Monday, August 31, 2009

அழகர் மலை - திரைவிமர்சனம்

இப்படத்தை பார்க்க தூண்டிய விஷயங்கள் மூன்று....(என்ன தான் இருந்தாலும் நானும் மதுரை மச்சான் தானே)
1. இசைஞானி இளையராஜா
2. வைகை புயல்
3. படத்தின் பெயர்

நானும் எதோ நினைத்து பார்த்தால் சொல்கின்ற அளவுக்கு கதை இல்லை. அதுவும் இசைஞானி ஒரே ஒரு பாட்டுவுடன் நாம்மை ஏமாற்றி விட்டார் என்று தான் கூற வேண்டும். கதாநாயகன் ஆர். கே. நடிப்பில் நல்ல முன்னேற்றம் தான் என்றாலும் காதல் காட்சிகளை பார்க்க முடியவில்லை. கதாநாயகியை பற்றி சொல்ல எதுவும் இல்லை. வைகைப் புயல் நீண்ட நாளைக்கு பிறகு நம்மை கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். படத்தின் பெயருக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை என்பதால், தொடர்பு ஏற்படுத்த சரவணன் மற்றும் சுகன்யாவையும் வைத்து ஒரு பாடல். அய்யோ என்னால் முடியலப்பா.

எனக்கு தெரிந்த ஒரே ஒரு ஆறுதல் ஆன விஷயம் இளையராஜா தலைப்புப் பாடல் மாட்டும் தான். காதலுக்கு மரியாதையை படத்திற்கு பிறகு இளையராஜாவின் தலைப்புப் பாடல் ரசிக்கும் படி இருந்தது இப்பாடல். இந்நேரத்தில் மற்ற எந்த படத்து பாடலும் கேட்கும் படி இல்லாமல் இருப்பதால் ஏனோ இது ரசிக்கும் படி உள்ளதாக நினைக்க தோன்றுகிறது. இதோ அப்பாடலின் வரிகள்

உலகம் இப்ப எங்கோ போகுது எனக்கு இந்த அன்னை பூமீ போதும்
இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார் எனக்கு இந்த சொந்த நாடு போதும்
வகை வகையை வாழ்ந்தது எல்லாம் வாழ்க்கை இல்லையா
வழி வழியாய் காத்தது எல்லாம் நமது செல்வம் இல்லையா
மாற்றம் தான் நல்ல மாற்றமா அது நமக்கு வேணுமா

நதிகளினால் நிலம் செழித்து கொள்வதில் நெஞ்சம் நெகிழ்கிறேன்
நிதி வசத்தினால் நான் சோற்றுக்கு அலைந்ததை நினைத்து பார்க்கிறேன்
பட்டினியும் பாமரனும் பாரதத்தின் செல்வம் என்பேன்
நாடு விட்ட செல்வர் எல்லாம் இடிந்து நிற்கும் ஏழை என்பேன்
கன்னியரின் செல்வம் எல்லாம் அன்னை மண்ணுக்கு விலையாமோ
இந்த மண்ணை விட்டு விட்டு எங்கு போவது

உலகம் இப்ப எங்கோ போகுது எனக்கு இந்த அன்னை பூமீ போதும்
எதுவும் இங்கே மாறி போகுது எனை இந்த மாற்றம் என்ன செய்யும்

தாயாவாள் பாசமும் தந்தை ஈசமும் நிலைத்து கிடைக்குமா
உறவினர் சொந்தமும் உருகிடும் பந்தமும் வெளியில் கிடைக்குமா
வள்ளுவனும் பாரதியும் வணங்கிய மண் இது அல்லவா
வைகை கரை ஓரத்திலே வளர்த்த தமிழ் நமது அல்லவா
வார்த்தைகுள்ளே அடங்கிடுமா முன்னோர்தம் பெருமை எல்லாம்
நினைக்கையிலே நெஞ்சம் எல்லாம் நிரம்பி வழியுதே

No comments: