Sunday, June 28, 2009

பெங்களூர்/மோசமான போக்குவரத்துக் கழகம்

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் பெங்களூர் ஆகிய போக்குவரத்துக் கழகத்தை பார்த்து, சென்னை பேருந்துகள் தான் மிக மிக மட்டம் என்று நினைத்து இருந்தேன். ஒக்கனேகல் சனிக்கிழமை சென்றதால், அடுத்த நாளை பெங்களூர் நகரத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். பெங்களூர் பேருந்தும், நடத்துனர் பழக்கமும் நன்றாக இருக்கும் என்று நினைத்து பேருந்ததில் பயணத்தை தொடங்கினோம்.

நாங்கள் ஏறிய நிறுத்தமும், இறங்க வேண்டிய நிறுத்தமும் வித்தியாசம் இரண்டு தான். நான் பணத்தை கொடுத்து பயன் சீட்டை கேட்டேன். பணத்தை எடுத்து கொண்டு சீட்டை தரவில்லை. இரண்டாவது முறை கேட்டேன், நடத்துனர் என்னை முறைத்து கொண்டே பேருந்தின் பின்புறத்திற்கு சென்றார். எனக்கு என்றுமே புரியவில்லை. என்னுடன் வந்த பெங்களூரில் வசிக்கும் நண்பனிடத்தில் விசாரித்தேன். அவர் சென்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியையும், ஆச்சிரியத்தையும் கொடுத்தது.


இறங்க வேண்டிய இடம் இரண்டு, மூன்று நிறுத்தங்கள் இருந்தால் அதற்குரிய பயண சீட்டிற்கு இருக்கும் தொகையை விட ரூபாய் ஒன்று/ இரண்டு குறைவாக பணத்தை பெற்றுக் கொண்டு பயண சீட்டை தராமல் சென்று விடுவது. ஆக மொத்தத்தில் அப்பணம் அந்த நடத்துனருக்கே போகும். "எப்படி எல்லாம் கொள்ள அடிக்கிறாங்க அப்ப" என்று பேரு மூச்சு விட்டு கொண்டே எனக்கும், இன்னொரு நண்பருக்கும் கோபம் வந்து விட்டது.

இறக்கும் முன் பயண சீட்டை கேட்டோம். நடத்துனரே சீட்டு தேவை இல்லை என்று கூறியும் நாங்கள் மீண்டும் பயண சீட்டை கேட்டோம். நடத்துனர் எங்கள் மீது கோபம் கொண்டு எங்களுடைய உண்மையான பயண சீட்டு ரூ.5 பதிலாக ரூ.7 சீட்டை கொடுத்தார். இப்படி பட்ட நடத்துனருக்கு பணத்தை கொடுப்பதை விட அரசாங்கத்திற்கு கொடுக்கலாம் என்று நினைத்து சீட்டை வாங்கி கொண்டோம்.

இரண்டு/ மூன்று இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் வழியில் வேண்டாம் பிரச்சினை என்று நினைத்து விட்டு ஆட்டோவில் வந்து சேர்ந்தோம். இதை பார்க்கும் போது சென்னையே பரவ இல்லை என்ற எண்ணம் வந்து விடும் போல் இருந்தது.

நடத்துனர்கள் செய்யும் இப்படிப் பட்ட மிக கேவலமான/ மோசமான விஷயத்தை கர்நாடக அரசு சரி செய்ய வில்லை சென்றால் சுற்றுல பயணிகளால் வரும் வருமானம் குறையும் என்பதில் ஐயம் இல்லை. அதே போல் அரசுக்கு கூடிய விரைவில் கேட்ட பெயர் வரும் என்பதிலும் ஐயம் இல்லை.

2 comments:

Moses said...

இரண்டு/ மூன்று இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் வழியில் வேண்டாம் பிரச்சினை என்று நினைத்து விட்டு ஆட்டோவில் வந்து சேர்ந்தோம்.


வேண்டாம் பிரச்சினை.. . . வடிவேலு dialog மாறி இருக்கு மாமா

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

Hey Moses,

Welcome to my blogspot.. Athu vadivelu dialogke than...