Sunday, September 06, 2009

மதுரை புத்தகத் திருவிழா

"நல்ல பத்தகங்கள் நல்ல நண்பர்கள்" என்பதை மதுரை மக்கள் 4வது முறையாக நிருபித்துக் கொண்டே உள்ளனர். மதுரையில் புத்தக திருவிழா - தமிழ் நாடு அளவில் இந்த விழா மதுரை தமுக்கும் மைதானத்தில் நடைப் பெறுகிறது. எழுத்தாளர்களின் உயிர், கவிஞர்களின் கற்பனை நதிகள் என பார்த்தால் எண்ணில் அடங்கா புத்தங்கள். கண்கள் மலைத்தது...மனம் அலைபாய்ந்தது. 150 பதிப்பகங்கள் மேலாக இருந்தும் ஆனந்த விகடன், உயிர்மை, கிழக்கு, கண்ணதாசன், மல்லிகை மற்றும் நக்கீரன் என சில பகுதிகளில் மட்டுமே நம்மை இழுத்தது. கல்கியின் "பொன்னியின் செல்வன்" புத்தகம் ரூ.210 என்பது நல்ல தள்ளுபடிக்கு உதாரணம். நான் விரும்பும் எழுத்தாளர்கள் உடன் படிக்க வாங்கிய புத்தகங்கள்..

பொன்னியின் செல்வன்
கி.மு. கி.பி - மதன்
ப்ளீஸ், இந்த புத்தகத்தை வாங்கதிங்க - கோபிநாத்
சரியான முடிவெடுக்க- ராபர்ட் ஈ. குந்தர்

No comments: