Thursday, May 06, 2010

கவலைகள்


என்ன தான் அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற பெருமை இருந்தாலும், சின்ன சின்ன கவலைகள் அதிகமாகிக் கொண்டே தான் போகிறது... என் மனதில் கவலைகள் என்று நினைத்த உடன் தோன்றிய எழுத்துக்கள் இங்கே.
  • மாத மாதம் மதுரைக்கு போக முடியாமல் இருப்பது
  • சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் மதுரை சித்திரை விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
  • நெல்லை மற்றும் பாண்டியன் விரைவு தொடர் வண்டியின் பயணத்தை இழந்தது
  • சென்னையில் இருந்து கொண்டே உள்ளூரில் நன்றாக சுற்றி கொண்டு இருந்த நான், அமெரிக்காவில் அதுவும் ஒரு மூலையில் அடைப்பட்டு இருப்பது
  • இந்த ஆண்டு பல நண்பர்கள்/உறவினர்கள் கல்யாணம் இருந்தும், அதில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
  • நம்மூர் இட்லி, தோசை, வடை மற்றும் சாம்பாரை பற்றி நினைத்து கொண்டு இருப்பது
  • எப்போதும் அலுவலக வேலை நினைப்பாலே இருப்பது
  • முக்கியமாக நாள்முழுவதும் கை கணிப்பொறியில் போவதும்
  • பதிவுகளை படிக்கவும் முடியாமல், எழுதவும் முடியாமல் போனது
  • மதுரையில் மற்றும் சென்னையில் இருக்கும் என்னுடைய சொந்த வேலைகளை கூட செய்ய முடியாமல் போனது.


மாதத்திற்கு கண்டிப்பாக நான்கு பதிவுகளையாவது போட்டு தீர வேண்டும் என்று ஆசை. நிறைவேறுமா என்ற கேள்வி உடன், கண்கள் வானத்தை நோக்கி...

2 comments:

Rajesh Kumar T.R. said...

ithuku perthan di aappu.... kannuku theriyathu... anobavicha than theriyum......oooooooooooo

Unknown said...

sila samayangalil sila sangadangalai sahithu than aakanum.