Wednesday, March 23, 2011

சொர்கமே என்றாலும்


சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?



நேற்று இரவுடன் ஒரு வருட அமெரிக்க வாழ்க்கை முடிந்தது. பெற்றோர் உடன் தங்கி கல்லூரி படிப்பை முடித்து விட்டு, முதல் முதலில் சென்னை அல்லது பெங்களூர் செல்லும் போது கிடைக்கும் அனுபவம் தான், எனக்கும் இங்கு கிடைத்தது. மதுரையில் மக்கள் பழகும் விதம், உணவு முறை, மதுரையின் சுற்றளவு என்று இருக்கும் போது, சென்னையில் அனைத்துமே வேறு விதம். அதை எப்படி பழகி கொண்டோமோ அதே போல் இங்கு இந்த நாட்டிற்கு ஏற்றார் போல் இருக்கும் முறை கற்று கொண்டது. ஒரே ஒரு வித்தியாசம், இங்கு கிடைக்கும் அனுபவம் அதி நவீன தொழில் நுட்பம் அடங்கிய வாழ்க்கை முறை. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ள தான் செய்யும். ஆனால் பழகி கொள்ளலாம். என்ன தான் இங்கு ஆட்டம் போட்டு கொண்டு இருந்தாலும், தமிழ் நாடு எதற்கும் இடு ஆகாது. வெளியில் இருந்து பார்க்கும் நபர்களுக்கு, தெரியாத விஷயம் இங்கு பல உண்டு.  அதி விரைவில் மீண்டும் தமிழ் நாட்டை அடைவேன் என்ற நம்பிக்கையில்/எண்ணத்தில் ஒரு மகிழ்ச்சி.



No comments: