Sunday, August 30, 2009

ஆண்களே யோசிப்பிர்

கவிஞர்கள் பெண்ணை மலர், நிலவு, கொடி மற்றும் பலவிதங்களில் பாடினாலும், வர்ணித்தாலும் இலக்கியம்/வரலாறு உடன் ஒப்பிடப்பட போது அது என்னை பொறுத்த வரையில் கொஞ்சம் வேறு பட்டு விடுகிறது. இலக்கியம்/வரலாறு காவியங்களில் வரும் கதாபாத்திரம் மட்டும் தான் உணர்வு உள்ள உயிர்கள். மற்றவை எல்லாம் கவிங்கனின் கற்பனை நதிகள். சமீபத்தில் வரலாற்றுடன் ஒப்பிடப்பட நான் ரசித்த வரிகள்

கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா
காளிதாசன் சகுந்தலை உந்தன் சேய் அல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்னர் பாவர்களுக்கு நீயே கதி

இந்த பதிவை எழுதும் போது என் நண்பர் சரவணன் உடன் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் கூறுகையில் என் ஆண் மகனைப் பற்றி குறைந்த பச்சமாவது மாடுகளுடன் கூட ஒப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டார். அவர் கருத்துக்கு நானும் கைகொடுப்பதை விட வேறு வழிஇல்லை.. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என நினைத்தல் ஆண் கவிஞர்கள் அதிகம் என்பது என் கருத்து. பெண் கவிஞர்கள் இருந்தாலும், பாடல்கள் எழுதுவதில் அவர்கள் ஒரு சதவீதம் தான்

No comments: