Monday, September 29, 2008

அறுக்கப்பட்டு கொண்டுஇருக்கும் வேர்கள்

"தலைமுறையாய் தலைமுறையாய்" என்று வயதானவர்கள் கூறுவதை திரைப்படத்தில் பார்த்து இருக்கிறோம். ஏன்! சில சமயம் நமது வீட்டில் கூட கூறுவார்கள். ஆனால் இன்னும் சில காலத்திற்கு பிறகு இதை கேட்க முடியாத சூழ்நிலை இன்று காணபடுகிறது. இதை நினைத்து பல நண்பர்கள் வருத்தப்பட்டத்தை நான் காணமுடிந்தது. இதற்கு காரணம் என்ன?

காதல் திருமணம் என்ற பெயரில் தன்னுடைய சமூகத்தை விட்டுவிட்டு வேறு ஒரு சமூகத்தில் மணம் முடிப்பதால் என்பது தான். மரத்தின் வேர்கள் ஓவ்வொன்றாக பிடுங்க படுவதினால், மரத்தின் வளம் எப்படி பாதிக்க படுகிறதோ, கலப்பு திருமணம் என்ற பெயரில் "குடும்ப பாரம்பரியம்" என்ற வேர்கள் அறுக்கபடுகின்றன. இந்நிலை தொடர்ந்தால் குடும்ப பாரம்பரியம் என்ற தலைமுறை இல்லாமல் போய்விடும்.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், இயக்குனர் மற்றும் நடிகர் திரு. கே. பாக்யாராஜ் அவர்களின் வெற்றி படமான "இது நம்ம ஆளு" திரைபடத்தில் அவர் கூறும் கருத்து, "மனிதன் தான் முக்கியம், சமூகம் தேவை இல்லை". எல்லோரும் ஏற்று கொண்ட கருத்து. நானும் தான். இதில் சொல்லபடாத/அறியபடாத உண்மை ஒன்று உள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி செய்துக் கொண்ட கலப்பு கிருமணத்தினால் கதாநாயகியின் குடும்ப பாரம்பரியம் மற்றும் வம்சவழி என்ற வேர் அங்கு அறுக்கபடுகிறது. இதேநிலை தொடர்ந்தால் அச்சமூகத்தின் நிலை என்ன மற்றும் இதற்கு முடிவு தான் என்ன?

மரவளம் இல்லையென்றால் நாடு செழிக்காது,
குடும்ப பாரம்பரியம் இல்லையென்றால் சமூகம் செழிக்காது,
சமூகவளம் இல்லையென்றால் சமுதாயம் செழிக்காது


எண்ணும்: சிவா (தொழில் நுட்பக்கல்லூரி நண்பர்), நிர்மல்.
எழுத்தும்: நிர்மல்

5 comments:

Anonymous said...

What a social service by Madurai puli. But it will be good if some more useful infos are added.

Anonymous said...

Jaadhigal Illayadi Paapa - endru paadiya baaradhiyaarku ungal badhil ennavo ?

Anonymous said...

ok, i accept this... But how will u make India unique...

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

பாலாஜி,
வெளியில் இருந்து பேசுவார்களுக்கு பாரதியார் பாட்டு,
வீட்டில்/சொந்தபந்ததில்/தன் சமூகத்தில் அடிபட்டு பேசுவார்களுக்கு என் பாட்டு.

Anonymous said...

Appidi Nee Ennada kasta patta sollu.Athaiyum kettu tholaiyarom..


Avaigal Arukkaptum vargal Alla...Eduggapadum Kalaigal....