Saturday, September 12, 2009

வைகை – திரைவிமர்சனம்


எண்ணங்களை பயிரிடும் இந்த பதிவு எனது 100 பதிவு என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுப்பண செலவில் வரும் படங்கள் கூட நல்ல படம் என்பதை சமீபகாலமாக பல படங்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. அப்பட்டியலில் இத்திரைப்படத்தை கண்டிப்பாக சேர்க்கலாம். நல்ல விளம்பரங்கள் இல்லாததாலும் மற்றும் வந்ததும்/போவதும் என  இருப்பதால் படம் ஓடாமல் போய் விட்டது..
கதை: தன் காதலுக்காக உயிரை விடும் காதலன்..
ஒரு வரி கதை என்று கூறினாலும், எடுக்கப் பட்ட எதார்த்தம் கதையை உயர்த்தி விடுகிறது.மதுரை திருமங்கலத்தை சுற்றி கதைக்களம் ஓடுகிறது. கதாநாயகன் பாலா மற்றும் கதாநாயகி விஷாகா இருவருக்கும் நல்ல அறிமுகத்தை இப்படம் கொடுக்கிறது. மற்ற மண்ணின் மைந்தர்கள் அனைவரும் பார்த்த முகங்கள் தான். "ஆயிரம் தாமரை மொட்டுகளே" பாடல் கேட்டும் போது இளையராஜாவின் அருமை இங்கு தெரிகிறது. இப்பாடலை தவிர மற்றொருப் பாடல் கேட்டும் ரகம்.
மொத்தத்தில் மதுரையை மையப்படுத்தி எடுக்கப் படும் படங்கள் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் திரைப்படம் வைகை.

No comments: