Sunday, March 04, 2012

எல்லாம் நன்மைக்கே

சில நேரங்களில் அனைவருக்கும், ஒரு மாற்றம் தேவைபடுகிறது. மாற்றத்தை சில சமயம் நாமே தேடி கொள்கிறோம். சில பேருக்கு தானாக மற்றவர்களால் கட்டாயமாக தர படுகிறது. ஆனால் அந்த மாற்றத்தை தேர்ந்து எடுத்து விடுவதற்குள் பல கஷ்டங்களை சந்திக்க நேருகிறது. ஆனால் அந்த கஷ்டங்கள் எல்லாம் நமக்கு தெரிய காரணம், நாம் இருந்த வசதியான மற்றும் சூழல் தான். அதை எல்லாம் மீறி, புதிதாக கிடைத்த மாற்றத்தில் கூட, பழைய சூழலை தான் எதிர்பார்க்கிறோம். அங்கும் ஏமாற்றம் தான். சில பேர் மட்டுமே, இந்த ஏமாற்றத்தை சின்ன விஷயமாக எடுத்து கொள்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, எனக்கும் அந்த ருசியை பார்க்கும் தருணம் கிடைத்தது. வரும் நாட்களில் மட்டுமே, அந்த ருசி இனிக்கிறதா அல்லது கசக்கிறதா என்னால் சொல்ல முடியும். இருந்தாலும் எல்லாம் நன்மைக்கே

No comments: