Wednesday, March 03, 2010

சும்மா.. திருப்புரங்குன்றம்...

ஒரு பெரிய வி.ஐ.பி கார் ஒன்று, எனக்கு எதிரில் வந்து கொண்டு இருந்தது... அக்கார் ஒரு அரசியல்வாதியின் கார் என்றும், அதில் உள்ளே இருக்கும் நபர் கண்டிப்பா ஒரு ரவுடி என்றும் பார்த்தாலே தெரிந்து விடும்.. அது போக முன்னால் ஒரு கார். என்னை சுற்றி இருந்த சில பேர் கூட அக்காரையே பார்த்து கொண்டு இருந்தனர். நான் நின்ற இடத்திற்கு அக்கார் வேகமாக வந்துக் கொண்டு இருந்தது. பெரிய காரில் முன் சீட்டில் அமர்ந்து கொண்டு இருக்கும் நபர், கை தொலைப்பேசியில் பேசி கொண்டும்பின்னால் அமர்ந்து இருக்கும் சில பேரிடம் பேசி கொண்டும் வந்து போது அனைவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம்...

அடுத்து என்ன நடக்கும்...

நான் நின்று இடத்திற்கு பக்கத்தில், கார் மெதுவாக நெருங்கி வர வர அனைவரின் பார்வையும் அக்காரின் மீதே...  அந்த ஒரு வினாடியில் கையில் இருந்த தொலைப்பேசியை முன் சீட்டில் இருந்த நபர், தீடிர் என்று தன் மாடியில் வைத்து  இரு கையை எடுத்து எனக்கு அருகில் இருந்த திருப்புரங்குன்றத்தின் நுழைவுவாயிலை கும்பிட்டு அக்கார் என்னை கடந்து சென்றது...என்னை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் அக்கார் போன உடன், தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

மொத்தத்தில் நான் சொல்ல வந்தது, நான் திருப்புரங்குன்றம் கோவிலுக்கு போனது தான்...

இவ்வளவு பெரிய கோவிலில் இந்த அளவு மக்களை நான் பார்த்தே இல்லை... அங்கு அங்கு ஒரு குடும்பம்.. இரண்டு அல்லது நான்கு வயதானவர்கள்..வயதானவர்கள் மட்டும் வணங்கிடும் விதத்தை எதிர்பாரா விதமாக பார்த்தேன்... அவர்கள் கோவிலில் உள்ள ஒரு சில தூண்களை மட்டும் வணங்கி மற்றும் சுற்றி வந்தனர். பல முறை சென்ற நான் அத்தூண்களை கண்டு கொண்டதே இல்லை... அவர்கள் சென்ற உடன், நானும் தூண்களை போய் பார்த்தேன்.. இரண்டு சிலைகள் இருந்தன. அவற்றின் பெயர் தெரியவில்லை...ஆனால் அவற்றை இக்கோவிலில் பார்த்தது கிடையாது... ஆச்சிரியமான விஷயம்...

மூலவரை போய் பார்த்தோமா, மனசார சாமி கும்பிட்டு ஒரு திருப்தியோட வெளியில் வந்தாச்சு...இதுவே சென்னையில் உள்ள எதாச்சு ஒரு பெரிய கோவிலில்ன இது முடியுமா..முடியவே முடியாது...சாமியிர் மொத கொண்டு காச புடுங்கி தின்கிறதுல குறியா இருந்துப்பங்க...

2 comments:

Baskaraganesan said...

It happens with every temple. Not just with Thiruparumkundram. Ok, who is that rowdy VIP??

Priya said...

//மனசார சாமி கும்பிட்டு ஒரு திருப்தியோட வெளியில் வந்தாச்சு...//....நல்லது, அந்த கோவில்லாவது திருப்தியோடு சாமி கும்பிட்டீங்களே!