Showing posts with label வைகை. Show all posts
Showing posts with label வைகை. Show all posts

Wednesday, March 03, 2010

வெயில்???



இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே கூவம் சென்னையிலும் சரி, வைகை மதுரையிலும் சரி வெயில் கொடுமை தாங்க முடியல...இப்பவே இப்படினா, அப்ப ஏப்ரல், மே  மற்றும் ஜூன் மாதத்தில் எப்படி சமாளிக்க போறோமே...

ஐடியா மணி பலர் இருக்காங்க... சுட்ட தணிக்க எதாச்சு ஐடியா சொல்லுங்களேன்

Saturday, December 12, 2009

உண்மை தானே...

சென்னையில் இருந்து பொதிகை, நெல்லை, அல்லது பாண்டியன் விரைவு ரயில்களில் மூலமாக, மதுரைக்கு புறப்பட்டு எழும்பூர் அல்லது தம்பரத்தை விட்டு செல்லும் போது, எதோ ஒரு நிம்மதி...

அதுவே, "மதுரை சந்திப்பு" என்று மதுரை ரயில் நிலையத்தில் அந்த பலகையை பார்க்கும் போது, நமக்கே தெரியாமல் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி, முகத்தில் ஒரு புன் சிரிப்பு.. இந்த மகிழ்ச்சிக்கும், சிரிப்புக்கும் எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு ஆகாது... இத்தனைக்கும் தலைநகர் சென்று ஐந்து ஆண்டுகள் மேல் ஆகி விட்டது..அதுக்கு உரிய காரணம் அனுபவித்தல் மட்டுமே புரியம்..

ஞாயிறுக்கிழமை அன்று நெல்லை அல்லது பாண்டியன் விரைவு ரயில்களில் மூலமாக சென்னைக்கு செல்லும் வழியில், ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து மதுரையை விட்டு, வைகை பாலத்தை தாண்டும் போது இருக்க கூடிய முகம் சொல்லில் அடங்க சோக முகம்...இதையும் அனுபவித்தல் மட்டுமே புரியம்..

இந்த பதிவு எந்த அளவு உண்மை என்பதில் எனது நண்பன் செந்தில் அவர்களுக்கு தெரியும்...

Saturday, September 12, 2009

வைகை – திரைவிமர்சனம்


எண்ணங்களை பயிரிடும் இந்த பதிவு எனது 100 பதிவு என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுப்பண செலவில் வரும் படங்கள் கூட நல்ல படம் என்பதை சமீபகாலமாக பல படங்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. அப்பட்டியலில் இத்திரைப்படத்தை கண்டிப்பாக சேர்க்கலாம். நல்ல விளம்பரங்கள் இல்லாததாலும் மற்றும் வந்ததும்/போவதும் என  இருப்பதால் படம் ஓடாமல் போய் விட்டது..
கதை: தன் காதலுக்காக உயிரை விடும் காதலன்..
ஒரு வரி கதை என்று கூறினாலும், எடுக்கப் பட்ட எதார்த்தம் கதையை உயர்த்தி விடுகிறது.மதுரை திருமங்கலத்தை சுற்றி கதைக்களம் ஓடுகிறது. கதாநாயகன் பாலா மற்றும் கதாநாயகி விஷாகா இருவருக்கும் நல்ல அறிமுகத்தை இப்படம் கொடுக்கிறது. மற்ற மண்ணின் மைந்தர்கள் அனைவரும் பார்த்த முகங்கள் தான். "ஆயிரம் தாமரை மொட்டுகளே" பாடல் கேட்டும் போது இளையராஜாவின் அருமை இங்கு தெரிகிறது. இப்பாடலை தவிர மற்றொருப் பாடல் கேட்டும் ரகம்.
மொத்தத்தில் மதுரையை மையப்படுத்தி எடுக்கப் படும் படங்கள் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் திரைப்படம் வைகை.