Saturday, September 12, 2009

முன்னோருக்கு முன்னோர்கள்


ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், அரசன் எவ்வாறு ஆள வேண்டும், எது அதர்மம் எது தர்மம் என்பதை சொல்ல பல அறநெறிகள் இருந்தாலும், முக்கியமாக நான் கருதுவது வரலாறு/காவியம் ஆன ஒன்றே ஒன்று "மகாபாரதம்" மட்டும் தான். இராமாயணம், திருக்குறள் என்று பல இருந்தாலும் 4 முதல் 5 தலைமுறைகள், அரசியல், பண்பாடு, நாகரீகம், குரு மரியாதை, படிக்கும் முறை, வாழ்க்கை, கோவில் வழிபாடு முறைகள், யுத்த முறைகள், 64 கலைகள்  என அனைத்தும் அடங்கிய ஒரே பொக்கிஷம் இந்த மகாபாரதம்.


உலக அளவில் இந்த வகையான வரலாறு/காவியங்களைப் பற்றி பார்த்தால், கிடைப்பது கிரேக்கர்களின் 'இலியத்'. இதை பற்றி எனக்கு தெரிந்திர விட்டாலும் போற்றப்பட  வேண்டியது என்பது என் செவிஅறிவு. ஆனால் இப்போது ஒரு ஆச்சிரியப்பட்ட விஷயம் இராமாயணம், மகாபாரதம் மற்றும் இலியத் போன்ற வரலாறு/காவியங்களுக்கு எல்லாம் கொள்ளுத்தாத்தாவாக  ஒரு காப்பியம்  இருப்பதாக படித்தது. அக்காவியத்தின் பெயர் 'கில்கெமெஷ்' காப்பியம். பாபிலோனியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு (குறிப்பாக கி.மு.2700 ) வாழ்ந்த நிஜ கதாபாத்திரம் கில்கெமெஷ் என்பது உண்மையான ஆச்சிரியம். இந்த காப்பியத்திலும் மக்களை காப்பாற்ற கடவுள் தனிபிறவிகளை படைத்தது, மங்கையை வைத்து ஞானத்தை அழிப்பது, யுத்த தந்திரம் என அனைத்தும் அடங்கிய ஒரு காப்பியம். இதைப் பற்றி தெரிந்து கொள்ள வரலாற்றை புரட்டுங்கள்..

3 comments:

ramgoby said...

ஹாய் நிர்மல் உங்களைபோலவே நானும் வைரமுத்துவி கவிதையால் ஈர்க்கப்பட்டவன்.உங்கள் பிளாக் மிகவும் அருமை

ramgoby said...

ஹாய் நிர்மல் உங்களைபோலவே நானும் வைரமுத்துவி கவிதையால் ஈர்க்கப்பட்டவன்.உங்கள் பிளாக் மிகவும் அருமை

Anonymous said...

ஹாய் நிர்மல் உங்களைபோலவே நானும் வைரமுத்துவி கவிதையால் ஈர்க்கப்பட்டவன்.உங்கள் பிளாக் மிகவும் அருமை