பல திடுக்கிட்டும் திருப்பங்கள் நிறைந்த "திருப்பம்"சிறுகதை போலவே இன்னொன்று எழுத வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு இந்த மழை. மழை பெய்யும் போது ஒவ்வொருக்கும் ஒரு விதமான எண்ணங்கள் இருக்கும். இதே இங்கு நான் எழுத போகிறேன் அதுவும் சில திருப்பங்கள்உடன்
சென்னையில் அப்போதும் சுட்டெரிக்கும் வெயில் இருக்கும் நிலையில் இன்று மட்டும் இருண்ட மேகத்துடன் இருந்தது நான் நாயகனுக்கு ஒரு சின்ன மன மகிழ்ச்சி. காரணம் இன்று தான் முதல் முதலில் வேலைக்கு போகும் நாள். அதிகாலையிலே அலுவகத்திற்கு சென்று வாயிற்படியில் காலை வைக்கும் போது நினைவில்...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டியில் இருந்து பிறந்து வளர்ந்து விவசாயத்தை நம்பி உள்ளபெற்றோர்கள் கஷ்டபட்டு படிக்க வைத்து, நாயகனுக்கும் படிப்பு வராமல்அவனும் கஷ்டபட்டு படித்து நான்கு வருட படிப்பை ஏழு ஆண்டுகள் படித்து சென்னையில் ஒரு வருடம் வேலை தேடி நண்பன் மூலமாக அவன் மூன்று ஆண்டுகளாக பணிபுரியம் இடத்திலே...
மீண்டும் சென்னையில்...
நாயகன் வலது காலை வைக்கும் போது இதோ ஒரு பெண் (அதாவது நமது நாயகி) அவனை இடித்து கொண்டு உள்ளே செல்ல, மழை பெய்ய ஆரம்பிக்கிறது.... கொட்டாம்பட்டியில் மழை சாரல் அடிக்க அவனது பெற்றோர் மகன் வேலை செல்லும் நேரத்தில் மழை என்பதால் நல்ல நேரம் என்று நினைக்க...
கற்பனை செய்யும் நானும் தமிழன் தான் அதனால்.. சென்னையில் அதே நேரத்தில்நாயகனின் வாழ்க்கையில் ஒரு திருப்பம்...மகிழ்ச்சியுடன் அவள் அழகை எண்ணிக் கொண்டே ஒரு காதல் பாடல் அவனது எண்ணத்தில்.. பாடல் முடியும் போது... மீண்டும் அவள் அலுவக வாயிற் வெளியில் செல்ல, நம்ம நாயகனின் கண்ணும் வெளியே பாய்கிறது..
மீண்டும் ஒரு திருப்பம்....
நாயகியின் நான்காவது வகுப்பில் படிக்கும் குழந்தை தோளில் புத்தக பையுடன் அம்மா என்று நாயகியை கூப்பிட... மழை இடியுடன் பெய்ய ஆரம்பிக்கிறது. அப்போது அவனது கண்ணீர் மழையில் கலக்க, அத்துடன் தன்னக்க உலகமே அழுவதாக நினைக்க....
சற்று தூரத்தில் இருந்த வந்த அவனது நண்பனும் அவர்களுடன் பேச... நண்பனின் மனைவி என்று நினைத்து வெட்கத்தில் திரும்பி இருக்கைக்கு செல்கின்றான்.நண்பன் நமது நாயகி உடன் வந்து நாயகனுக்குமனைவி அல்லகாதலி என்று அறிமுகம் செய்ய..நண்பன் திடுக்கிட...
மீண்டும் ஒரு திருப்பம்...
அக்குழந்தை அனாதை என்றும் நாயகி தத்தெடுத்து வளர்பதகவும் கூற நாயகனின் கண்ணீர் மேலும் அதிகரிக்கிறது. நண்பன் அதை ஆனந்த கண்ணீர் என்று நினைக்க, ஆனால் அக்கண்ணீர் தான் செய்த தவறுக்காகவும்,உண்மையில் அக்குழந்தை நாயகனுக்கும் நாயகிக்கும் அவர்களின் சொந்த ஊரில் இருந்த நட்பின் போது பிறந்த குழந்தை என்றுநினைக்கஅவனது உடலில் மின்னல் பாய்கிறது