Saturday, August 08, 2009

கண்ணீர் சிந்துகின்றேன்

ஐந்து வருடமாக என்னுடன் உறவாடியது... நண்பர்களை என் மேல் பொறாமை பட வைத்தது (கொஞ்சம் அதிகம் தான்...) இப்படி என்னால் சொல்லிக் கொண்டே போக முடியும். ஆனால் இன்று அது என்னுடன் இல்லை என்கின்ற போது கண்களில் நீர் வடிகிறது....

சென்ற செவ்வாய் கிழமை அன்று, இரவு சுமார் எட்டு மணிக்கு நான் மழையின் காரணமாக என் இரண்டு சக்கர வாகனத்தில் அதுவும் வேகமாக செல்லும் போது அதிக காற்றின் காரணமாக, அது வாகனத்தின் உள்ளே இருந்து பறந்து தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையின் நடுவே கீழே விழ! என் கண் முன்னால் ஐந்து அல்லது எட்டு வாகன ஊர்திகள் அதன் மேல் ஏற்றி... ஐயகோ.. முடியவில்லை...

காப்பாற்றி விடலாம் என்று நினைத்து சென்று பார்த்தல் மிச்சம் மீதி கூட கிடைக்கவில்லை.

எனது குளிர் கண் கண்ணாடிக்காக கண்ணீர் சிந்துகின்றேன்...

2 comments:

Ramkumar said...

உங்களுக்கே இது ஒவரா தெரியல...
அந்த 40 ரூபாய் கண்ணாடி உடைந்ததுக்காகவா இந்த பில்டப்.

இதுல அத குளிர் கண்ணாடின்னு வேர சொல்லிக்கிற, கருப்பா இருந்தா அது அத குளிர் கண்ணாடியா ?

Thillaiyampalam-Sivasri said...

VS