Sunday, September 06, 2009

நினைத்தாலே இனிக்கும் - திரைவிமர்சனம்

கல்லூரி வாழ்க்கை முடித்து 8 வருடங்களுக்கு பிறகு நண்பனின் ஆத்மா சாந்திக்காக வரும் நண்பர்களில் ஒருவரை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. கொலையை யார் செய்ய முயற்சித்தது மற்றும் அதன் பின்னணி என்ன என்பதே கதை..

மலையாள திரைப்படம் ஆனா "கிளாஸ்மேட்" சற்று திரைக்கதையை மாற்றி இத்திரைப்படத்தை எடுத்து உள்ளனர். ஆனால் அந்த திரைப்படத்தின் வெற்றி ரசசியம் இதில் இல்லை.

காதல், சண்டை, கல்லூரி தேர்தல், மற்றும் வகுப்பறைகள் என காட்டினாலும் உண்மையான கல்லூரி அனுபவம் இல்லை என்பதே உண்மை. பிரித்திவிராஜ் நாயகனை கல்லூரியில் பார்ப்பது சிரமம் தான் என்றாலும், அதுவும் அதிரடி நாயகனாக இப்படத்தில் உடனடியாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. நடிகை பிரியாமணி பற்றி சொல்ல எதுவும் இல்லை. டம்மி பிஷ்சாக பிரபுவை பயன்படுத்துவது போல் இம்முறை திரு. பாக்கியராஜ் அவர்களை பயன்படுத்தி உள்ளனர். ஆனால் அவர் பகுதிக்கு நன்கு தான் நடித்து உள்ளார் என்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும். இரண்டு பாடல்கள் கேட்கும் விதம்.

மொத்தத்தில் நினைத்தாலே இனிக்கும் என்பது நினைத்தாலே கசக்கும்.

No comments: