Wednesday, November 26, 2008

சென்னையில் ஒரு (புயல்) மழை காலம்:

நான் சென்னையில் இப்படி ஒரு மழையை பார்த்திருந்தாலும், இம்மழையில் ஆறாக முட்டி அளவு ஓடும் தண்ணிரில் அலுவகத்திற்கு செல்வது இதுவே முதல் முறை. நேற்று மாலை 5 மணி முதல் இரவு முழுவதும் இடைவிடாது மழை பெய்தும், இன்றும் மழை தொடர்ந்து தமிழ்நாட்டை முழுவதும் வெள்ள காடாக மாற்றி கொண்டு இருக்கிறது. இப்படிபட்ட புயல் மழையிலும் ஒரு சின்ன சந்தோசம். அதிகாலையில் புயல் மழை பெய்யும் போது, தேனிர் கடையில் சாரல் படும் இடத்தில் இருந்து கொண்டு சூடான தேனிர் சாப்பிடும் இன்பம் வெகு நாளைக்கு பிறகு இன்று கிடைத்து. இம்மழையில் அலுவகத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டுமா என்ற எண்ணம் வரும் போது, மழையை ரசிக்காமல் ஏன் வீட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணி எனது பறக்கும் வாகனத்தை எடுத்து மெதுவாக இயற்கையின் அழகை ரசித்து கொண்டே அலுவகத்தை அடைந்தேன். பள்ளி பருவத்தில் மாலை நேர வகுப்புக்கு செல்லும் போது அல்லது மாலை நேர வகுப்பை விட்டு வீடு திருப்பும் போது மழையில் நனைந்த அனுபவம் போல் இன்றைய பொழுது இருந்தது. நான் என்னுடைய பள்ளி பருவத்தை நினைத்து பார்க்கவே இம்மழை வந்து தமிழ்நாட்டையே வெள்ள காடாக்க வேண்டுமா என்ற வருத்தம் வந்து விட்டது.

No comments: