Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Friday, November 02, 2012

கனடா - நிறைவு



மொண்ட்ரியல் (Montreal) - ஒட்டவா நகரத்தை விட பெரிய நகரம் மற்றும் பழமையானது என்றும், ரோமானிய மக்களால் அமைக்கபட்டது என்றதும், அழகாக இருக்கும் என்று கேட்டு, அதற்கு பயணம் ஆனேன். முதல் முறையாக கனடாவில் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். இரண்டு மணி நேரம் பயணம். நகரத்தை அடையும் போது பிரெஞ்சு மொழியின் ஆதிக்கம் தெரிந்தது. ஆம் எல்லா ஓட்டுன பலகைகளும், கடைகளின் பெயரும், பெயர் பலகைகளும் பிரெஞ்சு மொழியில். இரண்டு நிமிடம் ஆடி போய் விட்டேன் என்று கூற வேண்டும். முதலில் நான் செல்ல நினைத்த இடம், மவுண்ட் ராயல் பார்வை (view). கிட்டதட்ட இரண்டு மணிநேரம் போராடியும்,என்னால் அந்த இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியாக, டாக்ஸியை பிடித்து கொண்டு போனேன். வண்டி ஓட்டுனர் ஒரு பாகிஸ்தான். இவர் கனடா வந்து இருவது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்று அவர் வரலாற்றை பற்றி கூறி கொண்டே,மொண்ட்ரியல் பெருமையை செல்லி கொண்டே வந்தார். பிரெஞ்சு மொழி இல்லாமல் இவ்வூரில் வாழ முடியாது என்றும், அப்பகுதி மக்கள் ஆங்கிலத்தில் கேட்டால் உதவ மாட்டார்கள் என்று கூறினார். பிரெஞ்சு மொழியின் ஆதிக்கம் இங்கு தான் ஆரம்பம் ஆகிறது என்றும், அடுத்த நகரமான குபெக் ("Quebec") சென்றால் அந்த மக்கள் ஆங்கிலத்தை அறிய மாட்டார்கள் என்று கூறினார்.   நாங்கள் சென்ற மவுண்ட் ராயல் மலையில் இருந்து, அந்நகரத்தை முழுமையாக காண முடியும். அழகை ரசிக்க முடியும். அங்கு இருந்து  செயின்ட் ஜோசப்  ஓரடோரி ("Saint Joseph Oratory")  சென்று ஏசு நாதரை தரிசித்து விட்டு, பழைய மொண்ட்ரியல் இடத்திற்கு சென்றோம். அந்த இடம் முழுவதும், ரோமினிய கட்டிடங்களும், தெருக்களும்,கடைகளும் என்று அழகை ரசிக்க வைத்தன. இலையுதிர் காலம் என்பதால், நகரம் முழுவதும் ஆரஞ்சு நிறமாக காட்சி கொடுத்தது. இந்நகரிலும் எட்டு கனடிய டாலருக்கு, நகர் முழுவதும் ரயிலில் மற்றும் பேருந்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அதுவும் இந்த இடத்திற்கு இந்த பேருந்து/ரயில் வரும் என்று இருந்தால், அந்த நேரத்திற்கு கண்டிப்பாக வந்து சேரும் அளவிற்கு பொறுப்பான திட்டம் இருந்தது. ஒட்டவா நகரத்தை விட மக்கள் தொகை அதிகம் என்பதால், எங்கு சென்றாலும் பேருந்தில் கூட்டம். கனடாவில் குறிப்பாக டொராண்ட மற்றும் ஒட்டவாவில் இலங்கை தமிழ் மக்கள் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணம் வரும் போது, பேருந்தில் இந்திய மக்களை காண முடிந்தது. அதே போல் முதலில் நான் சென்ற மவுண்ட் ராயல் பகுதியில், தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்ட பெயர் பலகை காண முடிந்தது. தமிழ் மக்கள் பிரெஞ்சு மொழியை படித்து விட்டு அங்கு வாழ்கிறார்கள் என்று பார்க்கும் போது, ஆச்சிரியமான விஷயம் தான்.






ஹிந்து கோவில் - ஒட்டவா: - வந்த வேலை நல்ல படியாக முடிந்ததே மற்றும் முடிந்தவரை எல்லா இடங்களையும் பார்த்தாகிவிட்டது, அதனால் கோவில் எங்கு இருக்கும் என்று தேடி ஒரு வழியாக  கண்டுபிடித்தேன். நான் தங்கி இருந்த இடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம். நான் செல்ல நினைத்த இடம் வைத்திஷ்வரம் கோவில். இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் கோவில். ஆனால் இந்த இடத்திற்கு பேருந்து இல்லை. அதனால் மற்றொரு ஹிந்து கோவிலுக்கு சென்றேன். பேருந்தில் இருந்து இறங்கி இருவது நிமிடம் நடக்க வேண்டும் அதுவும் நெடுந்தூர சாலையில். ஏன் தான் சென்றோம் என்ற நிலைமைக்கு வந்து விட்டேன். வடஇந்திய மக்களால் நடத்தப்படும் கோவில் என்பதால், அதன் அமைப்பும், பூஜைகளும் அவ்வாறே இருந்தன. மீண்டும் நெடுந்தூர சாலையில் நடக்க வேண்டும் என்ற போது, அங்கு உள்ள ஒரு நபரிடம் விசாரித்தேன். இப்போது இன்னொரு நபர் அவ்வழியில் செல்வதால், அவருடன் சேர்ந்து கொள்ளவும் என்று கூறி அனுப்பி வைத்தனர். என்னை பேருந்து நிலையத்தில் இறக்கி விடும் என்று உதவ வந்த பெரியவர் "சிவம் பரமேஸ்வரன்". கொச்சியில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, கனடாவில் ஐம்பது வருடமாக இருப்பவர். கோவில் நிர்வாகிகளில் அவரும் ஒருவர். என்னடா வந்து ஐந்து நாட்கள் ஆகி விட்டதே, இதுவரை தமிழ் பேசும் மக்களை பார்க்கவில்லையே என்ற எண்ணத்தை முடித்து வைத்தார். என்னை பற்றி நன்கு விசாரித்து, முன்பே தெரிந்து இருந்தால் என் வீட்டில் தங்கி இருக்கலாம் என்று கூறி ஒரு புத்துணர்ச்சி கொடுத்தார். அதே போல் அடுத்த முறை, ஒட்டவா வருவது என்றால் கண்டிப்பாக அவர் வீட்டில் தங்க வேண்டும் என்று கூறி, என் இடத்திற்கு செல்லும் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்பதை மீண்டும் ஒரு முறை நினைத்து கொண்டேன்.  


நான் கடந்த மூன்று ஆண்டுகளில்,பல பயணத்தில் ஈடுபட்டு உள்ளேன். ஆனால் இந்த கனடா பயணம் சிறந்த பயணமாகும். ஒரு வேலை நான் தனியாக வந்து, பல இடங்களையும் பல புது மனிதர்களையும் பார்த்தால் கூட இருக்கலாம். நான் மீண்டும் கனடா வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. அதனால் இந்த இந்த பயணம் எனக்கு ஒரு மைல் கல் ஆகும்.

Thursday, November 01, 2012

கனடா


பள்ளி வயதில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வாரம் ஒருமுறை சென்னையை பற்றி போடும் போது, சென்னைக்கு எப்போது சொல்வோம் என்று இருக்கும். அதற்கு காரணம், அந்த நிகழ்ச்சியை  கொடுக்கும் விதம் தான் என்று சென்னைக்கு வந்த பின் தான் தெரிந்தது. அதே போல் அமெரிக்கா மீதான கனவு கூட எப்போதவது வரும். கணிபொறி துறையில் வேலை பார்க்கும் காரணத்தால் என்னவோ, அமெரிக்கா மீது மோகம் வந்து என கூறலாம். சிறிது நாட்கள் செல்ல, அமெரிக்காவின் மோகத்திற்கு காரணம் டாலர் என்று தெரியவந்தது. அமெரிக்கா வந்தபின் இங்கு இருக்கும் மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் என்று அறிய முடிந்ததது. இவர்களும் நம்மூர் மக்களை போல தான். ஒரே ஒரு வித்தியாசம் நம் மக்கள் சொந்த வாழ்க்கையை பற்றி இளம் வயதில் யோசிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் இவர்கள் நாற்பது வயதை தொட்ட உடன் தான், சொந்த வாழ்க்கையை பற்றி சிந்திப்பார்கள். என்னுடன் வேலை பார்க்கும் சில மக்களுடன் பேசும் போது, அவர்களும் சொந்த மாநிலத்தை தவிர எங்கும் சென்றது கிடையாது என்று கேள்வி பட்டேன். ஆனால் நம்மூர் மக்கள் தான், இங்கு வந்தவுடன் கிழக்கில் இருந்து மேற்கும், தெற்கில் இருந்து வடக்கும் என்று அனைத்து இடங்களையும் பார்க்கின்றனர். இதே மக்கள் நம் நாட்டில், தன்னுடைய சொந்த மாநிலத்தை தாண்டி இருக்க மாட்டார்கள். ஆக மொத்தத்தில், பயணம் சென்று பார்க்கும் போது உலக மக்கள் எல்லோரும் ஒன்று தான். வேலை விஷயமாக செல்லும் இடத்தில் மட்டுமே இந்த சுற்றுலா திட்டம் அமைகிறது. 

கனடா - நான் ஒரே ஒரு முறை செல்ல நினைத்த நாடு. ஆம், அமெரிக்காவில் உள்ள
 நயாகரா நீர் வீழ்ச்சியை காணும் போது, கனடாவில் இருந்து பார்த்தால் இதை விட நன்றாக இருக்கும் கூறும் போது, நாம் ஏன் கனடா சென்று பார்க்க கூடாது என்ற எண்ணம் வந்தது. ஆனால், அதற்கு நான் தாயராக இருந்தாலும், என்னுடன் வந்த நண்பர்களின் அமெரிக்கா சென்று வரும் உத்தரவு தாள்களில் ஏதே பிரச்சனை என்பதால், கனடாவின் கனவு அங்கேயே கொல்லப்பட்டது. இதற்கு மேல், நாம் எங்கே பிற நாடுகளுக்கு செல்ல போகிறோம் என்று நினைத்து இருந்த வேளையில், எனக்கும் ஒரு வாய்ப்பு வர நானும் கனடா செல்ல ஆயுத்தம் ஆனேன். இதில் பெரிய கொடுமை நான்  தனியாக செல்லவது தான். கனடாவும் அமெரிக்காவை போல தான் என்று கூறி என்னை நானே சமாதனம் செய்து கொண்டேன் என்பது தான் உண்மை. 

ஒட்டவா - கனடாவின் தலைநகரம். நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அரசு அருங்காட்சியகம் மற்றும் மற்ற நாடுகளின் தூதரகங்கள் என்று அனைத்தும் அரசு சம்மந்தபட்ட அலுவலகங்கள். ஏற்கனவே நான் அமெரிக்காவின் தலை நகரமான வாஷிங்டான் டி.சி. சென்று நான் வெறுத்து போயிருந்தேன். காரணம் எங்கு சென்றாலும் அருங்காட்சியகம். வெள்ளை மாளிகை மட்டும் தான் பார்க்க வேண்டிய இடமாக இருந்தது. ஆனால் வெள்ளை மாளிகையை ஒரு மைல் தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும். அதனால் கனடாவின் தலைநகரம் சென்றால் இதே பிரச்சனை இருக்கும் நினைத்த என் எண்ணத்தை தவறு என்று நீருபித்தது இந்த ஒட்டவா. நான் சென்ற காலம் இலையுதிர் காலம் என்பதால் அனைத்து மரங்களும் ஆரஞ்சு நிற இலைகளுடன் நகரை மிக அழகாக காட்டியது. அதே போல் நான் தங்கி இருந்தது மத்திய நகரத்தில் என்பதால் நம்மூர் போன்ற பொது பேருந்துகளை நகரம் முழுவதும் பார்க்க முடிந்தது. ஆனால் பொது பேருந்துகளை இவ்வளவு அழகாக பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை இங்கு பார்த்து தான் அறிந்து கொண்டேன். எளிய மக்களின் வாழ்க்கை முறை இங்கு ப்ய்வர்ட் மார்க்கெட்ல் பார்க்க முடிந்தது. ஆம், மதுரையில் உள்ள தெற்குவாசல் மார்க்கெட் போல தான் இங்கும் ப்ய்வர்ட் மார்க்கெட். ஆனால் இங்கு இந்த மக்களின் வாழ்க்கை முறை படி அனைத்தும் மிக அழகாக வைத்து விற்க பட்டு கொண்டு இருந்தது.  நாடாளுமன்றத்தில் உள்ளே செல்லும் அனுமதியும், இங்கே இருக்கும் சுற்றுலா மக்களுக்கு. பக்கத்தில் சென்று அதன் அழகை ரசிக்கும் திருப்தி எனக்கு கிடைத்தது. அதே போல் உச்சநீதிமன்றத்தையும் நாம் போய் பார்க்கலாம். நான் என்னுடைய வேலைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் நாடாளுமன்றத்தை தாண்டியாக வேண்டும். முதல் நாளில், சென்று திரும்பும் போது, நாடாளுமன்றம் வாயிலில் பேருந்து நிற்கும் இடத்திற்கு அருகில் வரும் போது என்னையும் சேர்ந்து மொத்தம் ஐந்து பேர் மட்டுமே நாடாளுமன்றம் வாயிலில் நிற்கிறோம். தீடிர் என்று இருபதற்கும் மேலான காவல் துறையினர் இரண்டு சக்கர வாகனத்தில் வரிசையாக வந்து நின்றனர். நான் நின்று இருந்த இடத்திற்கு அருகில் அனைத்து வானகங்களையும் ஒரு நிமிடத்தில் காலி செய்து விட்டனர். அடுத்த நிமிடத்தில் வரிசையாக எட்டு கார்கள் எங்கள் அருகில் சென்றன. கனடாவின் பிரதமர் என்று நினைக்கிறேன். பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. கனடாவின் பிரதமர் என் அருகில் காரில் போகிறார். மீண்டும் ஒரு நிமிடத்தில் பழைய படி போக்குவரத்து சரியானது. ஒரே ஒரு முறை தமிழ்நாட்டை நினைத்து பார்த்தேன். 







மொண்ட்ரியல் - பிரான்ச் பேசும் மக்களின் ஆதிக்கம் இங்கு இருந்து தான் ஆரம்பம் ஆகிறது. 
நாளை தொடரும்...

Wednesday, October 17, 2012

எதிர்பாரா மாறுதல்கள்


கடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் சொந்த வாழ்க்கை முறையிலும் சரி தொழில் முறையிலும். அதனால் தான் வலைபதிவு பற்றி நினைத்து பார்க்க முடியாத சூழ்நிலை. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல்கள், தீடிர் அமெரிக்க பயணம், வேறுபட்ட தொழில் பழக்கங்கள், புது மனிதர்கள், சென்ற முறை போல் அமையாத அமெரிக்க வாழ்க்கை முறை, மற்றும் மியாமி பயணம் என்று பல அனுபவங்கள். எதையும் என்னால் விளக்கமாக எழுத முடிய சூழல் மற்றும் நேரம் இல்லாமை. அமெரிக்கா வந்தே மூன்று மாதங்கள் ஆகி விட்டன என்று என்னால் கூட நம்ப முடியவில்லை. 



மீண்டும் வலைபதிவில் மீண்டு வருவேன் என்ற எண்ணம் இருக்கிறது. காலத்தில் கையில் பதில்

Thursday, December 22, 2011

மீண்டும் மீண்டும்...VI (நயாகரா பயணம்)


இந்தியாவில் இருக்கும் போது, அதுவும் படிக்கும் காலத்தில் தமிழ்நாட்டை தவிர என்ற மற்ற மாநிலங்களுக்கு சென்றது இல்லை. ஆனால் வேலைபார்க்கும் போது தென் இந்தியாவில் இருக்கும் நான்கு மாநிலத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதை தவிர இந்தியாவில் வேறு எங்கும் செல்லவில்லை. ஆனால் டாலர் தேசத்தில் இருந்த ஒன்றரை வருடங்களில், எத்தனை மாநிலங்களுக்கு சென்று இருக்கிறோம், எந்த இடங்களை பார்த்து இருக்கிறோம் என்ற பட்டியலே தனியாக இருக்கும். சென்னை வந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டதால், நான் சென்ற அனைத்து மாநிலங்களையும் நினைவு படுத்துவதற்குள் போதும் போதும் என்ற நிலை. இதோ நான் சென்று வந்த பட்டியல்.

1.   அரிசோனா (Arizona)
2.   அர்கன்சாஸ், (Arkansas)
3.   இல்லினோயிஸ், (Illinois)
4.   ப்ளோரிடா, (Florida)
5.   ஜார்ஜியோ (Georgia)
6.   இண்டியன, (Indiana)
7.   கன்சாஸ், (Kansas)
8.   மிஸ்ஸெளரி, (Missouri)
9.   நெவட, (Nevada)
10.  நியூ ஜெர்செரி (New Jersey)
11.  நியூயார்க்  (New York)
12.  ஒக்ளஹோம, (Oklahoma)
13.  டென்னிசி (Tennessee)
14.  டெக்சாஸ் (Texas)
15.  வாஷிங்டன் டி.சி. (Washington DC)
16.  வெஸ்ட் விர்ஜினியா (West Virginia)

கீழே இருக்கும் மாநிலங்கள், வேறு மாநிலத்திற்கு செல்லும் போது கடந்து போன பாதை தவிர, அங்கு சென்று வேறு எதையும் பார்க்கவில்லை.

17.  ஓஹயோ, (Ohio)
18.  மேரிலன்ட், (Maryland)
19.  பென்ன்ச்யல்வானியா, (Pennsylvania)
20.  டெலவாரே (Delaware)

இங்கு இருக்கும் அனைத்து மாநிலங்களிலும், ஏதாவது சிறப்பு வாய்ந்த விஷயங்களை பார்த்து இருப்பேன். ஒரு வருடம், ஐந்து மாதங்கள் ஆகியும் நான் செல்ல நினைத்த இடம் நயாகரா நீர்விழ்ச்சி, அமெரிக்காவில் இருந்து கிளம்புவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், நயாகராவை பார்க்காமல் போகிறேன் என்ற குற்ற உணர்வு என்னை ஆட்டி படைத்து கொண்டே இருந்தது. அமெரிக்காவை விட்டு போய் விட்டால் மீண்டும் வருவோமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்ற நிலையில், இன்னும் கிளம்புவதற்கு மூன்று வாரமே என்று இருந்தாலும், பொறியியல் கல்லூரி நண்பர்கள் மேனன் மற்றும் கார்த்திக் கட்டயபடுத்தியதலும், இரண்டு வாரங்கள் கழித்து நயாகரா செல்வதற்கு அனைத்து பணிகளும் முடிந்தது. நயாகரா சென்று வந்த பின், நான்கு நாட்களில் நான் அமெரிக்காவை விட்டு செல்கிறேன்.

நான் அந்த நீர்விழ்ச்சி செல்ல, எப்போதும் போல் பல இடங்களுக்கு சென்று செல்ல வேண்டிய சூழ்நிலை.

Bentonville, AR -> Little Rock, AR -> Memphsis, TN -> Cleveland, OH -> Buffalo, NY

Buffalo, NY -> Clevelan, OH -> Chicago, IL -> Little Rock, AR -> Bentonville, AR

நயாகராவை அடைந்த பின் தான், எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வந்து விட்டது. ஆம் நான் அடைந்த இடம் இந்தியாவில் இருக்கும் எதாவது ஒரு சுற்றுலா பகுதியா என்ற கேள்வி, என்னை மட்டும் இல்லாமல் என்னுடன் வந்து இரு நண்பர்களுக்கும் தான். எங்கு பார்த்தாலும் இந்திய மக்கள், இந்திய மக்கள் நடத்தும் கடைகள், உணவு கடைகள். ஆச்சிரியம் தான். நாங்கள் சென்ற முதல் அன்று 65  சதவீதம் இந்திய மக்கள். மிச்சம் இருந்தவர்கள் சீனா, அமெரிக்க, கொரிய மற்றும் மற்ற உலக மக்கள்.

நீர்வீழ்ச்சியை அடையும் போது "உலகம் எவ்வளவு அழகானது என்பதை அறிய சிறந்த இடம் நயாகரா" என்று கூறுவது மிகையல்ல. அந்த அழகிய பகுதியின் இயற்கை அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என்னால் எடுக்கப்பட்ட சில இடங்கள்.









முதல் உச்சகட்டம்:

இதை பார்க்கும் போது, ஏற்பட்ட அனுபவங்கள் தவிர ஒரு கப்பலில் நயாகரா அருவின் பக்கத்தில் கொண்டு சென்றனர். இந்த பயணத்தில் முதலாவது உச்சகட்டம்




இரண்டாவது உச்சகட்டம்:

உலகமே பார்க்க துடிக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சியில்,  அருவின் ஒரு மூலையில் தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது. அங்கே அருவியை கடந்து செல்ல முடியாது. அமெரிக்காவின் தொழில் நுட்பம் அங்கு தான் தெரிகிறது. அருவின் ஒரு புறத்தில் இருக்கும் மலையை குடைந்து,  மலைக்கு அடியில் வழியை அமைத்து, மெதுவாக தண்ணீர் விழும் இடத்தில் கொண்டு இறக்கி விடுகின்றனர்.  அந்த பாதையில் நடந்து சென்று, தண்ணீர் விழும் பகுதிக்கு சென்ற உடன், உலகின் மிக அழகிய நீர்வீழ்ச்சியில் நம்மை குளித்துக் கொள்ள முடிகிறது. 
  

நண்பர்கள் மேனன் மற்றும் கார்த்திக் மட்டும் கட்டாய படுத்தாமல் இருந்து இருந்தால், நான் கண்டிப்பாக இந்த பயணத்தை உதறி, வாழ்நாளில் மிக பெரிய தவறை செய்து இருப்பேன். அமெரிக்கா சென்று வரும் மக்கள், நான் நயாகரா போனேன் என்பதை ஏன் பெருமையாக செல்கிறார்கள் என்பது அப்போது தான் புரிந்தது. நயாகரா சென்று வந்ததினால் நானும் பெருமை கொள்கிறேன்.

இத்துடன் மீண்டும் மீண்டும் தொடர் நிறைவுபெறுகிறது

Friday, June 10, 2011

San Antonio,TX - பயணம்


ஊர் சுற்றி பார்க்க சென்று பல நாள் ஆகிவிட்டதே, எங்கு செல்லலாம் சென்று நினைக்கையில் தோன்றியது சண்-அன்டோனியோ. என் இடத்தில் இருந்து 10 மணி நேரம் என்றாலும், நண்பர் கார்த்திக்கும் சேர்ந்து செல்ல வேண்டும் என்றால் 13 மணி நேரம் ஆகி விடும் என்பதால், முதல் நாள் இரவே அவர் வீட்டிற்கு சென்று, அங்கே இருந்தே பயணத்தை தொடரலாம் என்று முடிவு ஆகி, 593 மைல்கள் (954 கிலோ மீட்டர்) என்ற இலக்கை வைத்துக் கொண்டு ஆரம்பித்தோம். நாங்கள் பயணம் செய்த வாரம், 3 நாட்கள் விடுமுறை என்பதால், சாலை செல்லும் அனைத்து இடங்களிலும் கூட்டம். இரண்டு பேர் மட்டும் காரை ஒட்டிக் கொண்டு பத்து மணி நேரத்தில் நண்பர் கிஷோர் வீட்டை அடைந்தோம். நாங்கள் பயணம் செய்த தூரத்தை பார்த்தால், பெங்களூரில் இருந்து மும்பை பயணம் செய்யும் தூரம். அனைத்து இடர்பாடுகளையும் கடந்து பத்து மணி நேரம் என்பது ஆச்சிரிய படகூடிய பயணம் தான்.



அமெரிக்கா வந்து பல மாதங்கள் சென்று விட்டாலும், தண்ணீர் விளையாட்டுகளில் பங்கேற்காத குறை இருந்தது. அதனால் இங்கு கண்டிப்பாக தண்ணீர் விளையாட்டு செல்ல வேண்டும் என்பதற்காக, பல இடத்தை பற்றி விசாரித்து இரண்டை தேர்ந்து எடுத்து,  முடிவு செய்தோம். இன்னொரு நண்பர் மேனன் வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ள, அன்று முழுவதும் தண்ணீர் விளையாட்டுகளில் சென்றது. இங்கு தான் அமெரிக்கா மக்களின் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பதை பார்க்க முடிந்தது.


அடுத்த நாள் கார்பஸ் கிருஷ்டி என்ற கடற்பகுதிக்கு செல்லலாம் என்றும், அதற்கு முன்னால் போர்ட் அர்கன்சாஸ் என்ற ஒரு கடற்தீவுக்கு செல்லலாம் என்ற முடிவாகி, மீண்டும் அங்கிருந்து மூன்று மணி நேர பயணத்தை தொடங்கினோம். இந்த இடத்திற்கு விஷேசம் என்ன வென்றால், இங்கு இருந்து மெக்ஸ்சிகோ என்ற நாடு மிக அருகில். அதனால் மெக்ஸ்சிகோ இன மக்களை அதிகமாக காணமுடியும். அமெரிக்கா வெள்ளை, மற்றும் கறுப்பின மக்களை காணும் போது, மெக்ஸ்சிகோ மக்களை கண்டால், இந்திய மக்களின் நிறத்துடன், நம் மக்கள் போன்ற முக அமைப்பு இருக்கும் என்பதால் ஒரு மகிழ்ச்சி.



இந்த போர்ட் அர்கனசாஸ் செல்ல இரண்டு வழி என்றும், இரண்டு வழியையும் பார்க்க வேண்டும் என்ற முடிவெடுத்து, முதல் வழியை காணும் போது ஆச்சிரியத்தின் உச்சிக்கு என்றேன் என்றால் அது மிகை அல்ல. கடற்தீவிற்க்கு கடலை கடந்து செல்ல வருகின்ற அனைத்து வாகனத்தையும் வரிசையாக நிறுத்தி, ஒவ்வொன்றாக நாமே படகில் ஏற்ற வேண்டும். படகு தீவு கரைக்கு சென்ற உடன், நாமே வாகனத்தை வெளியே எடுத்து கொண்டு செல்ல வேண்டும். இந்த அனுபவம் நான் பார்க்காத ஒன்று என்பதால், வெளியில் சொல்லாத மகிழ்ச்சி.

Sample Jet Skis... Not mine


அங்கு வேறு என்ன செய்யலாம் என்று நினைத்து கொண்டு இருக்கையில், கடலில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டினால் என்ன என்று முடிவெடுத்து, இரண்டு பைக்கை எடுத்துக் கொண்டு கடலில் மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அனுபவத்தை பெற்றேன். நமக்கு நீச்சல் தெரியாது என்ற ஒரு குறை இருந்தாலும், நீச்சல் தெரிந்த மக்களே, கடலை பற்றி ஒரு முறை யோசிக்கும் போது, நீச்சல் தெரியாமல் பைக்கை ஓட்டினேன் என்றால், அது எனக்கு பெரிய விஷயம் தான். சென்னையிலே இந்த மாதிரி அனுபத்தை பெற முடியும் என்ற கேட்ட பிறகு, அதையும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்து ஆகி விட்டது.


நாங்கள் இருப்பது கடற்பகுதி என்பதால், இரவு கடல் உயிர் உணவு. ஹாலிவுட் திரைப்படத்தில் காணும் ஒரு நட்சித்திர உணவு உண்ணும் இடத்தின் அமைப்பு நாங்கள் சென்ற உணவு விடுதி. கடல் போல் அந்த விடுதி. உணவு உண்ணும் இடத்தில் இருந்து பார்த்தால், ஒரு புறம் கடல். மறுபுறம் வானை தொடும் கட்டிடங்கள். நடுவில் அதுவும் கடல் மேல் நாங்கள் இருக்கும் விடுதி. எங்களுக்கு அருகில் அமெரிக்கா வெள்ளை இன மக்கள், மெக்ஸ்சிகோ மக்கள் எங்களுக்கு உதவி செய்கின்றனர். சொல்ல முடியாத ஒரு வித அனுபவம்.


நாங்கள் சண்-அன்டோனியோவில் இருந்து திரும்பும் போது, ஆஸ்டினில் அவரது குடும்பத்துடன் வசிக்கும் எங்களது பொறியியல் கல்லூரி தோழி இந்திரதேவியின் வீட்டிற்கு நானும், தோழர் கார்த்திக்கும் சென்றோம். அவர்கள் உபசரித்த விதம், நிறைவான மதிய உணவு என்று பார்த்த போது, எங்களுடைய பயணம் ஒரு நிறைவாக முடிந்ததாகவே தோன்றியது.

என்னுடைய முன்னால் அலுவலக தோழர் பாஸ்கர் அங்கு தான் தங்கி இருக்கிறார் என்று நேற்று தான் தெரிந்தது. முடிந்தால் அவரையும் ஒரு முறை சென்று பார்த்து இருக்கலாம்.  மீண்டும் பத்து நேர பயணத்திற்கு பிறகு, லிட்டில் ராக் வந்து சேர்ந்தோம். மூன்று மணி நேர தூக்கத்திற்கு பிறகு நான் என்னுடைய இடத்திற்கு திரும்ப மூன்று மணி நேர பயணத்தை தொடங்கினேன்.

Sunday, May 15, 2011

கலவைகள்


அரசியல்:

மக்கள் சந்தோஷ படுவதற்கு காரணம், தி.மு. தோற்றது தான். .தி.மு. வென்றதற்கு அல்லஒட்டு போட்ட மக்கள், தி.மு..வின் தோல்வியை காண, மிகவும் ஆர்வம் கொண்டார்கள் என்பதை, தேர்தல் முடிவை வெளியிட்ட இணைய தளங்கள் செயல் படாமல் போனதில் இருந்தே தெரிந்துக் கொள்ள முடிகிறது.காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தமிழக மக்கள், மத்திய அரசிற்கு தமிழன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை காட்டி, இரண்டு கன்னத்திலும் அறைந்து வெளியே அனுப்பி உள்ளனர். இருந்தாலும் அவர்கள் எப்படி ஐந்து தொகுதிகளை வென்றனர் என்று ஒரு கேள்வி மிச்சம் உள்ளது. வெற்றி பெற்ற அம்மாவிற்கு வாழ்த்துக்கள். அம்மாவிடம் இருந்து எதிர்பார்ப்பது உடனடியாக அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி குறைவு மற்றும் ஈழதமிழனுக்கு ஒரு நம்பிக்கை.

============================

சமீபத்தில் படித்தது:

பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் என்று இரண்டு காவியங்கள் படித்து இருந்தாலும், பார்த்திபன் கனவு என்ற இன்னொரு காவியம் மிச்சம் இருக்கிறதே என்ற எண்ணம் உள்மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது. இப்போது தான் அதை படித்து முடித்தேன். பா.கவும் மிக அருமையான கதை மற்றும் விவரித்த விதம் நம்மை கட்டி போட்டுவிடும்

ஒரு கதை எப்படி எல்லாம் சொல்ல முடியும் என்பதற்கு ஒரு படலத்தை படித்தாலே போதும். அதே போல் சில கதைகள் படிக்கும் போது, அக்கதையில் வரும் கதாபத்திரங்களாகவே நம்மை மாற்றி, நாமும் கதையுடன் பயணிப்போம். அந்த மாதிரியான கதைகள் தான் இம்மூன்றும். பா.கவில் இருக்கும் முதல் சாரம். இதை படிக்கும் போது, கதை விவரித்த விதம் தெரிந்து விடும். படிக்காதவர்கள் கண்டிப்பாக ஒரு முறையேனும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை.


காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற்கிரணங்களால் நதியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப் 'பொன்னி' என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது. சுழிகள் - சுழல்களுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பிரவா கத்தின் மீது காலை இளங்காற்று தவழ்ந்து விளையாடி இந்திர ஜால வித்தைகள் காட்டிக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோ டொன்று லேசாக மோதிய போது சிதறி விழுந்த ஆயிரமாயிரம் நீர்த்துளிகள் ஜாஜ்வல்யமான ரத்தினங்களாகவும், கோமேதகங்களாகவும், வைரங்களாகவும், மரகதங்களாகவும் பிரகாசித்துக் காவேரி நதியை ஒரு மாயாபுரியாக ஆக்கிக் கொண்டிருந்தன.

ஆற்றங்கரையில் ஆலமரங்கள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் விழுதுகள் விட்டு விசாலமாய்ப் படர்ந்திருந்தன. மரங்களின் பழைய இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிதாய்த் தளிர்விட்டிருந்த காலம். அந்த இளந் தளிர்களின் மீது காலைக் கதிரவனின் பொற் கிரணங்கள் படிந்து அவற்றைத் தங்கத் தகடுகளாகச் செய்து கொண்டிருந்தன.

கண்ணுக் கெட்டிய தூரம் தண்ணீர் மயமாய்த் தோன்றிய அந்த நதியின் மத்தியில் வடகிழக்குத் திசையிலே ஒரு பசுமையான தீவு காணப்பட்டது. தீவின் நடுவில் பச்சை மரங்களுக்கு மேலே கம்பீரமாகத் தலை தூக்கி நின்ற மாளிகையின் தங்கக் கலசம் தகதகவென்று ஒளிமயமாய் விளங்கிற்று

==========================

சித்த மருத்துவம்:

காரணமே இல்லாமல் இதில் ஒரு ஆர்வம்



=====================

அனுபவம்:

ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு முன்னால், வெளிநாட்டில் இருந்து ஒருவர் இந்தியா/தமிழ்நாடு வருகிறார் என்றால், அவரிடம் மளிகை கடை சீட்டு போல், அனைவரும் ஏதாவது ஒரு பொருளை வாங்கிவர சொல்வார்கள். ஆனால் இன்றைய நிலைமை வேறு. வெளிநாட்டில் கிடைக்கும் அனைத்து பொருட்களும், நம்மூரில் கிடைக்கிறது. இது 90 சதவீதம் உண்மை. அது என்ன மீதம் உள்ள பத்து சதவீதம் என்று கேட்டால் தொலைக்காட்சி பெட்டி போன்ற சாதனங்கள். இங்கு கிடைக்கும் தொலைக்காட்சி நம்மூரில் விலை என்ன வென்று கேட்டால், மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது அமெரிக்காவில் Sony Bravia 40 Inch Led 3D தொலைக்காட்சி சுமார் $750 - $950 இருக்கும். ஆனால் இந்தியாவிலே 1.2 லட்சம். ஏன் இந்த வித்தியாசம் என்று இன்றும் என்னால் புரிந்துக் கொள்ளவில்லை. நான் கண்ட காட்சி இது தான். அமெரிக்கா மக்கள், தக்காளி மற்றும் வெங்காயம் வாங்கும் அதே இடத்தில், அதே நேரத்தில் இந்த தொலைக்காட்சியும் சேர்த்து வாங்கி கொண்டு செல்கிறார்கள். ஆனால் நம்மூரிலோ வேறு விதம். தீபாவளி, பொங்கல் என்று எதாவது ஒரு விஷேச காலத்தில் மட்டுமே தொலைக்காட்சி வாங்கும் பழக்கும் உடையவர்கள். இந்த வித்தியாசம் தான் காரணமா என்று கேட்டால் இல்லை. என்ன வென்று தெரிந்தது கொள்ள முயற்சிக்கிறேன். சரி விசயத்திற்கு வருவோம்.

நண்பர் ஒருவர், இந்தியா செல்லும் போது இங்கிருந்து தொலைக்காட்சி பெட்டியை, FedEx மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி இருக்கிறார். அவர் வீட்டில் இருக்கும் போது தொலைக்காட்சியும் வர, அதை எடுத்து படம் பார்க்கும் போது தான், தொலைக்காட்சி உள்ளே உடைந்து இருப்பது தெரிய வந்து இருக்கிறது. உடனே அழைத்து கேட்டால் சரி செய்ய 34 ஆயிரம் ஆகும் என்று கூற மிரண்டு போய் இருக்கிறார். இந்தியாவில் அவர் வாங்கின தொலைக்காட்சியின் விலை 1.2 லட்சம். ஆனால் அமெரிக்காவில் வாங்கின விலையோ 40+ ஆயிரம். அவர் செய்த நல்ல காரியம், FedEx போடும் போது இன்சூரன்ஸ் எடுத்தது தான். தொலைக்காட்சி உடைந்தது வரும் வழியில் என்பதால், இன்சூரன்ஸ் பணம் கொடுப்பதற்கு வழி இருக்கிறது. நண்பர் இன்சூரன்ஸ் நபரை அழைத்து பேசி, விளக்கி இருக்கிறார். பணம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் நண்பரும், நானும்.

============================

நான் ரசித்த காட்சி:

இந்த ஒரு காட்சியில் இயக்குனரின் திரைக்கதை உத்தி, இசை, ஒளிபதிவு மற்றும் காட்சி அமைப்பு என்று அனைத்துமே தெரிந்துவிடும்


======================

பயணம்:

அமெரிக்காவின் பெரிய நகரமான நியூயார்க் மற்றும் அமெரிக்காவின் ஆட்சி நடைபெறுகின்ற வாஷிங்டன் டி.சி ஆகிய நகரங்களுக்கு ஒருவழியாக பயணம் முடிந்தது.  சொல்லும்படியாக அவ்வூரின் முக்கிய நினைவுகள் என்று பார்த்தால் நியூயார்க்கில் பலதரப்பட்ட (உலக மக்களின்) வாழ்க்கை, புதிதாக கட்டப்படும் இரட்டை கோபுரம்,சுதந்திர தேவி மற்றும் இரவு உல்லாச வாழ்க்கை. இதே போல் வாஷிங்டனில் வெள்ளை மளிகை, அனைத்து மத்திய அரசின் அலுவலகங்களின் ரோமானிய அமைப்பு படி மற்றும் அவர்களின் சாதனையை விளக்ககூடிய நினைவு ஆலயங்கள்மிச்சம் இருப்பது மேற்கு பகுதி தான். நேரம் கிடைக்காமல் சென்று விடுமா என்ன அதற்கு.

புதிதாக கட்டப்படும் இரட்டை கோபுரம்

இரவு வாழ்க்கையின் ஒரு பகுதி

சுதந்திர தேவி

வெள்ளை மளிகை

குறிப்பாக வெள்ளை மளிகை பார்க்கும் போதும், இந்தியாவில் இருக்க கூடிய பாராளுமன்றத்தை பார்த்தது கிடையாது. ஏன் தென்இந்தியாவை தாண்டுனதே கிடையாது.  நான் இருப்பதோ மத்திய அமெரிக்காவில். அமெரிக்க வந்த உடனே வெள்ளை மளிகை. இது உனக்கு தேவையா? என்ற உள் மனது கேள்வி எழாமல் இல்லை. இந்த நாட்டிற்கு வந்த உடன், இந்த ஊரின் மக்கள் நிலை நமக்கு வந்து விடுவதால் தான், நாமும் இந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் என்ற வரிகளுக்கு நான் ஒத்துக் கொள்ள போவதில்லை. நம்மூரிலும் மக்கள் பல இடங்களுக்கு சென்று பலவற்றை காண்கின்றனர் என்று சென்று பார்த்தால் தான் தெரியுமே தவிர, பேசினால் வேலைக்கு ஆகாது என்பது நிதர்சனம்.