Wednesday, April 27, 2011

கோ



ஜீவா, ஒரு தினசரி நாளிதழில் பணிபுரியும் ஒரு புகைப்பட கலைஞர். அவரோடு பணிபுரியும் இரண்டு கதாநாயகிகள். அனைவரும் சேர்ந்து ஒரு புதிய கட்சியை புகழ்ந்து, பழைய கட்சிகளின் மற்றொரு  சின்ன சின்ன விஷயங்களை வெளிகாட்டி தங்கள் வேலைகளை சரியாக செய்கின்றனர். புதிதாக ஆட்சி அமைத்த உடன், இளம் தலைவர் யார் மற்றும் பின்னனி என்ன என்பதே கதை.


 படம் படு வேகமாக செல்கிறது.  அதனால் படம் பார்க்கும் போது அதில் ஒளிந்து இருக்கும் போலியான விஷயங்கள் தெரியவில்லை. படம் முடிந்து பத்து நிமிடம் தான் கழித்து எல்லா உண்மைகளும் தெளிவாக தெரிகிறது. ஒரு நக்சலைட் கும்பல், வங்கியை கொள்ளை அடித்து தப்பிக்கும் காட்சியை, நாயகன் படம் பிடித்தல் என்று கட்டிய விதம் நம்பும் படியாக இல்லை என்பதே நிதர்சனம். பிரகாஷ் ராஜை செருப்படி என்ற விஷயத்தில் தேர்தலில் தோற்கடிக்கபட்டர் என்பதும்,  ஒரு புதிய கட்சி முதல் தேர்தலிலே ஆட்சியை பிடிக்கும் என்பது கனவிலும் நடக்காத விஷயம். அதே போல் நக்சலைட் கும்பலிடம் ஒரு முதல்வர் தனியாக செல்வர் என்பது மிக பெரிய கேள்வி குறி



இப்படி பல குறைகளை கண்டுபிடித்தாலும், படத்தில் பாராட்டப்பட்ட வேண்டிய விஷயம் திரைக்கதையும், ஒளிபதிவளரும் தான். ஒளிபதிவலரின் உழைப்பு பாடல் காட்சிகளிலும், வண்ணமயமான காட்சிகளிலும் காணமுடிகிறது. மொத்தத்தில் இந்த படத்தை பொழுதுபோக்கு படமாக நினைப்பதை தவிர, ஒரு யதார்த்தமான படமாகவோ அல்லது உலகதரம் என்றோ கருத முடியாது.

No comments: