Saturday, July 25, 2009

திருமண வாழ்த்துகள் - ஷகுல்

எனது பழைய அலுவலக நண்பர் திரு. ஷகுல் அவர்களுக்கு இம்மாதம் 12ம் தேதி திருமணம் ஆனதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

இவரது திருமணம் தென்காசி அருகே உள்ள கடையநல்லூரில் நடைபெற்றது. எனது ஊரான திருநகர், அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்புரங்குன்றம் அருகில் தான் உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இப்போது தான் அங்குள்ள இரயில்வே நிலையத்திற்கு சென்றேன். சென்னையில் புறநகர் இரயில் எப்படி பயன்படுகிறதோ, அதே போல் செங்கோட்டைக்கு செல்லும் இந்த இரயிலுக்கும் கூட்டம். மூன்று மணி நேர பயணத்தில் கடையநல்லூர் அடைந்தேன். முஸ்லிம் மத முறைப்படி திருமணம் நடைப்பெற, அவர்களுக்கு உரித்தான மதிய உணவு :) ஆட்டு பிரியாணி, கோழி வறுவல் என களைகட்டியது. ருசியே ருசி. அடுத்த ஒரு மாதத்திற்கான பிரியாணி, ஒரு வேளை சாப்பாட்டுடன் முடிந்தது.

என்னதான் வெயில் அடித்தாலும், தென்காசி அருகில் இருப்பதால் அதிகபடியான சூடு தெரியவில்லை. மீண்டும் அரசு பேருந்தை பிடித்து, மதுரைக்கு வந்து ஆகி விட்டது. பலமுறை தென்காசிக்கு சென்று இருந்தாலும், இந்த முறை பகலில் பிரயாணம் என்பதால் பல புது ஊர்களை பார்த்தது போல் இருந்தது. கடையநல்லூர் ஊரை சுற்றிப் பார்க்க முடியாமல் போனதால், மீண்டும் அவ்வூருக்கு செல்லும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.

No comments: