Monday, August 31, 2009

கடவுளின் மறுபெயர்?

தன் லட்சியத்தை அடைய கடும் முயற்சிகள் செய்து கொண்டே கடவுளை வணங்கினாலும் பல ஆண்டுகளாக அடைய முடியவில்லை. அனைவரும் அதை விதி என்று கூறுகின்றனர். முயற்சி திருவினையாக்கும் என்று கூறினாலும், அது 100% உண்மை என்று கூற முடியாது என்பது என் கருத்து.

விதி - கடவுளின் மறுபெயர் என்று கூறலாமா?

கடவுள் நம்பிக்கை இருந்தாலும், வணங்காமல் எந்த வித முயற்சியும் இல்லாமல் சில பேர் லட்சியத்தை அடைகின்றனர். இதற்கு அனைவரும் அதிர்ஷடம் என்று கூறுகின்றனர்

அதிர்ஷடம் - கடவுளின் மறுபெயர் என்று கூறலாமா?

"நல்லவங்களுக்கு ஆண்டவன் அதிகம் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டன்..கெட்டவங்களுக்கு ஆண்டவன் அதிகம் கொடுப்பன் ஆனா கைவிட்டு விடுவான்" என்று தலைவரின் விரிகளை கூறாமல், நடைமுறைப் படி யோசித்தால்.. (அய்யோ, இப்பவே கண்ண கட்டுதே.. முடியலப்பா)

கடவுளின் மறுபெயர் விதி மற்றும் அதிஷ்டம்?

இங்கு கடவுள் நம்பிக்கை பற்றி பார்க்கிறோம். அதற்கும் தன்நம்பிக்கை உள்ள வித்தியாசம்? எது பெரியது? நான் யோசித்து பார்க்கிறேன்..

பி.கு. எனக்கும், இந்த பதிவுக்கும் நிறைய முரண்ப்பாடு இருந்தாலும், தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.

No comments: