Monday, November 24, 2008
சிதம்பரத்தில் ஒரு அப்பச்சாமி
* சம்சராம் அது மின்சாரம்,
* குடும்பம் ஒரு கதம்பம்,
* ஆவதும் பெண்லே அழிவதும் பெண்லே,
* மணல் கயிறு
போன்ற படங்களுக்கு பிறகு, நான் ரசித்து பார்த்த திரைப்படம்.
ஒரு குடும்ப தலைவன் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு ஓடி மீண்டும் மனம் திருந்தி குடும்பத்தில் இணையும் கதை. திரைக்கதையை அமைத்த விதம் ஆற்றில் ஓடும் தெளிவான நீர் போல இருந்தது இதன் சிறப்பு. கதையின் நாயகி ஆன நவ்யா நாயர் இன்றி இத்திரைபடம் இல்லை. அவ்வளவு அற்புதமான நடிப்பு. திருமணம் செய்து கொள்ள போகின்ற அனைவரும் பார்க்க வேண்டிய குடும்ப காவியம்.
திரு. தங்கர் பச்சன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்
Saturday, November 22, 2008
அடிப்படை கல்வி
நான் சைதாப்பேட்டையில் தனியாக ஒரு வசந்தமாளிகையை வாடகைக்கு எடுத்து குடிபோன போது ஏற்பட்ட அனுபங்கள் பல. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க தாயரித்த பட்டியல் கண்டு அதிர்ந்து போனேன். இதனை விட பெரியகொடுமை என்றென்றால் மின்சாதன பொருட்களை சரியாக மாட்டிவிடுவது. எனது தந்தை மின்சாரவாரியா ஊழியர் என்பதால், வீட்டிற்கு தேவையானவற்றை அவரது நண்பர்கள் பார்த்து கொள்வார்கள். இதனால் எனக்கு மின்சாதன பொருட்களை பற்றி தெரியாமல் போய்விட்டது. அதனால் இன்று வசந்தமாளிகையில் குடிபெயர்ந்த போது நான் பட்ட கஷ்டங்கள் வெளியில் சொல்லமுடியாது. இதில் நான் ஒரு கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் வேறு, மின்விசிறி கூட மாட்ட தெரியவில்லை.
இதை விளையாட்டு தனமாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு காரணமாக நான் கருதுவது, அடிப்படை கல்வி பயன்றவிதம். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, துளிஅளவு கூட தொழில் முறையான கல்விஅறிவு இல்லை என்பது எனது வாதம். 12ம் வகுப்பு படித்த மாணவனுக்கு/மாணவிக்கு, இச்சமூகம் ஒரு அங்கீகராம் அளிக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு மிதிவண்டி வாகனம் பழுது அடைந்தால் என்ன பழுது என்று கூட அவர்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை மற்றும் மின்விசிறி கூட மாட்ட தெரியவில்லை. இப்படி வாழ்க்கைக்கு தேவையான சிறுசிறு விஷயங்களுக்கு கூட அடுத்தவரின் உதவியை நாட உள்ளது. இதை நினைத்து இச்சமூகம் வெட்கபட வேண்டும். நமது கல்வி முறை வாழ்க்கை நடைமுறையை பின்பற்ற வேண்டும். நமது நாடு இன்னும் வேகமாக வளர இது வழிவகுக்கும்.
வாழ்க வளமுடன்
Friday, November 21, 2008
ஸ்ரீகுமார்
சென்ற வருடம், இதே நேரத்தில் என்னுடன் சேர்த்து 5 பேர் சபரிமலை சென்றோம். அதில் என்னுடைய கல்லூரி நண்பன் அஸ்வினின் நண்பர் ஸ்ரீகுமாரும் ஒருவர் (எல்லோருக்கும் ஓரே வயது தான்). சபரிமலை பயணம் ஒரு நாள் என்றாலும், அந்நாளை என்னால் மறக்க முடியாது. இம்மாதத்தில் நான் பெங்களூரு போன போது, அவருக்கு 4 மாதத்திற்கு முன்னால் திருமணம் ஆனதையும், பெங்களூரில் வசிப்பதாகவும் அறிந்தேன். ஆனால் இன்று காலை அவர் அலுவகத்திற்கு வாகனத்தில் செல்லும் போது கனரக வாகனத்தின் மீது மோதி, காலமானர் என்பதை அஸ்வின் என்னிடம் சொன்ன போது, எனது இதயம் கனத்து விட்டது. அந்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை நான் வேண்டி கொள்கிறேன். அவரது குடும்பத்தும் எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.
எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
இறந்த நாளை நினைக்கமால்,
பிறக்கின்ற நாளை நினைக்கமால்,
இன்றைய நாளுக்காக வாழுங்கள்.
Wednesday, November 19, 2008
எம்என் நம்பியார்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.
வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர், நம்பியார் இட்ட சண்டை காட்சிகள் பெரிதளவு பேசப்பட்டது என்பது உலக உண்மை. அதுவும் குறிப்பாக
நம்பியார்: மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்ஜிஆர்: சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்
என்ற வசனம் இன்றும் நாம் நினைவில் நிற்பது.
எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது. நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிபட்ட உலகமனிதர் இவ்வுலகை விட்டு பிரிந்து, சொர்க்கத்தை அடைந்து இருப்பார் என்று நம்பி, என் இரத்த கண்ணீரை துடைத்து கொள்கிறேன்.
Sunday, November 16, 2008
மாற்றங்கள் 2: பெங்களூரு பயணம்
உடல் நலகுறைவு என்று ஒரு வாரமாக இருந்தாலும், எங்களுடன் கலந்து கொள்ள, 2 புரோட்டாவும், அதனுடன் ஒரு கோழி குருமா, ஒரு கோழி தொடை கறி என்று சாப்பிட்டு, உடலை சரிசெய்து கொண்டு வந்த நண்பனும்,
நாங்கள் சாப்பிட்டாமல் மயக்கத்தில் இருக்கும் போது, அவரது தந்தை தொலைபேசியில் அழைத்து போது 2 தோசை சாப்பிட்டத்தாக கூறும் தோழனும்,
பல் வலியை சரி செய்ய ரூ. 700 செலவு செய்து, பெங்களூரில் பெரியவர் செய்த ஆட்டு மாமிசத்தை சாப்பிட வந்த நண்பனும்,
வெளிநாடு சென்றுவந்ததை, எங்களுக்கு காட்ட வேண்டும் என்றே எங்களுடன் சேர்ந்து வந்த தோழனும்,
நாங்கள் சாப்பிட்ட பணத்தை காட்ட சென்ன போது, சுருக்கு பையிலிருத்து ரூ.1 காட்டி (2 வருடங்களுக்கு முன்னால் அதே சுருக்கு பையிலிருத்து 25 பைசா காட்டியவர்... நல்ல முன்னேற்றம்.... காரணம் கேட்டால் பணவீக்கமாம்), வராத
தொலைபேசியை வந்ததாக கூறி கொண்டு வெளியில் ஓடும் தோழனையும் அழைத்து கொண்டு சனிக்கிழமை விடிவதற்கு முன்னால் சென்னையிலிருத்து கிழம்பினோம்.
பெங்களூரில் நாங்கள் சென்ற இடம் (பன்னர்கட்டா தேசிய பூங்கா, பந்தை உருட்டி விட்டு விளையாடும் இடம், நாகரீக மற்றும் பணக்காரக்களின் வியாபரா சந்தை) என்னவோ செல்லும்படியாக இல்லாவிட்டாலும், வானவில்லின் அனைத்து நிறத்தையும் எங்களால் காண முடிந்தது. நாங்களே எதிர் பார்க்கமால் அந்நகர நண்பர்கள் அனைவரும் கூடியது தான் எங்களுக்கு ஆச்சரியம். உதாரணமாக அந்நகரில் 1.5 ஆண்டுகளாக தொலைபேசியில் மட்டும் பேசிகொண்டு இருந்தவர்கள் எங்களுக்காக கூடியது போது நேரடியாக பார்த்து பேசியது அனைவருக்கும் ஆச்சரியம்.
பெங்களூரில் எங்களுக்கு சிறு சிரமம்கூட ஏற்படவில்லை. கல்யாண ஆன 2 பேர், அவர்களுக்கு அலுவலக பணிகள் இருந்தாலும் எங்களுடன் கூடி பிரம்மச்சாரியாக அவர்களும் சந்தோஷமாக இருந்ததும்,
கல்யாணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று கவலையுடன் இருந்தும், எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, கடைசியாக நிழற்படத்தை பார்த்தவுடன் சுயநினைவிற்கு வந்ததும் (நிழற்படம் வெளியாகி தனக்கு பெண் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தில்)...
2 பேரை செல்லமுடியாத வார்த்தைகளில் கேவலபடுத்திருந்தாலும் (பின்னர் எப்போதும் ஒருவர் பின்னால் ஒருவர் நிற்பது, அதோடு இல்லாமல் இருவர் மட்டுமே தனியாக பேசி கொள்வது), இதை நீங்கள் செல்லாமல் வேறு யார் என்னை கேவலபடுத்த முடியும் என்று செல்பவர்களும்,
கல்லூரியில் ஒரு பெண் பித்தனாக இருந்த கடலை மன்னன், அப்படியே இன்றும் ஒரு விளம்பர மாதிரியாக இருக்கும் ஆணழகனும்,
குரங்கு தனமாக கல்லூரியில் விளையாடி கொண்டிருந்த நண்பர், இன்று திடமான முடிவுகளை எடுப்பதை பார்க்கும் போதும்,
கேரளா மாநில தோழர்கள் 3பேர் இருந்தாலும், ஒருவர் தனது பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சியுற செய்தது.
இதைவிட ஆச்சரியம், வட இந்தியாவிலிருந்து அலுவலக வேலையாக ஒரு நண்பர் வந்து இருந்தாலும், என்னமோ! எங்களுடன் ஒன்று கூட வந்ததுபோலிருந்தது.
ஒரு முழுமையான குடும்ப வாழ்க்கை வாழும் ஒரு நண்பர் நாங்கள் புறப்படம் நேரத்தில் கூட ஒரு விருந்தினை வைத்து அனுப்புவது என்று சொல்ல முடியாத வார்த்தைகள்.
இதற்கு முன்னால் சென்ற கொடை, மூணாறு சுற்றலாதளத்தை விட, சிறப்பாக அமைந்தது இதன் சிறப்பு. இதை போல் இன்னொரு சுற்றலா எப்போது அமையும் என்ற கேள்வியுடன் சென்னைக்கு கிளம்ப புகைவண்டி ஏறினோம்.