Saturday, May 30, 2009

இப்படியும் பிரச்சனை

நான் சென்னையில் இருந்து மதுரைக்கு இரயிலில் தான் பயணம் செய்வது வழக்கம்.. மூன்று மாதம் முன்பு இரயில் பயணசீட்டை எடுத்து, முடிந்த அளவு பேருந்து பயணத்தை தவிர்ப்பது எனது வாடிக்கை. பேருந்து பயணத்தை பற்றி உங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. அதுவும் மதுரை முதல் சென்னை வரை நாற்கரச் சாலை திட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. என்ன தான் மிகக் கவனமாக இரயில் பயணச்சீட்டை எடுத்தாலும் ஒரு சில தவறு நடக்கிறது. அதனால் ஏற்படக்கூடிய கஷ்டம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. சில வேலைகளில் அந்த பயணத் திட்டமே செயல்படுத்த முடியாமல் போகிறது. எனக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் இங்கே..

முதல் அனுபவம்

இரயில் கிளம்பும் முன் அரை மணி நேரத்திற்கு முன்பாக சென்று பக்கத்து இருக்கையில் இருப்பவர்களுடன் உரையாடுவது எனது பழக்கம். ஒரு நாள் இப்படி ஒருவர் உடன் பேசிக் கொண்டு இருக்கும் போது, இருக்கை எண்ணை கேட்டேன். அவர் சென்ன பதில் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஏன் என்றால் அவர் இருக்கை எண்ணும், என்னுடைய இருக்கை எண்ணும் ஒன்றாக இருந்தது. அவரிடம் வாதம் செய்துக் கொண்டே எனது பயன் சீட்டை பார்த்தப் போது எனக்கு மீண்டும் ஒரு பெரிய அதிர்ச்சி. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் நாளில் மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பும் இரயிலிலும், மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் நாளில் சென்னையில் இருந்து மதுரைக்கு கிளம்பும் இரயிலிலும் பயணசீட்டு இருந்தது. யார் நினைத்தாலும் எதுவும் செய்ய முடிய சூழ்நிலை. எதுவும் யோசிக்காமல் மீண்டும் எனது வீட்டை நோக்கி...

இரண்டாவது அனுபவம்
எனது பயணசீட்டை இரயில் நிலையத்திற்கு சென்று முன்பதிவு செய்ததாக நினைவு. ஆனால் என்னிடம் பயணசீட்டு இல்லை. அதனால் இரயில் நிலையத்திற்கு சென்று மறுசீட்டு கேட்டு விண்ணப்பித்த போது, நான் பதிவு செய்த அதே இரயிலில் என் பெயர் இருப்பதை பார்த்து அது வலைத் தளத்தில் முன் பதிவு செய்ததாக கூறி எனக்கு மறுசீட்டு தராமல் பயணசீட்டு எண் கொடுத்து அனுப்பி விட்டனர். ஆனால் நானோ அல்லது என் நண்பர்களோ எனக்காக வலைத் தளத்தில் முன்பதிவு செய்யவில்லை. பயணசீட்டு எண்ணை வைத்து வலைத்தள முகவரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அங்கிருந்தும் பதில் இல்லை. மீண்டும் அதே எண்ணை வைத்து இரயில் நிலைய தொலைப்பேசிக்கு தொடர்புக் கொண்டு எனது முகவரிக்கு பயணசீட்டை அனுப்ப சொன்னப் போது அவர்கள் எனது வலைத்தள முகவரி, தொலைப்பேசி எண், வீட்டு முகவரி கேட்டு கொண்டனர். இதில் ஆச்சிரியம் என்னவென்றால் நான் சொன்ன பதில் எதுவுமே சரியானது இல்லை என்று கூறி எனக்கு பயண சீட்டை கொடுக்காமல் இருந்து விட்டனர். அவர்கள் கூறிய பதில் தான் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த பயண சீட்டு வலைத்தளத்தில் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் கைதொலைப்பேசியில் இருந்து பதிவு செய்யப் பட்டது என்றும் முகவரி பெங்களூர் உள்ளது என்றும் கூறி முடித்தனர். இதில் கொடுமை என்னவென்றால் கைதொலைப்பேசியில் இருந்து பதிவு செய்ய எனக்கு தெரியாது. ஆக மொத்தத்தில் அது என் பயண சீட்டா இல்லை வேறோருவருடையாத என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெரியாமல் முழித்துக் கொண்டே மீண்டும் வீட்டை நோக்கி...

ஒரு நாளில் சென்னையில் இருந்து மதுரைக்கு எத்தனை இரயில்கள் போகின்றன, அதில் எத்தனை பேருக்கு பயண சீட்டில் என்ன என்ன பிரச்சனை இருக்கிறதோ என்று நினைத்தால்....

சிறு ஐயம்

சுமார் 15 வருடமாக சனிக்கிழமை அன்று பெருமாள் கோவில் செல்லும் எனக்கு ஒரு சிறு ஐயம்.
நான் எனது வேலையை பொறுத்து பல ஊர்களில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று உள்ளேன். எல்லா கோவிலிலும் ஆண்டாள் சன்னதி மட்டும் பூட்டு போட்டு இருக்கும். இதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்...

சிந்தனை

ஆட்டோவின் பின்னால் செல்பவனுக்கும்,
பெண்ணின் பின்னால் செல்பவனுக்கும்,
அரப்படி லாரியின் முன்னால் செல்பவனுக்கும்,

வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை...

Wednesday, May 20, 2009

ஈழப் போராட்டம்-ஒரு பார்வை...!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே ஈழப் போராட்டம் இருந்தது என்றாலும் கூட பிரபாகரன் தலைமையில் நடந்த போராட்டமும், போர்களும்தான் உலக அளவில் ஈழம் குறித்த பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பின.

தமிழ்ப் புதிய புலிகள் என்ற அமைப்பை பிரபாகரன் தொடங்கியது முதல் இன்று வரை நடந்த ஈழப் போராட்டத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ...

1972: தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பை தொடங்கினார் பிரபாகரன்.

1976: தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பின் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக உருமாறியது.

1983, 23 ஜூலை: யாழ்ப்பாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர், 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1985, 8 ஜூலை: பூடான் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முதல் முறையாக பேச்சுவார்த்தை நடந்தது.

1987, 29 ஜூலை: ராஜீவ் காந்திக்கும், ஜெயவர்த்தனேவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

1990, 24 மார்ச்: 1200 ராணுவ வீரர்களை இழந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை இந்தியாவுக்குத் திரும்பியது.

1990, ஜூன்: அமைதி ஒப்பந்தத்திலிருந்து விலகிய நிலையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த அதிரடித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான போலீஸாரை சுட்டுக் கொன்றனர் விடுதலைப் புலிகள்.

1991, 21 மே: இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்குப் பலியானார்.

1993, 1 மே: கொழும்பில் நடந்த மே தின கூட்டத்தில் அதிபர் பிரேமதாசா மனித வெடிகுண்டுக்குப் பலியானார்.

1995, ஜனவரி: சந்திரிகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டனர்.

1995, ஏப்ரல்: இரு கடற்படைக் கப்பல்களை குண்டு வைத்துத் தகர்த்தனர் விடுதலைப் புலிகள்.

1995, 2 டிசம்பர்: ஈழத் தமிழர்களின் கலாச்சார பெருமை கொண்ட நகரான யாழ்ப்பாணம், இலங்கை ராணுவத்திடம் வீழ்ந்தது.

1996, 31 ஜனவரி: கொழும்பின் மையப் பகுதியில் உள்ள மத்திய வங்கி மீது விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 1400 பேர் காயமடைந்தனர்.

1996, 24 ஜூலை: கொழும்பின் தெற்கில் உள்ள டெஹிவேலா என்ற இடத்தில் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டில் 70 பேர் பலியானார்கள்.

1996, 18 ஜூலை: முல்லைத்தீவில் உள்ள ராணுவ முகாமை விடுதலைப் புலிகள் தாக்கித் தகர்த்ததில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1998, 25 ஜனவரி: கண்டியில் உள்ள புகழ் பெற்ற புத்த கோவிலான தலதா மலிகவா (புத்தரின் பல் இங்கு வைக்கப்பட்டுள்ளது) மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

1998, 26 செப்டம்பர்: கிளிநொச்சி ராணுவ முகாம் மீது நடத்திய புலிகள் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1999, டிசம்பர்: விடுதலைப் புலிகளின் தாக்குதலிலிருந்து அதிபர் சந்திரிகா உயிர் தப்பினார். கண்ணில் கடும் சேதம்.

2000, ஏப்ரல்: யானை இறவை மீட்டனர் புலிகள். இலங்கைப் படைகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

2001, ஜூலை: கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

2002, 22 பிப்ரவரி: நார்வே முயற்சியால் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், பிரபாகரனும் தனித் தனியாக கையெழுத்திட்டனர்.

2002, டிசம்பர்: நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அதிகாரப்பகிர்வுக்கு இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் ஒத்துக் கொண்டனர்.

2003 ஏப்ரல்: ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகியது விடுதலைப் புலிகள் இயக்கம்.

2004, 3 மார்ச்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிரிவு தளபதியான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன், புலிகள் இயக்கத்திலிருந்து விலகினார்.

2005, 12 ஆகஸ்ட்: வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொழும்பில் கொல்லப்பட்டார்.

2005, 4 டிசம்பர்: யாழ் வளைகுடாவில், இலங்கைப் படையினருக்கு எதிராக கண்ணிவெடி மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்தினர்.

2007, மார்ச்: விடுதலைப் புலிகள் தங்களது முதல் விமானத் தாக்குதலை நடத்தி உலகை அதிர வைத்தனர். கட்டுநாயகே விமானதளத்தின் மீது புலிகளின் விமானம் குண்டு வீசித் தாக்கியது.

ஏப்ரல் - 2வது முறையாக விமானத் தாக்குதலை நடத்தினர் புலிகள். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 9 முறை விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் புலிகள்.

2007, 15 ஜனவரி: கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய நகரான வாகரையை ராணுவம் பிடித்தது.

2007, 11 ஜூலை: கிழக்கில் இருந்த புலிகளின் கடைசி நகரான தொப்பிகலாவை ராணுவம் பிடித்தது. கிழக்கு மாகாணம் முழுவதும் ராணுவம் வசம் வந்தது.

2007, 2 நவம்பர்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2008, 2 ஜனவரி: ஜனவரி 14ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக இலங்கை அரசு அறிவித்தது. அன்று முதல் புலிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியது.

2008, செப்டம்பர்: முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இருந்து செயல்பட்டு வரும் அனைத்து மனிதாபிமான குழுக்களும், வெளிநாட்டு ஊழியர்களும் வவுனியாவுக்கு செல்லுமாறு அரசு உத்தரவிட்டது.

2009, 2 ஜனவரி: பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது.

2009, 25 ஜனவரி: முல்லைத்தீவு நகரை ராணுவம் கைப்பற்றியது.

2009, 12 பிப்ரவரி: முல்லைத்தீவின் மேற்குப் பகுதியில் 12 கிலோமீட்டர் பகுதியை போரற்ற பகுதியாக இலங்கை அரசு அறிவித்தது.

2009, 20 பிப்ரவரி: கொழும்பில் விமானம் மூலம் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள்.

2008 மார்ச்: வன்னிப் பகுதியை பிடிக்க ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

2009, 14 ஏப்ரல்: பேச்சுவார்த்தைக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

2009, 20 ஏப்ரல்: 24 மணி நேரத்தில் சரணடைய வேண்டும் என இலங்கை அரசு விடுதலைப் புலிகளை எச்சரித்தது.

2009, 22 ஏப்ரல்: விடுதலைப் புலிகளின் முன்னாள் மீடியா ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர், மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் ஆகியோர் ராணுவத்திடம் சரணடைந்தனர்.

2009, 26 ஏப்ரல்: போர் நிறுத்தம் செய்வதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

2009, 27 ஏப்ரல்: தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்ட கடும் நெருக்கடியைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அரசு அறிவித்தது.

2009, 16 மே: 3000க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது.

மே 18, 2009 - விடுதலைப் புலிகள் வசம் இருந்த கடைசி நிலப் பகுதியையும் பிடித்து விட்டதாகவும், அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது இலங்கை அரசு.

மே 19, 2009 - பிரபாகரன் கொல்லப்படவில்லை, அவர் உயிருடன், நலமாக இருப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது.

- நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, பிரபாகரன் மரணம் குறித்து எதையும் தெரிவிக்காமல் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

- ஆனால் ராஜபக்சே பேச்சை முடித்த சில மணி நேரங்களில் பிரபாகரனின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்த ராணுவம் அதுதொடர்பான வீடியோ படத்தையும் வெளியிட்டு தமிழ் உலகை அதிர வைத்ததது.

 

குறிப்பு: இப்பதிப்பு தட்ஸ்தமிழில் இருந்து எடுத்து போடப்பட்டது. தட்ஸ்தமிழ்க்கு என் நன்றி

Sunday, May 17, 2009

திரைவிமர்சனம்


பசங்க:

நீண்ட நாள் கழித்து குழந்தைகளுடன்/குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் திரு. பாண்டியராஜ் அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. சசி அவர்களுக்கும், வருங்கால இளைய தளபதி/ தளபதி/ தல என்று நடித்த வண்டுகளை கேவலப் படுத்தாமல், கதை நாயகர்களுக்கும் என் பாராட்டுகள்...

சர்வம்:

காதல் காட்சிகளை இவ்வளவு அழகாக காட்டிய இயக்குனர் அவரை பாராட்டினாலும், இப்படத்தில் என்ன தான் இருக்கு என்று தேடி அலுத்து போனது நிஜம்.

ஆர்யா: ஏதோ ஒரு படத்தில், "குடுத்த காசுக்கு மேல குவுருண்ட கோயல" என்ற வசனம் போல, "குடுத்த காசுக்கு மேல நடிக்கின்ராண்ட கோயல" என்ற வரி இருவருக்கு பொருந்தும்.

சர்வம் என்றால் அனைத்தும் அல்லது மொத்தம் என்று பொருள். அதே போல் இப்படத்தை பார்த்து அனைத்தையும் இழந்தது தான் மிச்சம்.

5 வருடம்

மாற்றம் ஒன்று தான் இவ்வுலகில் மாறாமல் இருப்பது என்ற கூற்றுக்கு நான் மட்டும் விதி விலக்கு அல்ல. 3ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு, காலையில் 7மணி அளவில் பெரியார் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு நகரப் பேருந்தில் செல்லும் போது, வாழ்க்கை எப்படி அமையப் போகிறதோ என்ற பயம் என் ஆழ்மனதில் இருந்தது என்பது மறைக்கபடாத உண்மை. 2004 மே மாதம் 7 ம் தேதி, கடைசி பாடத் தேர்வு முடித்துவிட்டு வெளியில் வரும் போது இருந்த பயம் என்னவென்று சொல்ல. மூன்று நாட்கள் கழித்து 11ம் தேதி காலையில் எதிர்காலத்தை நினைத்துக் கொண்டே வலதுக்காலை நானும், என் நண்பனும் சென்னையில் எடுத்து வைத்தோம். எங்களை வழியனுப்ப எனது குடும்பத்தாரும், கல்லூரி நண்பர்கள் சுமார் 35 பேர் வந்து இருந்தனர். இப்போது பின்னோக்கி பார்க்கும் போது அதே மே மாதம் ஆனால் ஆண்டு 2009. பெற்றோர் துணை இல்லாமல் அதுவும் நான் வெறுத்து ஒதுக்கக் கூடிய நகரமான இந்த சென்னையில் 5 வருடம்.

கடந்து வந்த இந்த ஆண்டுகளில் சாதித்தது என்ன என்ற என் மன கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என்னால் மட்டும் அல்ல என் நண்பர்களும் பதில் சொல்ல முடியாமல் திருதிரு முழிப்பது.... :)

குறிப்பு: 5 வருடம் என்பது எனக்கு ஒரு சில மணி நேரமாக தான் தெரிகிறது. ஆனால் மற்றவருக்கு எப்படியோ என்று தெரியவில்லை இப்பதிப்பு என்னுடைய மனதில் உள்ள எண்ணங்களில் சில.

Sunday, May 03, 2009

மரியாதை: திரைவிமர்சனம்

கேப்டன் புரட்சி கலைஞன் விஜயகாந்த் மற்றும் நம்ம விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த மரியாதை பற்றி சில வரிகளில்...

* நடிகர்கள், நடிகைகள், நகைச்சுவை நடிக/நடிகைகள், துணை நடிக/நடிகைகள் என்ற பட்டாளம் அனைவரும் முதியவர்கள்.
* தந்தை, மகன் உறவை சித்திருக்கும் படம்.
* 'வானத்தை போல' போல மனதை வருடும், கண்ணிரை வரவைக்கும் காட்சிகள் இதில் இல்லை என்பது ஆறுதல்.
* மகன் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் பணக்காரன் ஆவது என்பது விக்ரமனின் வழக்கமான காட்சிகள் இதிலும் உண்டு.
* 'இன்பமே' என்ற நாம் எம்.ஜி.ரின் ரீமிக்ஸ் பாடல் மட்டும் மீண்டும் கேட்க தூண்டும் ரகம்.
* நகைச்சுவை என்ற பெயரில் வழக்கம் போல மொக்க நகைச்சுவை... முடியலே..

மொத்தத்தில் ஒரு முறை குடும்பத்துடன் சேர்ந்து காண கூடிய திரைப்படம்...

குறிப்பு: இப்படத்திற்கு மேல் கேப்டன் நடித்தால், பார்ப்பது மிக மிக கடினம்.. எனக்கு அந்த அளவு மன தைரியம் இல்லை என்று நினைக்கிறேன்...

என்ன தவறு செய்தோம்

* மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிAlign Leftல் குடமுழுக்கு
* மதுரை மீனாக்ஷி திருகல்யாணம்
* சித்திரை திருவிழா
* நாடளுமன்ற தேர்தல்

என எல்லா முக்கிய விசேஷங்கள்/விஷயங்கள் வார நாட்களில்...
சென்னையில் வாழ்க்கையை கஷ்டமா சென்று கொண்டு இருக்கும் வேளையில், இந்த மாதிரியான விசேஷங்கள் தரும் சிறு சந்தோசம் கூட இந்த ஆண்டில் இல்லை. விசேஷங்கள் தான் நல்ல நாளில் என்று கூறினாலும், தேர்தல் கூட வார நாளில். என்ன கொடுமை சார் இது...

Friday, May 01, 2009

முதுகலைப் பட்டம்


  • கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு
  • படிப்பு என்றைக்குமே வீண் போகாது

இது போன்ற வாக்கியங்களில் எனக்கும் மிகுந்த நம்பிக்கை. அதனால் தான் என்னவோ எனக்கு நிறையப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு. அதையும் என்னால் முடிந்த வரை செயல்முறைப் படுத்தி வருகிறேன். இந்நிலையில் சென்ற வாரம் தான் முதுகலைப் பட்டத்தின் அனைத்துப் பாடங்களையும் முடித்தேன். ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் பட்டப் படிப்பு சான்றிதல் வரும் என்று எதிர்ப் பார்க்கின்றேன். இதில் எனக்கு துணையை இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்...

திரைவிமர்சனம்

குரு என் ஆளு:

ஒரு முறைக் கூட பார்க்க தகுதியற்ற நிலையில் இருக்கும் இப்படத்தைப் பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை.

 

தநா-07-அல-4777:

எம்ஜியாரின் கார் நம்பர் உடன் பசுபதி, அஜ்மல், சிம்ரன் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் ஒரு நல்ல த்ரில்லர் படம்...

 

அஸ்தா சம்மா(தெலுங்கு):

சுப்ரமணியபுரம் படத்தின் கதாநாயகி சுவாதிதான் இப்படத்திலும் கதாநாயகி... சொல்ல போனால் சுவாதிக்காக தான் இப்படத்தை ஆரம்பித்தேன்...ஆனால் ஒரு முழு நகைச்சுவை, குடும்ப திரைப்படத்தை பார்த்த திருப்தி. ஒரு சில  இடங்களில் தெலுங்கு படம் என நிருபித்தலும் ஜாலியாக பார்க்கலாம்..

 

ரெடி (தெலுங்கு):

 

தெலுங்கில் சூப்பர் ஹிட் படமான "ரெடி" பார்க்கும் போதே தமிழில் இப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்று தெரிந்து கொண்டேன். தெலுங்கு படம் என் தெரிவிக்கும் காட்சிகள் சில இருந்தாலும், ஒரு பெரிய குடும்ப திரைப்படத்தை பார்த்த நிறைவு. இப்படத்திற்கு மிக பெரிய பலமாக இருப்பது "பிரம்ஹண்டம்" நகைச்சுவை தான். சூப்பர்...

 

தி பட்டர்பிலை எப்ட்(ஆங்கிலம்):

 

ஒரு பட்டாம் பூச்சியின் இறக்கை அசைவுக்கு கூட ஏதாவது காரணம் இருக்கும் என்ற கூற்றை வைத்து மனிதனின் நினைவுக்களை மையமாக கொண்ட திரைப்படம். பொறுமையாக இரண்டு முறைப் பார்த்த போதும் கூட சொல்ல வந்த கருத்தை எனக்கு புலப்பட வில்லை. யாருக்குவது தெரிந்தால் சொல்லுங்கள்...