Saturday, August 22, 2009

என்ன செய்ய?

திருமண மக்கள், ஞாயிற்றுக்கிழமை வைத்தால் அனைவரும் வருவார்கள் என்று நினைத்து, நல்ல நாளில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை பார்த்து திருமணத்தை வைத்து விடுகிறார்கள். (ஆனால் சில மக்கள் மட்டும் வார நாட்களில் வைத்து செலவை குறைக்க முயலுகின்றனர். அவர்களைப் பற்றி இங்கே பேச வில்லை)
இதே போல் நண்பர்கள் மற்றும் சொந்த சுற்று வட்டாரங்களில் அனைவரும் யோசிக்க முடிவு, ஒரே நாளில் மூன்று மற்றும் நான்கு திருமணங்கள். எந்த திருமணத்திற்கு செல்ல? திருமணத்திற்கு வரவில்லை சென்று மணமக்கள் கோபம் கொள்கின்றனர். ஒரே ஊரில் திருமணம் இருந்தாலும் தெரியாது. எடுத்துக் காட்டாக, அக்டோபர் 25ம் தேதி அன்று, எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் சொந்த சுற்று வட்டாரங்களில் திருமணம் நடைப்பெறும் இடங்கள் மதுரை, பரமக்குடி, திருச்சி. இதே போல் நவம்பர் மாதம் முதல் தேதியில், மதுரை, சென்னை மற்றும் ஆந்திராவிலும்.. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை, அதே போல் வராதவர்கள் மீதும் தவறும் இல்லை என்று புரிந்துக் கொண்டல் சரி.

No comments: