Friday, December 23, 2011

பாமரனின் இப்போதைய நிலை



இரண்டு வாரத்திற்கு முன்னால், மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் "இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்த அதே விலையில் தான் பருப்புகள், எண்ணை விலைகள் இருக்கிறது" என்று புள்ளி விவரம் கொடுத்து இருக்கிறார். அதையும் இந்த மத்திய அரசு அமோதித்து மகிழ்கிறது.  ஆனால் உண்மை நிலை என்ன?

எழுத்தால் புரிய வைப்பதை விட, புகைப்படத்தால்:


சென்னையில் கே.கே. நகரில் இருக்கும் சரவணா பவன் உணவகத்தின் விலை பட்டியலின் ஒரு பாகம்.

இரண்டு இட்லி - ரூ. 23
வடை - ரூ. 20
பொங்கல் - ரூ. 35
சாம்பார் வடை - ரூ. 25
தோசை - ரூ. 33
ஸ்பெஷல் தோசை - ரூ. 40
நெய் தோசை - ரூ. 75

சாதாரண வேலை செய்யும் மக்கள் யாரும் சரணவ பவன் உணவகத்தில் சென்று உணவு அருந்த முடியாது என்பது தான் நிதர்சனம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், ஒரு நிகழ்ச்சியை கொண்டாட பெரிய உணவகத்திற்கு செல்வோம். ஏன் என்றால்  அந்த மாதிரியான பெரிய உணவகத்திற்கு தினசரி செல்ல இயலாது.  ஆனால் இன்று அதே போல் ஒரு நிகழ்ச்சியை கொண்டாட சரவணாபவன் உணவகத்திற்கு சென்று உள்ளோம் என்ற பார்த்து கொள்ளுங்கள். அங்கு தினசரி சென்று உணவு எடுக்க முடியாத சூழ்நிலை.
சுருக்கமாக சொல்லவேண்டும் எனில், இந்தியாவில் சம்பளம் வாங்கி கொண்டு, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விலையில் பணத்தை கொடுத்து வாங்குகிறோம்.
இந்தியா திருநாட்டை இப்படி சீரழிக்கும் மத்திய அரசு எப்போது போகுமோ?

No comments: