Monday, February 01, 2010

கோவா - திரைவிமர்சனம்

வெங்கட் பிரபுவின் 3வது படமும் ஹிட் ஆகி விடும் என்று எண்ணத்தில் செல்பவர்களுக்கு, குறை கண்டிப்பாக இருக்க தான் செய்யும்...அவருடைய குழு உறுப்பினர்கள் வைத்து ஒரு கலாட்ட/மசாலா படத்தை கொடுத்து இருக்கிறார்.

மூன்று வாலிபர்கள் தேனிக்கு அருகில் உள்ள அவருடைய ஒரு கிராமத்தில் இருந்து, ஊர் கட்டுபாடு, கலாச்சாரம் பிடிக்காமல் மதுரைக்கு ஒருவாரம் வருகின்றனர். மதுரையில் கோவாவை பற்றி தெரிந்து கொண்டு, வெளிநாட்டு அழகியை காதலித்து கல்யாணத்தை பண்ணி கொண்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற "லட்சியத்துடன்" கோவாவிற்கு கிளம்பி, அவர்கள் வாழ்க்கையில் திருப்பங்களுடன் ஏற்பட கூடிய முடிவை படு சொதப்பலாக கொடுத்து உள்ளனர். சொல்ல போனால் பிரேம் ஜி அமரனை நம்பி எடுத்த படம் போல் தெரிகிறது....

நடிப்பு என்று பார்த்தல் சம்பத், ஆகாஷ் மற்றும் பிரேம் நடிப்பு கலக்கல்... சம்பத், ஆகாஷ் காதல் தமிழ் நாட்டில் பிரச்சனை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி. சொல்ல பட வேண்டிய முக்கிய நபர் ஒளிபதிவாளர். கோவாவின் அழகை கண் முன்னால் நிறுத்துகிறார்.  முதல் பாகத்தில் தேவை இல்லாமல் பாடல்கள் வந்து கொல்கிறது என்றால், இரண்டாம் பாதியில் தேவை இல்லாமல் பாடல் மற்றும் தொடர் காட்சி அமைப்பு என்று கொல்கிறது... சினேகா முத்தின பழம் என்று திரையில் அருமையாக தெரிகிறது... அதை தவிர செல்வதற்கு ஒன்றும் இல்லை...

மொத்தத்தில் இப்படம் சொதப்பல் என்றாலும், கண்டிப்பாக கோவா சென்று வர வேண்டும் என்ற எண்ணத்தை அதிக படுத்தி இருக்கிறது...

No comments: