Saturday, July 11, 2009

திருமண வாழ்த்துக்கள் - ராதா கிருஷ்ணன்

எனது பழைய அலுவலக நண்பர் திரு. ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு இம்மாதம் இரண்டாம் தேதி திருமணம் ஆனதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

திருமணம் திருசெந்தூருக்கும், ராமநாதபுரத்துக்கும் இடையே உள்ள சாயல்குடியில் நடைபெற்றது. மண்டபம் உள்ள சாலை முழுவதும் பத்து அடிக்கு ஒரு பெரிய பலகையில் உள்ளூர் அரசியல் தலைவருடன் மணமக்கள் புகைப்படம் (கிராமத்து திருமணம் என்பதை தெரிவிக்கும் வகையில் இருந்ததால், எங்களுக்கு அரிதாக பட்டது).

எனக்கு தெரிந்தவரை கல்யாண வீட்டில் நாதஸ்வரம் தான் முழங்கும். ஆனால் இங்கு வெளியில் வாசிக்கும் பேன்டு வாத்தியம் மண்டபத்தில் இருந்ததால், நாதஸ்வர மேளம் எதுவும் கேட்கவில்லை. ஐயர் இல்லாமல், குடும்பத்தில் மற்றும் ஊரில் பெரியோர் சிலவற்றை வாசிக்க திருமணம் நடைப்பெற்றது. மதுரையில் நான் இம்மாதிரியான கல்யாணத்தை பார்த்து இருந்ததால் எனக்கு புதிதாக தெரியவில்லை. ஆனால் என்னுடன் இருந்த சென்னை மக்களுக்கு ஆச்சிரியமாக இருந்தது.

சென்னையில் இருந்து சாயல்குடி வரை வந்து செல்வதற்கு மற்றும் அங்கு தங்குவதற்கு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்த நண்பர் ராதா அவர்களுக்கு நன்றி.

1 comment:

Kumaresh said...

nirmal happy to see you wishing every one here and i am regularly following your blog.. Its nice man. and i like the post rameshwaram for the fruitful info u gave us