Thursday, December 08, 2011

ரமேஷ் அண்ணன் - அஞ்சலி



சென்ற வாரஇறுதியில் தான் எல்லோரும் ஒரு விழாவில் உறவினர்கள் அனைவரும் பார்த்து, பேசி ஜாலியாக இருந்தோம். அதில் ஒருவரான ரமேஷ் அண்ணன் அவர்களுக்கு  வயது 36 அல்லது 38 தான். நான்கு மற்றும் ஒரு வயது குழந்தைக்கு தகப்பனார். நேற்று இரவு உணவு சாப்பிட்டு அமர்ந்து இருக்கையில், இறைவனடி சேர்ந்தார். என்ன பிரச்சனை என்று இதுவரை தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடைய நான் வணங்குகின்றேன். 

நேற்று இருப்பவர்கள் இன்று இல்லை. சிறுவயதில் மரணம் என்பது யாதார்த்தம் தான்.ஆனாலும் அவரின் குடும்ப சூழ்நிலை நான் அறிவேன் என்பதால், இந்த நிகழ்வை சாதரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இருப்பதோ தென்தமிழகத்தில். நான் மட்டும் வடதமிழகத்தில். என்ன பொழப்பு டா சாமி. நல்ல விஷயங்களில் கலந்து கொள்கிறோமே இல்லையோ, இந்த மாதிரியான நிகழ்வுகளில் வேலை செய்கிறோமே இல்லையோ முடிந்தவரையில் தலையாவது காட்ட வேண்டும். அதற்கும் முடியாமல் இருக்கும் என்னை நினைத்து வருத்தம் அடைகிறேன்.

1 comment:

Rathnavel Natarajan said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.