன் வாழ்ந்தே இருக்கிறார். இந்த மனிதரையும் பார்த்து நாம் பொறமை பட்டோம் என்றால், அது சரண்யா மோகனுக்காக தான். குறிப்பிட்டு சொல்லும்படிக்கு இன்னும் இருப்பார்கள், இரண்டு பேர். ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் மற்றும் இசை அமைப்பாளர் இளையராஜாதேனி மாவட்டத்தின் அழகை, நம் கண் முன்னால் கொண்டு வந்து, மனதை வானவில் போல் மாற்றி விடுவர். எப்போதும் போல் இளையராஜா அவர்கள், நம் மனதை படத்தினுள் கொண்டு சென்று, அப்புசாமியின் வாழ்க்கையை மற்றும் உள்ளூரின் மக்களின் உணர்வை உணர செய்வார். இருவருக்கும் என் பாராட்டுகள்.

தவிர்க்காமல் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம்.