Wednesday, May 26, 2010

சமீபத்தில் ரசித்தது - கதைகளை பேசும்


சமீபலகமாக ஒரு பாடலின் முதல் ஒரு வரி மட்டும் எனக்கு தெரியாமலே பாடி கொண்டு இருந்த தான், நேற்று அந்த பாடல் எது என்ற ஆசை அதிகமாகி ரொம்ப கஷ்டப்பட்டு பாட்டை கண்டு பிடித்தால், சமீபத்தில் என்னை பாதித்த படமான அங்காடி தெருவில் இருந்து 






கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
(
கதைகளை)

ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
(
கதைகளை)

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி
(
கதைகளை)

உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்
நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே
(
கதைகளை)

No comments: