Saturday, October 25, 2008

மாற்றங்கள்: 1

நண்பர்கள் என்பது கல்லூரி நட்பு மட்டும் அல்ல, தொழில் முறை நட்பும் அடங்கும். சென்னையில் 2ம் பணி இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சந்தோஷமாக இளமையுடன் வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்த தொழில் முறை நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் இல்ல வைபவங்களில் கலந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தது. இதனால் நான் தனிமையில் இருப்பத்தை மறந்து எனது ஊரில், உறவுக்களின் மத்தியில் இருப்பத்தை போல் உணர்ந்தேன். ஆனால் இன்று?
நான் பணிபுரியும் 3ம் இடத்தில், தனிமையை உணர்கிறேன். இந்த மாற்றம் நான் எதிர்பார்த்து தான். இருந்தாலும் ஏதே ஒரு சிறிய ஏக்கம் என் ஆழ் மனதில் வருத்தி கொண்டு இருக்கிறது.

4 comments:

Partha said...

puthusa onnu vanthuchuna, atha pazhasoda oppitu pakarathu namma iyalbu.. poga poga nilamai seeradaiya enathu vaazhthukal :)

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

Mikka Nanri.

BadhriNath said...

spelling mijtakes :)
and u r welcome to old team enna solre ;)

Anonymous said...

நீங்கள் குறிப்பிடும் இரண்டாம் பணி இடம் HCL என்று நம்புகிறேன்.
HCL என்றவுடனே என் மனதில் தோன்றிய சில நிகழ்வுகளை குறிப்பிட விரும்புகிறேன்.
- என் முதல் இரு சக்கர வண்டி.
- கிரிதர் திருமணத்திற்கு எல்லோரும் ஆந்த்ரா மாநிலத்திற்கு சென்றது
- பிறகு நடந்த சௌத்ரி-யின் திருமணம்
- இரண்டு தடவை OBL சென்றது. இரண்டாம் தடவை சென்ற பொது நடந்த சந்தோசமான நிகழ்வுகள் என் வாழ்நாளில் மறக்க முடியாதவை.
- சத்யா-வுடன் ஊட்டி சென்றது.
- ஊட்டியில் எடுத்த புகைப்படம் சிஸ்கோ-வில் தேர்ந்துடுக்கப்பட்டது
- ரகு-வின் திருமணத்திற்கு குற்றாலம் சென்றது.
- எல்லோரும் எல்லோரையும் கிண்டல் செய்து கொள்வது.
- ஒரு DVD எடுத்து எல்லோரும் பார்த்து ரசிப்பது.
- கமல் திருமணம்.
- VR-இன் திருமணம்
- கடைசியாக, என் அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு இரத்த தனம் செய்த நண்பர்களின் உதவி.
இவை அனைத்தும் என் மனதில் என்றும் நினைவிருக்கும் என்றே நம்புகிறேன்.
நீங்களும் உங்கள் நினைவில் உதிப்பதை பதிவு செய்யுங்கள். அனைவரும் ரசித்து ருசித்து பழைய நினைவுகளை அசை போடுவோம்.