Friday, November 21, 2008

ஸ்ரீகுமார்

சென்ற வருடம், இதே நேரத்தில் என்னுடன் சேர்த்து 5 பேர் சபரிமலை சென்றோம். அதில் என்னுடைய கல்லூரி நண்பன் அஸ்வினின் நண்பர் ஸ்ரீகுமாரும் ஒருவர் (எல்லோருக்கும் ஓரே வயது தான்). சபரிமலை பயணம் ஒரு நாள் என்றாலும், அந்நாளை என்னால் மறக்க முடியாது. இம்மாதத்தில் நான் பெங்களூரு போன போது, அவருக்கு 4 மாதத்திற்கு முன்னால் திருமணம் ஆனதையும், பெங்களூரில் வசிப்பதாகவும் அறிந்தேன். ஆனால் இன்று காலை அவர் அலுவகத்திற்கு வாகனத்தில் செல்லும் போது கனரக வாகனத்தின் மீது மோதி, காலமானர் என்பதை அஸ்வின் என்னிடம் சொன்ன போது, எனது இதயம் கனத்து விட்டது. அந்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை நான் வேண்டி கொள்கிறேன். அவரது குடும்பத்தும் எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.


எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.


இறந்த நாளை நினைக்கமால்,

பிறக்கின்ற நாளை நினைக்கமால்,

இன்றைய நாளுக்காக வாழுங்கள்.

No comments: