Thursday, August 26, 2010

பெண்ணிடம் இரகசியம் - மகாபாரதம்

நம்ம தான் பொழுது போகலன்ன மகாபாரதம் பாக்குற ஆளாச்சே. இப்படிஅப்படின்னு ஒரு பகுதி பாத்துகிட்டு இருக்கும் போது ஒரு சின்ன வசனம் கேட்டப்ப சிரிப்பு வந்துருச்சு. ஆனா யோசிக்கவும் வச்சது அது உண்மையா அல்லது பொய்யா என்னு

அர்ஜுனன் கர்ணனை கொன்ற இரவு பொழுதில், குந்தி மாதா கர்ணனின் சடலத்தை தன் தொடையில் வைத்து அழுது கொண்டு இருப்பதை கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் தர்மராஜன் பார்க்க, இரண்டு பேர் ஆச்சிரியம் அடைகின்றனர். தர்மராஜன் தன் தாயிடம் ஏன் இவனுக்காக கண்ணீர் சிந்துகிறிர்கள் என்று காரணம் கேட்க, குந்தியும் அவர்களிடம் கர்ணன் தன் மகன் என்று கூறி விஷயத்தை விளக்குகிறாள். ஆனால் தர்மராஜன் இந்த விஷயத்தை ஏற்று கொள்ளவில்லை. எப்படி ஒரு தாய் தன் மக்களிடம் ஒரு விஷயத்தை மறைக்கலாம் என்று கோபப்பட்டு, ஒரு சாபத்தை அனைத்து பெண்களுக்கும் கொடுக்கிறார். அச்சாபம் என்னவென்றால் "இனிமேல் எப்பெண்களாலும் எந்த இரகசியத்தையும் அவர்கள் மனதில் வைத்து கொள்ள முடியாது"

மகாபாரத்தின் இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இச்சாபம் உண்மையில் தர்மராஜன் கொடுத்தாரே இல்லையோ, இயக்குனரின் கற்பனை திறனை பாராட்டே ஆக வேண்டும். இக்காட்சியின் எப்படி ஒரு வசனத்தை வைக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் உலக உண்மைகளை (??) இதில் பொருந்தும் அளவுக்கு வைத்த அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

No comments: