Monday, January 04, 2010

அடைமொழி

புத்தாண்டு வாழ்த்துகளை என்ன தான் மின் அஞ்சலில் அனுப்பினாலும், கைத்தொலைப்பேசியில் இருந்து குறும்சேதி அனுப்பும் போது தான் ஒரு மகிழ்ச்சி. அதே போல் இந்த வருடமும் உள்ளூர் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி கொண்டு இருந்தேன். என் பெயருக்கு முன்னால் இந்த வலைப்பதிவின் பெயரையும் (வைகையின் சாரல்) அடைமொழியாக சேர்த்து இருந்தேன். நண்பர்கள் அனுப்பிய பதில் குறும் சேதியில் தான் விஷயமே. அவரவர் பெயருக்கு முன்னால் ஒரு அடைமொழி. உதாரணமாக "கொங்கு நாடு நவீன்", " சிறுவாணியின் சாரல் விமல்" என்று பற்பல.... படிக்கவே சூப்பராக தான் இருந்தது. இதை எல்லாம் படிக்கும் போது வடிவேலு அவர்களின்  "தீப்பொறி திருமுகம்" தான் நினைவுக்கு வருகிறது....

No comments: