Tuesday, January 11, 2011

பனி மலர்கள்

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது


இன்று என் மனம் முழுவதும் இந்த வரிகள் தான். நேற்று இரவு பொழிய ஆரம்பித்த வெள்ளை பனி மலர்கள் இன்று காலை வரை பெய்தது. மனம் முழுவதும் எதோ ஒரு புரியாத சந்தோஷம்.


நான் முதல் முதலில் அமெரிக்கா வந்து காலை வைத்த போது, பனி மலர்கள் பொழிவது நின்று எங்கும் பனி போர்வையாக தெரிந்தது. அன்று முதலில் ஏமாற்றபட்டேன். இரண்டு வாரம் முன்பு பத்து வினாடிகள் பொழிந்து காணமல் போனது. இரண்டாவது முறையாகவும் ஏமாற்ற பட்டேன். ஆனால் இன்று என் கனவு பலித்தது போல் இரவு முழுவதும் வெள்ளை பனி புஷ்பங்கள். காலையில் நேராக வெளியில் சென்று, நின்று பனி மலர்களை நானும் தொட்டேன் அதோடு பறிக்கவும் செய்தேன் என்றால் என்னால் நம்ப தான் முடியவில்லை. 

No comments: