Wednesday, March 03, 2010

வெயில்???



இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே கூவம் சென்னையிலும் சரி, வைகை மதுரையிலும் சரி வெயில் கொடுமை தாங்க முடியல...இப்பவே இப்படினா, அப்ப ஏப்ரல், மே  மற்றும் ஜூன் மாதத்தில் எப்படி சமாளிக்க போறோமே...

ஐடியா மணி பலர் இருக்காங்க... சுட்ட தணிக்க எதாச்சு ஐடியா சொல்லுங்களேன்

Tuesday, March 02, 2010

தாம்பரம்

2004 ஆண்டு மே மாதம் நான் சென்னைக்கு வந்து முதலில் சென்றது எழும்பூர். அங்கிருந்து மாம்பலம், வில்லிவாக்கம், வடபழனி என்று பல இடங்கள்... நான் பேருந்து ஏறும் போது, தாம்பரம் பேருந்து ஏறுபவர்களை பார்த்து பாவபட்டதுண்டு. அதே போல் அவர்கள் பயண நேரத்தை பார்த்து பரிதாப பட்டதுண்டு.   என்னுடன் தங்கி இருந்தவர்கள், நண்பர்கள் அனைவரும் தாம்பரம் ஒரு கிராமம் என்றும், அது சென்னையில் இல்லை என்றும், ரயில்வே நிலையமே அதற்கு செங்கல்பட்டை போல் தனியாக உள்ளது என்றும் பல காரணங்கள் கூறுவார்.  2006 வரை அந்த பகுதி ஒரு கிராமம் தான்....

ஆனால் இன்றைய நிலைமை...

தாம்பரம் தான் சென்னையின் வாயிற்படி என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்... அது மட்டும் இல்லாமல் தாம்பரம் தான் மைய பகுதி என்றும் கூறுகின்றனர். அதற்கான காரணங்களை சரியாக எடுத்து வைக்கின்றனர்.
  • தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து மற்றும் உள்ளூர் ரயில் வசதி.. 
  • காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டுக்கு சென்னையில் இருந்து செல்ல கஷ்டம்.. ஆனால் தாம்பரத்தில் இருந்து பக்கம்..
  • தாம்பரத்தில் இருந்து மென்பொருள் அலுவலகங்கள் அமைந்து உள்ள வேளசேரி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிக்கு செல்லும் பாதை..
  • சென்னையில் நிதி நகரம் பெரும்பாக்கம் என்ற பகுதியில் அமைகிறது (இதுவும் தாம்பரம் அருகில் தான் உள்ளது).


இதை தவிர இரண்டு முக்கியமான காரணங்களை எடுத்து விடுகின்றனர்.

  1. தாம்பரம் ஒரு கார்ப்பிரேசன் ஆக போகிறது.
  2. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து  தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும், வேளசேரி ரயில் நிலையம் அருகில் அமைய இருக்கும் புது பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படுகிறது என்றும் (பேருந்துகள் பல்லாவரம் ரிங் ரோடு வழியாக தாம்பரத்தை பிடிக்கும்) என்றும் கூறுகின்றனர்...


இந்த இரண்டு விஷயத்தில் இரண்டாவது மட்டும் நம்பும் படியாக இல்லை..

இப்படியே செங்கல்பட்டு வரையில் உள்ள அனைத்து ஏரியாக்களையும் எதாவது ஒரு வளர்ச்சி பணி சொல்லி, அந்த பகுதிகளை வளர்த்து விடுகின்றனர்..ஆக மொத்தத்தில் சென்னை மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் நன்றாக வளர்ச்சி அடைகின்றன.

மற்ற தமிழக பகுதிகளுக்கு அரசு தருவது திருநெல்வேலி அல்வா தான். சென்னை மற்றும் தாம்பரம் மட்டுமே தமிழகம் இல்லை என்று அரசாங்கம் உணரும் வேளையில் மட்டும் தான் தென்தமிழக மக்களுக்கு நிஜ வெளிச்சம்

Monday, March 01, 2010

விண்ணை தாண்டி வருவாயா – திரைவிமர்சனம்

இந்த படத்தை பார்க்க ஆவலை தூண்டியதே இரண்டு விஷயங்கள். ஒன்று கதாநாயகி திரிஷா மற்றொன்று இசைப்புயல். இரண்டு விஷயங்களும் என்னை ஏமாற்றவில்லை என்று தான் கூற வேண்டும். திரிஷாவை அவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள்.. அதே போல் ஒரு நல்ல நடிகனை திரைப்பட உலகத்திற்கு அறிமுகபடுத்தி உள்ளது (தமிழ் படம் பாத்துட்டறு என்னவோ :)).

பொதுவாக கவுதம் மேனனின் கதாநாயர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பெண்ணை பார்த்ததும் "what a woman ?" என்று காதலில் விழுந்து துள்ளி குதிப்பார்கள். பக்கத்தில் இருக்கும் சுவர், கதவு எதிலாவது சாய்ந்து கொள்வார்கள். நெஞ்சில் குத்தி கொள்வார்கள். கவிதையாய் காதலை சொல்வார்கள். 'காதலிக்காக சாகலாம்' என்பார்கள். காதலி நினைவில் கண்ணீர் விட்டு கரைவார்கள். Foul language பேசுவார்கள்.

கதாநாயகி, தன்னிம்பிக்கையும் தெளிவுமாய் இருப்பாள். தனக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பாள். இதிலும் அச்சு அசலாக தன்னுடைய hero/heroin பார்முலாவை மாற்ற வில்லை அவர். சொந்த கதை, சொந்த கதை என்று ஒரே மாதிரி பீலிங் விடுவதை கொஞ்சம் குறைங்க கவுதம்!

மின்னலே படத்தில், ரீமா சென் மாதவனை பார்த்து, "நீ அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் தானே வருவதாக சொன்னாய்? இப்போ எப்டி வந்த?" என்பார். அதற்கு மாதவன், "flight காலியா இருந்துச்சு, அதன் ஏறி வந்துட்டேன்" என்று சொல்வார். இந்த படத்திலும் இந்த மாதிரி மெல்லிய நகைச்சுவை வசனங்கள் உண்டு. -"அவனவன் காதலுக்காக America போறான்...நான் ஆலப்புழா போக மாட்டேனா??" என்று சிம்பு சொல்றார். "நம்ம friends ஆக இருக்கலாம்" என்று த்ரிஷா சொன்னதும், பின்னணியில் ரஹ்மான் 'முஸ்தபா முஸ்தபா' ட்யூன் போடறார்.

படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் மனோஜ் (ஈரம் படத்தின் ஒளிப்பதிவாளர்)... படத்தில் ஒரு இடத்தில் கூட வறட்சியான காட்சிகளை காண முடியாது. அனைத்து இடங்களும் கண்ணுக்கு குளிர்ச்சியான நிறங்கள் மற்றும் அமைப்புகள்.... பாரட்டபடவேண்டியவர்.  படத்தின் நிறைய காட்சிகள் கோவாவிலும் கேரளாவிலும் எடுக்க பட்டு இருப்பதால், குளிர்ச்சியாக இருக்கிறது.

சீராக போகும் கதை,வழக்கமான பாதையில் தான் பயணிக்கிறது என்றாலும் படத்தின் முடிவு சற்று அதிர்வை ஏற்படுத்தும் twisty யான முடிவு தான். சில இடங்களில் காட்சியமைப்புகள் விறுவிறுப்பாக இல்லாததால் நமக்கு சற்று தளர்வாக இருக்கிறது. இந்த தளர்வே படத்தில் எத்தனை முடிவு காட்சிகள் என்று நம்மை என்ன வைக்கிறது.   மதுரையில் மக்கள் படம் முடியும் முன்பே கொத்து கொத்தாக வெளியில் செல்வதை காண முடிகிறது.  இப்படம் A சென்டர் என்று அழைக்கபடும் இடத்தில் மட்டுமே வெற்றி...

Friday, February 19, 2010

கொடைக்கானல்

என்ன தான் நம்ம சென்னை, மதுரைன்னு போய் வந்துக் கொண்டு இருந்தாலும், இரண்டிலும் வெயில் கொடுமை தாங்க முடியாது. மனதிற்கு இதமாக, குளிராக இருக்க மதுரை மச்சானுக்கு நியாபகம் வருவது ஒரே ஒரு இடம் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மட்டும் தான்.. மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் 1:30 மணி நேரம்தான்.. அரசுப் பேருந்தில் 3 மணி நேரம் தான். மதுரையில் இருக்கும் போது 3 மாதத்தில் ஒரு முறை கொடை பயணம் என்று இருந்த நான், சென்னையில் இருக்கின்றேன் என்ற ஒரே ஒரு காரணத்தினால் கொடை சென்று ஒரு வருடம் மேல் ஆகி விட்டது. இந்த கொடைக்கானலைப் பற்றிய வரலாறு நான் எங்கேயோ படித்தது உங்களுக்காக இங்கே (தெரியாதவர்களுக்கு மட்டும்)... கொடைக்கானல் எப்படி இருக்கும் என்று கேட்பவர்கள், தயவு செய்து மன்னிக்கவும்...

 

கொடைக்கானல் என்ற அற்புதமான கோடை வாசஸ்தலத்தை கண்டுபிடித்தது ஆங்கிலேயர்கள். இந்திய வெயிலில் நொந்து போயிருந்த ஆங்கிலேயர்கள், கோடையில் "ஒண்டிக்கொள்ள' ஒரு இடத்தை தேடினர். 1822ல் பிரிட்டிஷ் ராணுவம், முதன் முதலாக கொடைக்கானல் மலையை சர்வே செய்தது. 1845ல் மலை பயிர்களை பயிரிடுவதில் ஆர்வம் கொண்ட ஒரு அமெரிக்க குழு, கொடைக்கானலை கண்டுபிடித்தது. முதன்முதலாக பெரியகுளம் வழியாக இவர்கள், கால்நடையாக கொடைக்கானலை அடைந்தனர். அதே ஆண்டு சவேரா லீவெஞ்ச் என்ற அதிகாரி, தற்போது ஏரி உள்ள இடத்தில் இருந்த மரங்களை வெட்ட வைத்து, செயற்கையான ஏரியை உருவாக்கினார். வேலைக்காக சமவெளியில் இருந்து தமிழர்களை மலைக்கு அழைத்துச் சென்றனர். மலையில் வாழ்பவர்களுக்கு எரிபொருளாக நிறைய மரங்கள் தேவைப்பட்டன.

 

கொடைக்கானல் மலையின் அமைப்புப்படி, மேடான பகுதிகளில் புல்வெளிகளும், தாழ்வான பகுதிகளில் சோலை மரங்களும் (சோலா காடுகள் என அழைக்கப்படும் இவை தான், உண்மையான காடுகள்) இருந்தன. சவேரா லீவெஞ்ச், மேட்டுப்பகுதிகளில் இருந்த புல்வெளிகளை அழித்து, தென் ஆப்ரிக்காவில் இருந்து விறகிற்காக யூகலிப்டஸ், பைன், சவுக்கு விதைகளை விமானம் மூலம் துவச் செய்தார். 1914 வரை கொடைக்கானலுக்கு சாலை வசதி இல்லை. பெரியகுளம் வழியாக நடந்தே வெள்ளையர்கள் வந்து சென்றனர். 1890ல் போட் கிளப் துவக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் தான், 1914ல் முதன்முதலாக கொடைக்கானலுக்கு கார் கொண்டு வந்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பல இடங்களை தங்களிடம் வேலை பார்த்த இந்தியர்களுக்கும், கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் கொடுத்து விட்டு ஆங்கிலேயர்கள் சென்றனர்.

Monday, February 01, 2010

கோவா - திரைவிமர்சனம்

வெங்கட் பிரபுவின் 3வது படமும் ஹிட் ஆகி விடும் என்று எண்ணத்தில் செல்பவர்களுக்கு, குறை கண்டிப்பாக இருக்க தான் செய்யும்...அவருடைய குழு உறுப்பினர்கள் வைத்து ஒரு கலாட்ட/மசாலா படத்தை கொடுத்து இருக்கிறார்.

மூன்று வாலிபர்கள் தேனிக்கு அருகில் உள்ள அவருடைய ஒரு கிராமத்தில் இருந்து, ஊர் கட்டுபாடு, கலாச்சாரம் பிடிக்காமல் மதுரைக்கு ஒருவாரம் வருகின்றனர். மதுரையில் கோவாவை பற்றி தெரிந்து கொண்டு, வெளிநாட்டு அழகியை காதலித்து கல்யாணத்தை பண்ணி கொண்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற "லட்சியத்துடன்" கோவாவிற்கு கிளம்பி, அவர்கள் வாழ்க்கையில் திருப்பங்களுடன் ஏற்பட கூடிய முடிவை படு சொதப்பலாக கொடுத்து உள்ளனர். சொல்ல போனால் பிரேம் ஜி அமரனை நம்பி எடுத்த படம் போல் தெரிகிறது....

நடிப்பு என்று பார்த்தல் சம்பத், ஆகாஷ் மற்றும் பிரேம் நடிப்பு கலக்கல்... சம்பத், ஆகாஷ் காதல் தமிழ் நாட்டில் பிரச்சனை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி. சொல்ல பட வேண்டிய முக்கிய நபர் ஒளிபதிவாளர். கோவாவின் அழகை கண் முன்னால் நிறுத்துகிறார்.  முதல் பாகத்தில் தேவை இல்லாமல் பாடல்கள் வந்து கொல்கிறது என்றால், இரண்டாம் பாதியில் தேவை இல்லாமல் பாடல் மற்றும் தொடர் காட்சி அமைப்பு என்று கொல்கிறது... சினேகா முத்தின பழம் என்று திரையில் அருமையாக தெரிகிறது... அதை தவிர செல்வதற்கு ஒன்றும் இல்லை...

மொத்தத்தில் இப்படம் சொதப்பல் என்றாலும், கண்டிப்பாக கோவா சென்று வர வேண்டும் என்ற எண்ணத்தை அதிக படுத்தி இருக்கிறது...