Monday, November 24, 2008

சிதம்பரத்தில் ஒரு அப்பச்சாமி

ஒரு முழுமையான குடும்ப திரைக்காவியம் பார்த்து வருடக்கணக்கில் ஆகிவிட்டது என்ற எண்ணம் வரும் போது, இயக்குனர் தங்கர் பச்சன் கலைபார்வையில் உருவான "சிதம்பரத்தில் ஒரு அப்பச்சாமி" என்ற திரைப்படம் பார்த்தேன். அக்கால குடும்ப இயக்குனர் திரு. விசுவின், திரைக்காவியங்கள் ஆன

* சம்சராம் அது மின்சாரம்,
* குடும்பம் ஒரு கதம்பம்,
* ஆவதும் பெண்லே அழிவதும் பெண்லே,
* மணல் கயிறு

போன்ற படங்களுக்கு பிறகு, நான் ரசித்து பார்த்த திரைப்படம்.

ஒரு குடும்ப தலைவன் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு ஓடி மீண்டும் மனம் திருந்தி குடும்பத்தில் இணையும் கதை. திரைக்கதையை அமைத்த விதம் ஆற்றில் ஓடும் தெளிவான நீர் போல இருந்தது இதன் சிறப்பு. கதையின் நாயகி ஆன நவ்யா நாயர் இன்றி இத்திரைபடம் இல்லை. அவ்வளவு அற்புதமான நடிப்பு. திருமணம் செய்து கொள்ள போகின்ற அனைவரும் பார்க்க வேண்டிய குடும்ப காவியம்.

திரு. தங்கர் பச்சன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்

No comments: