Sunday, December 05, 2010

ரத்த கண்ணீர்

நேற்று எதிர்பாரா விதமாக சேனல் நான்கில் வெளியான தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் செய்த கொடுஞ்செயலை பார்த்தப் போது இதயத்தில் இருந்து ரத்தம் வெளிவந்து விட்டது. தமிழ் மக்களை நிர்வாண படுத்தி, கைகளை காட்டி போட்டு அடித்து, சற்று நேரத்தில் அவர்களை தலைக்கு பின்னால் சுட்டுக் கொல்கின்றனர். அம்மக்கள் தமிழனாக பிறந்த குற்றத்தை தவிர எந்த வித தவறுகளையும் செய்யவில்லை. இதை பார்த்தும் தமிழ் நாட்டில் ஆட்சி மற்றும் அரசியல் நடத்தும் கொள்ளைகாரர்கள், பேசாமல் பதவி மற்றும் பண பேராசை உடன் இன்னுமும் வெளியில் கவலைபடாமல் திரிகின்றனர்.

உலக தமிழ் மக்களே, தமிழ் நாட்டில் இருக்கும் மக்களை இதற்கு எதிராக ஒன்று கூடாமல் செய்து விட்டனர். பணம் மற்றும் பிணம் தின்னும் அரசியல்வாதிகளை நம்பாமல், நீங்களாவது எதாவது செய்யுங்கள். நம் மக்களை காப்பற்றுங்கள்.

No comments: