Sunday, June 28, 2009

ஒக்கனேகல்

எனது தொழில் நூட்ப நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள விரும்பிய போது எங்களுக்கு ஒக்கனேகல் நினைவுக்கு வந்தது. எங்களில் யாரும் ஒக்கனேகல் போனதில்லை. அதனால் அதே பகுதிக்கு போகலாம் என்று முடிவு செய்து, பெங்களூர்-> தருமபுரி -> பாலக்கோடு-> பொன்னகரம்-> வழியாக ஒக்கனேகல்லை அடைந்தோம்.

மலைகளில் புயல் அருவியாக விழும் தண்ணீரை பார்ப்பதற்கும், பரிசலில் சென்று தண்ணீரால் உடம்பு நனைவதற்கும், அருவியில் குளிப்பதற்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். "அனுபிவிக்கனும், ஆராய கூடாது" என்பது போல, சொன்னால் தெரியாது அங்கு செல்ல வேண்டும்.

ஒக்கனேகளில் முக்கியமானது பரிசல் பயணம் தான். நாங்கள் சென்ற மாதம், நாள் ஆகியவை நன்றாக இருந்ததால் பரிசல் பயணத்தை அனுபவிக்க முடிந்தது. இல்லை என்றால் தண்ணீரின் அதிக அளவு காரணமாக பரிசல் ரத்து செய்ய பட்டு விடுமாம். அப்பயணத்தில் தான் கர்நாடக எல்லையை நன்றாக காண முடியும். எல்லையை கண்டவுடன் எனக்கு கர்நாடக அரசு வீணாக தான் சண்டை போடுகிறது என்று புரிந்தது.

மீண்டும் ஒக்கனேகல்-> தருமபுரி -> பெங்களூர் வந்து அடைந்தோம்.

அங்கு சென்ற புகைப்படத்தை எனது வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.

No comments: