Tuesday, March 29, 2011

இது ஒரு குற்றமா? - சிறுகதை - பாகம் - III



இரண்டு நாட்கள் அவள் பேசாமல் இருக்க, குமாரே அவளை தொடர்பு கொண்டு பேசினான். அர்ச்சனா பேசுகையில், குமாரின் காதுகளில் ஒரு விதமான புகை வந்ததை நண்பர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த மாதிரியான தப்பு இனிமேல் நடக்காது என்று கூறி மன்னிப்பு கேட்டு கொண்டான். தவறை திருத்திக் கொள்கிறேன் என்று கெஞ்ச, அவளுக்கும் சமதானம் ஆக, ஞாயிறு கிழமை காலையில் மீண்டும் Navy Pierல் பார்க்க முடிவு எடுத்து, ஒரு மணிநேரத்திற்கு முன்னே குமார் நின்று கொண்டு இருந்தான். மதிய உணவை முடித்து விட்டு, கிளம்பும் முன் மறதியில் குமார் அவனுக்கும் மட்டும் பணத்தை எடுத்து கொடுக்க, ஆனால் தவறை நினைத்து இரண்டு பேருக்கும் பணத்தை கட்டினான். இந்த விஷயம் அர்ச்சனாவுக்கு தெரியாது என்று நினைத்து இருந்தாலும், அவள் பார்த்துக் கொண்டு இருந்தால். குமார் வந்த உடன் சிறிது நேரம் யோசித்து விட்டு, கோபம் கொள்ளாமல் உன்னுடைய பிளான் என்ன கேட்க ஆரம்பித்த உடன்


குமார்: இன்னும் ஒரு வருடன் இருந்து விட்டு இந்திய செல்ல வேண்டியது தான்.
அர்ச்சனா: என்னை பற்றி எதாவது நினைத்து பார்த்தாய்யா. என்னுடைய ஆசை அமெரிக்காவிலேயே குடியேற வேண்டும் என்பதது தான்.
குமார்: அது எப்படி முடியும்? ஏற்கனவே இரண்டு வருடம் அமெரிக்காவில் போய் விட்டது. சொந்தகாரங்க நிறைய பேர் எனக்கு இருக்காங்க. பறேன்த்ஸ் விட்டு என்னால தனியா வாழ முடியாது.
அர்ச்சனா: என் ஆசைகளை பற்றி உனக்கு கவல கிடையாது. சரி
don’t know what kind of relationship you imagined about me. But you was there in my heart.
குமார்: was?
அர்ச்சனா: yes. My life ambition is getting green card in US. But it seems it is not possible now. So this is the right time to close our anykind of relationships.
குமார்:  என்ன சொல்லற. Are you kidding?
அர்ச்சனா: No. நான் உன்னை பத்தி விசாரிச்சப்ப, நீ இங்கேயே தங்க போறே ஏன்னு கேள்வி பட்டேன். ஆனா, நீ இந்தியா போவென்னு நினைக்கல. அதனால தான் நானே உனக்கு போன் பண்ணி பேசுனேன். That’s fine. Will leave this place as friends. Bye.


என்று அர்ச்சனா கிளம்பி கொண்டு இருக்கையில், அவள் மனதில் உன்னை பார்த்த உடன் உனக்கு நான் அடிமை ஆகி விட்டேன். நான் அமெரிக்காவில் வாழும் லட்சியம் கூட எனக்கு பெரிதாக படவில்லை. உன்னுடன் நானும் சேர்ந்து இந்தியா வர முடிவு செய்து விட்டேன். ஆனால் நீ வளர்ந்த விதம், பெண்களுடன் பழகும் முறையை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. நானும் சாதாரணமான பெண் தான். எனக்கும் ஆண்கள் முறையாக அணுக வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அது நிச்சியமாக உன் இடத்தில் எதிர் பார்க்க முடியாது. அந்த அணுகு முறையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் உன்னை விட்டு விலகுகிறேன்

முற்றும்

2 comments:

Chitra said...

அந்த பெண்ணின் எண்ணம், நல்ல ட்விஸ்ட்!

NavaS said...

மச்சி இது உன் சொந்த கதை இல்லைல :)